தமிழ் சினிமாவில் வசூல் நாயகன் என அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். விஜய் நடிக்கும் படங்கள் என்றாலே மாஸ் ஹிட் என்கிற நிலை தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படத்திற்கு பிறகு முழுவதுமாக சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார் விஜய். இதற்கு அடுத்து தொடர்ந்து அரசியலில் அதிக ஆர்வம் காட்ட இருக்கிறார் விஜய்.
இந்த நிலையில் இத்தனை வயது ஆன பிறகும் கூட விஜய் தொடர்ந்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். அதனால்தான் அவரது வயது வெளியில் பெரிதாக தெரியாமல் இருக்கிறது.
vijay
மேலும் உடல் எடையும் அதிகரிக்காமல் இருந்து வருகிறது. இதற்கு நடுவே விஜய்க்கு முடி உதிர்வு இருக்கிறது என்றும் அவர் செயற்கை முடி வைத்துள்ளார் என்றும் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இது குறித்து வலைப்பேச்சு அந்தணன் ஒரு சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறும்போது விஜய்க்கு சர்க்கரை பிரச்சனை இருப்பதாகவும் அதனால்தான் அவருக்கு முடி உதிர்வு ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது.
போன வருட துவக்கத்திலேயே நடிகர் விஜய் அரசியலுக்குள் எண்ட்ரி ஆகி தனது கட்சியின் பெயரை மக்களுக்கு அறிவித்தார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளாக அரசியலில் தொடர்ந்து தனது முன்னேற்றத்தை நோக்கி அவர் பயணித்து வருகிறார்.
இதற்கு நடுவே தனது திரை வாழ்க்கையை பார்க்க முடியாது என்பதால் திரைத்துறையில் இருந்து விலக இருப்பதாக அறிவித்தார். அதற்கு பிறகு அவரது நடிப்பில் கோட் திரைப்படம் வெளியானது. கோட் திரைப்படத்திற்கு பிறகு விஜய் ஒரு திரைப்படம்தான் நடிப்பார் என கூறியிருந்தார்.
அந்த வகையில் அடுத்து அவர் நடித்து வரும் திரைப்படம்தான் ஜனநாயகன். இந்த திரைப்படம் அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என தெரிகிறது. எனவே இந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.
இதற்கு நடுவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது விஜய்யை வைத்து மாஸ்டர் 2 மற்றும் லியோ 2 இயக்க ஆசை உள்ளதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஜனநாயகன் விஜய்க்கு கடைசி படம் கிடையாது என ரசிகர்கள் வதந்திகளை பரப்பிவிட்டு வந்தனர்.
ஆனால் இந்த வதந்திகளை கண்டுக்கொள்ளாத விஜய் தொடர்ந்து ஜனநாயகன் திரைப்படம் மீதே கவனம் செலுத்தி வருகிறார். எனவே இதன் மூலம் ஜனநாயகன் தான் விஜய்யின் கடைசி படம் என தெளிவாகிறது.
நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம்தான் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏற்கனவே வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம்.
இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்துதான் இவருக்கு நடிகர் அஜித் வாய்ப்பை கொடுத்தார். இந்த நிலையில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் 10 நாட்களை கடந்த நிலையில் தற்சமயம் 200 கோடிக்கும் அதிகமாக ஓடி வெற்றியை கொடுத்துள்ளது.
ஆனால் விஜய் படத்தோடு ஒப்பிடும்போது எப்போதுமே அந்த அளவிற்கான வெற்றியை அஜித் திரைப்படங்கள் கொடுப்பதில்லை. அந்த வகையில் குட் பேட் அக்லி திரைப்படமும் பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை. இந்த நிலையில் இதுக்குறித்து சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.
அவர் கூறும்போது உண்மையில் விஜய்யை விட அஜித்துக்கு ரசிகர்கள் குறைவுதான். தமிழ் நாட்டில் வேண்டுமானால் அஜித் ரசிகர்கள் அதிகமாக இருக்கலாம். ஆனால் ஆந்திரா கேரளாவில் கூட விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர்.
அதே போல வெளிநாடுகளிலும் விஜய்க்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனால்தான் விஜய் படம் வெளியான உடனேயே பெரும் வெற்றியை கொடுத்து விடுகிறது என்கிறார் பிஸ்மி.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது முதலே அவரது இறுதி படம் குறித்த ஆவல் என்பது அதிகரிக்க துவங்கியது. இந்த நிலையில் விஜய்யின் கடைசி படமாக உருவாகி வருகிறது ஜனநாயகன் திரைப்படம். முழுக்க முழுக்க அரசியல் பின்புலத்தை கொண்ட ஒரு திரைப்படமாக இந்த படம் உள்ளது.
இயக்குனர் ஹெச்.வினோத் தான் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஹெச். வினோத்தை பொறுத்தவரை அவர் இயக்கும் திரைப்படங்களில் எல்லாம் அரசியல் சார்ந்த பல விஷயங்களை வெளிப்படையாக கூறுவதை பார்க்க முடியும்.
இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படம் எல்லா வகையிலும் நல்ல விலைக்கு விற்பனை ஆகி வருகிறது. இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஏற்கனவே சன் டிவி வாங்கியுள்ளது. 68 கோடிக்கு சாட்டிலைட் உரிமம் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது.
அமேசான் ஓ.டி.டி தளம் இந்த படத்தை 121 கோடிக்கு வாங்கியுள்ளது. இப்படியாக படத்தின் படப்பிடிப்புகள் முடிவதற்கு முன்பே கிட்டத்தட்ட 300 கோடிக்கு விற்பனையாகியுள்ளது இந்த திரைப்படம். இந்த நிலையில் படத்தில் மொத்தம் 40 பஞ்ச் டயலாக்குகள் இருக்கிறதாம்.
ஓட்டு அரசியலை பேசும் படமாக இது இருப்பதாகவும் விஜய் இதில் தேர்தல் கமிஷன் அதிகாரியாக வருவதாகவும் சில தகவல்கள் உள்ளன. விஜய்யின் அரசியல் வருகைக்கு இந்த படம் அதிக உதவியாக இருக்கும் என பேச்சுக்கள் இருக்கின்றன.
விஜய்யின் கட்சியான தா.வெ.க கட்சியின் பொதுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில் விஜய் பேசிய விஷயங்கள் எல்லாம் இப்பொழுது அதிகமாக ட்ரெண்ட் ஆக துவங்கியிருக்கிறது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதலே அவரது அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவர் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட சமூக வலைதளங்களில் பெரிதாக பரவுகின்றன.
இந்நிலையில் நேற்று தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டம் நடந்தது. பல காலங்களாகவே விஜய் கட்சி துவங்கியது முதலே எந்த ஒரு கட்சியின் பெயரையும் அரசியல் தலைவர்களின் பெயர்களையும் நேரடியாக கூறுவதே கிடையாது என்பது ஒரு குற்றச்சாட்டாக இருந்தது.
இந்த நிலையில் இது குறித்து விஜய் இந்த பொதுக்கூட்டத்தில் பேசும்பொழுது முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பா.ஜ.க கட்சியை குறிப்பிட்டு பேசியிருந்தார் இந்த நிலையில் அவர் ஒன்றிய அரசு குறித்து பேசும்பொழுது தமிழ்நாடு ஒரு புரட்சிகரமான மாநிலம்.
தமிழ்நாட்டு மக்களை நீங்கள் கொஞ்சம் கேர்ஃபுல்லாக தான் கேண்டில் செய்ய வேண்டும் எங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்க மாட்டேன் என்கிறீர்கள் புதிய கல்விக் கொள்கையை எங்கள் மீது திணிக்கிறீர்கள் நீங்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கூறும் பொழுதே உங்களுடைய நோக்கம் என்னவென்பது தெரிந்து விட்டது என்று பேசியிருக்கிறார் விஜய்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்த சில மாதங்களிலேயே கட்சியை துவங்கிவிட்டார். தமிழக வெற்றி கழகம் என்கிற தன்னுடைய கட்சிக்கான கொடியை அறிவித்தார் விஜய். அதில் இருந்து விஜய் மீது மக்களின் எதிர்பார்ப்பு என்பது அதிகரித்து வருகிறது.
அரசியலுக்கு வருகிற காரணத்தால் முற்றிலுமாக சினிமாவில் இருந்து விலக இருக்கிறார் விஜய். இந்த நிலையில் விஜய்யின் கொள்கைகள் என்பது தமிழ் தேசியம் மற்றும் திராவிடம் கருத்துகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்த நிலையில் தொடர்ந்து திமுக விற்கு எதிராகதான் விஜய் அதிகமாக பேசி வருகிறார்.
கட்சி மாநாடு துவங்கியதில் இருந்தே விஜய்யின் பேச்சுக்கள் அதிகப்பட்சம் ஆளுங்கட்சியை தாக்கும் விதமாகதான் இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் என்ன பேசினாலும் அதுக்குறித்து தி.மு.கவிடம் கருத்து கேட்பதை பத்திரிக்கையாளர்கள் வேலையாக வைத்துள்ளனர்.
vijay tvk
இந்த நிலையில் சமீபத்தில் விஜய் பேசியது குறித்து உதயநிதியிடம் கேள்வி கேட்கப்பட்டது. விஜய் ஓட்டுக்கு பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிக்க சொல்கிறார் அது பற்றி உங்கள் கருத்து என்ன என கேட்டனர். அதற்கு பதிலளித்த உதயநிதி அவர் சரியாகதானே சொல்லி இருக்கார். அதுப்பற்றி உங்களுக்கு ஏதும் பிரச்சனையா? என கேட்டார்.
பிறகு பத்திரிக்கையாளர்கள் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேட்டனர். அதற்கு பதிலளித்த உதயநிதி இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எல்லோருக்கும் அதற்கு உரிமை உள்ளது என பதிலளித்திருந்தார்.
தளபதி விஜய்யின் அரசியல் வருகை என்பது தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக இருந்து வருகிறது. உலகம் முழுக்கவே நடிகர்கள்தான் அரசியல் வரலாற்றில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கூட நடிகர் எம்.ஜி.ஆர் அப்படிதான் அரசியலுக்கு வந்தார். எம்.ஜி.ஆருக்கு பிறகு அதே மாதிரி டாப் நடிகராக இருந்து மக்கள் செல்வாக்கோடு அரசியலுக்கு வருபவராக விஜய் இருந்து வருகிறார்.
விஜய் ஒரு நடிகர் என்பதால் அவர் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட மக்கள் மத்தியில் அதிக பிரபலமாகி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் விஜய் பரந்தூரில் மக்கள் விமான நிலையம் வருவதற்கு எதிராக போராடி வருவதற்கு ஆதரவு தெரிவித்து அங்கு சென்றுள்ளார்.
vijay
அங்கு விஜய் பேசிய விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் அதிக வைரலானது. இந்த நிலையில் அடுத்ததாக வேங்கை வயலுக்கு செல்ல இருப்பதாக அறிவித்தார் நடிகர் விஜய். வேங்கை வயல் கிராமத்தில் குடி தண்ணீரில் மலம் கலந்த விவகாரம் இன்னமும் நிலுவையில்தான் இருந்து வந்தது.
இந்த நிலையில் இதுக்குறித்து விஜய் மக்களிடம் பேச உள்ளதாக கூறினார். இதற்கு நடுவே தற்சமயம் வேங்கை வயலில் மலம் கலந்த நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
விஜய் வேங்கை வயல் வருகிறேன் என கூறியவுடனேயே துரிதமாக இந்த செயல்பாடுகள் நடந்துள்ளதாக ரசிகர்கள் இதுக்குறித்து கருத்து தெரிவிக்கின்றனர்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த அதே சமயத்தில் மக்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் விஷயத்தையும் அறிவித்தார். அரசியலுக்கு வந்த பிறகு அவர் மொத்தமாக சினிமாவை விட்டு விலக போவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்சமயம் அவர் நடித்து வரும் தளபதி 69 திரைப்படம்தான் அவரது இறுதி திரைப்படம் என கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் ஹெச். வினோத் இயக்கி வருகிறார். இதற்கு பிறகு விஜய் படம் எல்லாம் நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.
ஆனாலும் சினிமா வட்டாரத்தில் வேறு விதமாக பேச்சுக்கள் இருக்கின்றன. அதாவது விஜய் பிளான் பி ஒன்று வைத்துள்ளார். அதன்படி 2026 தேர்தலில் அவர் வெற்றிபெற்று முதலமைச்சர் ஆகிறார் என்றால் கண்டிப்பாக பிறகு சினிமாவுக்கு வர மாட்டார்.
vijay tvk
ஆனால் அதற்கு பதிலாக தோல்வியடைந்தால் சினிமாவில் நடித்துக்கொண்டே அரசியல் பணிகளிலும் ஈடுபாடு காட்டுவார் என பேசப்பட்டு வருகிறது. ஆனால் விஜய் தொடர்ந்து ஆளுங்கட்சிகளை விமர்சித்து பேசி வருகிறார். அது அவரது திரை வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது எனவும் பேசப்படுகிறது.
இதற்கு நடுவே நடிகர் விஜய்க்கு மீண்டும் சினிமாவிற்கு வருவதற்கு ப்ளான் உள்ளது என்பதை உறுதி செய்துள்ளார். சினிமா பிரபலம் சித்ரா லெட்சுமணன். இந்த செய்தி இப்போது வைரலாகி வருகிறது.
ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் இருந்து பிறகு சில காலங்களிலேயே அடையாளம் தெரியாமல் காணாமல் போனவர்தான் நடிகர் பிரசாந்த். நடிகர் பிரசாந்த் பொருத்தவரை அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான பொழுது அவருக்கு மிகவும் குறைவான வயது என்று கூறப்படுகிறது.
17 வயதிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்தார் நடிகர் பிரசாந்த் மருத்துவ படிப்பிற்காக செல்ல இருந்த பிரசாந்திற்கு தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததை அடுத்து தொடர்ந்து நடிகராக மாறினார் இல்லையென்றால் இந்நேரம் மருத்துவராகதான் இருந்திருப்பார்.
சாக்லேட் பாய்:
சாக்லேட் பாய் என்று அழைக்கப்பட்ட பிரசாந்தோடு சேர்ந்து நடிக்க இளம் நடிகைகள் பலரும் விருப்பம் தெரிவித்து வந்தனர். அதற்கு முக்கிய காரணம் அவரது திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு அதற்கு பிறகு அதிகமாக வரவேற்புகள் கிடைத்து வந்தன.
Prashanth at Saahasam Audio Launch
ஒரு சமயத்தில் நடிகர் அப்பாஸ் மாதிரியான இளம் நடிகர்களை எல்லாம் ஓரம் தள்ளிவிட்டு தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தார் நடிகர் பிரசாந்த். முக்கியமாக அவர் நடித்த ஜீன்ஸ் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் தமிழில் பெரும் வெற்றியை கொடுத்தது.
அப்போது இருந்த விஜய் அஜித் மாதிரியான நடிகர்களே நடிகர் பிரசாந்தை பார்த்து பயந்தனர் என்றும் ஒரு பேச்சு உண்டு. அந்த அளவிற்கு மார்க்கெட் உயர்ந்த பிரசாந்த் பிறகு கதை தேர்ந்தெடுப்பதில் கோட்டை விட்டதை அடுத்து நிறைய பட வாய்ப்புகளை இழந்தார்.
ரீ எண்ட்ரி:
மேலும் அவரது திருமண வாழ்க்கையும் சுமுகமாக அமையவில்லை அதனை தொடர்ந்து திரை துறையில் கவனம் செலுத்த முடியாமல் சில நாட்கள் விலகி இருந்தார் பிரசாந்த். தற்சமயம் மீண்டும் திரைத்துறையில் ரீ எண்ட்ரி கொடுத்து வருகிறார்.
அவரது திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. அவரது நடிப்பில் அந்தகன் என்கிற படம் அவர் கதாநாயகனாக நடித்து வெளிவர இருக்கிறது. தொடர்ந்து மீண்டும் திரைத்துறையில் ஒரு கலக்கு கலக்குவார் பிரசாந்த் என்று நம்பப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் பிரசாந்திடம் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் உங்களுடைய ஆதரவு எந்த கட்சிக்கு என்று கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த பிரசாந்த் கூறும் பொழுது 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் என்னுடைய அரசியல் பயணம் குறித்து அப்போது பேசிக் கொள்ளலாம்.
அந்த தேர்தலை பொருத்தவரைக்கும் மக்களுக்கு நல்லது செய்பவர்களுக்கு தான் நான் ஆதரவு கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார் பிரசாந்த் தற்சமயம் இவர் கோட் திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார் மேலும் விஜயின் நெருங்கிய நண்பராக இருப்பதால் அவர் கண்டிப்பாக விஜய்க்கு தான் ஆதரவளிப்பார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
அரசியல் கட்சியை துவங்கியது முதலே பொதுமக்களுக்கு நன்மைகள் செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் விஜய்.
போன வருடம் முதலே அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர் மாணவிகளுக்கு உதவித்தொகை மற்றும் பரிசுகளை வழங்குவதை ஒரு விஷயமாக செய்து வருகிறார் விஜய்.
இது அவர்களை ஊக்கப்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களின் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும் என்பது அவரது கருத்தாக இருக்கிறது இது பலராலும் அப்போதே பாராட்டப்பட்ட ஒரு விஷயமாக இருந்தது என்றாலும் அப்பொழுது சூர்யா இதற்கு எதிர்மறையான விமர்சனம் ஒன்றை முன் வைத்திருந்தார்.
விஜய் செய்யும் உதவி:
அவருடைய அகரம் அறக்கட்டளை மூலமாக அவர் தொடர்ந்து பல மாணவர்களுக்கு உதவி வருகிறார் என்பது பலரும் அறிந்த விஷயமே அவரது குறித்து கூறும் பொழுது அதிக மதிப்பெண் எடுத்தவர்களை விட நலிவடைந்தவர்களுக்கு தான் உதவிகள் தேவையாக இருக்கிறது என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் இந்த வருடம் இரண்டாவது ஆண்டாக மாணவ மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார் விஜய். இந்த விழா இரண்டு கட்டங்களாக நடைபெற்றுக் கொண்டது வந்தது. அங்கே அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் மாணவிகள் அவர்கள் பெற்றோருடன் சேர்ந்து விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு வாய்ப்பு இருந்தது.
மாணவியிடம் சர்ச்சை:
போன வருடமும் இதே போல நிறைய பேர் போட்டோ எடுத்துக் கொண்டனர் இந்த நிலையில் ஒரு மாணவிக்கு சால்வையை போர்த்திய விஜய் அந்த மாணவியின் தோளில் கை போட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்.
அப்பொழுது அந்த மாணவி விஜய்யை அழைத்து அவரது காதில் ஏதோ கூறிய பிறகு அவர் உடனே அந்த பெண்ணின் தோளிலிருந்து தனது கையை எடுத்துக் கொண்டார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இருந்தாலும் விஜய் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்தப்படி அந்த போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார். கண்டிப்பாக அந்த பெண் தோளிலிருந்து விஜயின் கையை எடுக்க சொல்லி இருப்பார்.
அதனால்தான் விஜய் உடனே கையை எடுத்து இருக்கிறார் என்று இது குறித்து பேச்சுக்கள் எழ தொடங்கி இருக்கின்றன மேலும் நெட்டிசன்களை இது குறித்து கேட்கும் பொழுது ஏன் விஜய் இப்படி மாணவிகளின் தோளில் கையை போட வேண்டும் என்றும் ஒரு பக்கம் கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
அதே சமயம் இது நட்பு ரீதியாக சிறுமி என்று விஜய் தோளில் கையை போட்டதை பலரும் திரித்து பேசுகின்றனர் என்கின்றனர் தளபதி ரசிகர்கள். பொதுவாகவே ரசிகர்கள் தோளில் கை போட்டு பேசுவதை விஜய் வாடிக்கையாகதான் கொண்டுள்ளார். மேலும் அந்த பெண் தோளில் இருந்து கையை எடுக்க சொன்னார் என கூறியதாக கூறுவதும் திரிக்கப்பட்டதே என அவர்கள் கூறுகின்றனர்.
லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் பல நாடுகளில் வெகு நாட்களாக நடந்து வருகின்றன. இந்த திரைப்படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
வெகு காலங்களுக்கு பிறகு விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதை கையில் எடுக்கிறார் என்பதே பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. இந்த நிலையில் அவருடன் பைரவா மற்றும் கத்தி ஆகிய இரண்டு படங்களில் நடிகர் சதீஸ் காமெடியனாக நடித்திருந்தார்.
உண்மையிலேயே அவர்கள் இருவருக்குமான காமெடி காம்போ நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருந்தது. ஆனால் ஏனோ அதற்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து படம் நடிக்கவே இல்லை. இந்த நிலையில் ஒரு பேட்டியில் சதீஸிடம் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் என கேட்டால் யாரை கூறுவீர்கள் என கேட்டனர்.
அதற்கு பதிலளித்த சதீஸ் என்னை பொறுத்தவரை நடிகர் விஜய்யைதான் நான் சிறந்த நடிகராக நினைக்கிறேன். ஏனெனில் தமிழ் சினிமாவில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் பிடித்த நடிகராக விஜய் இருக்கிறார். இவர்கள் எல்லாம் சிறந்த நடிகர்கள் என கூறும் நடிகர்களுக்கு கூட இப்படியான ரசிக பட்டாளம் உள்ளதா என தெரியவில்லை.
கிட்டத்தட்ட மூன்று தலைமுறையினருக்கும் பிடித்த நடிகராக விஜய் இருக்கிறார் என்கிறா நடிகர் சதீஸ். உண்மையில் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகராக கமல்ஹாசன் தான் பார்க்கப்படுகிறார். அப்படியானால் சதீஸ் அவரைதான் கூறுகிறாரா என இதுக்குறித்து கேள்வி எழுப்புகின்றனர் ரசிகர்கள்.
விஜய் கட்சி துவங்கியது முதலே நானும் கட்சி துவங்க போகிறேன் என கூறி வருகிறார் நடிகர் விஷால். ஆரம்பம் முதலே அவர் செய்யும் செயல்கள் விஜய்யை பார்த்து செய்வதாகவே பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அதற்கு தகுந்தாற் போல ஒரு சம்பவம் தற்சமயம் நடந்துள்ளது.
விஷால் ஆரம்பம் முதலே அரசியல் மீது ஆர்வம் கொண்டவர் என்பது பலரும் அறிந்த விஷயமே தொடர்ந்து அவர் அரசியல் சார்ந்து பேசுவதையும் பதிவிடுவதையும் வேலையாக கொண்டுள்ளார். ஆனால் குறிப்பிட்டு அவர் செய்யும் நிறைய விஷயங்கள் விஜய்யை காபி அடிப்பதாகவே உள்ளது.
உதாரணமாக அவரது பட்டமே புரட்சி தளபதி என்றுதான் வைத்திருக்கிறார். தளபதி என்கிற விஜய்யின் பட்டத்தை காபி அடித்துதான் அதை வைத்துள்ளார் என பேச்சுக்கள் இருந்தன. அதற்கு தகுந்தாற் போல போன தேர்தலின் போது நடிகர் விஜய் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டது அனைவரும் அறிந்த விஷயமே.
அந்த சமயத்தில் அது பெரும் அலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதை அப்படியே காபி அடித்து விஷாலும் சைக்கிளில் ஓட்டு போட வந்துள்ளார். ஆனால் விஜய்க்கு ட்ரெண்டிங் ஆன அளவிற்கு அது விஷாலுக்கு ட்ரெண்டிங் ஆகவில்லை.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips