இரவு அவரை விஜய் மாதிரி நினைச்சுக்கிட்டு அப்படி பண்ணுவேன்..! வெட்கம் விட்டு ரகசியம் உடைத்த நடிகை மானசா..!

சின்னத்திரையில் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஆல்யா மானசா. பொதுவாக மாடல் துறையில் இருக்கும் பெண்களுக்குதான் நடிகையாக நடிப்பதற்கும், தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன.

அதே போலவே நடிகை ஆல்யா மானசாவும் முதலில் மாடல் துறையில்தான் இருந்து வந்தார். அதன் மூலமாக அவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது. முதலில் ராஜா ராணி என்னும் சீரியலின் மூலமாக தமிழ் சினிமா சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஆல்யா மானசா.

அதனை தொடர்ந்து அந்த தொடரில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவர் மீது ஆல்யாவிற்கு காதல் உண்டானது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் திருமணமானது. இருவருமே நாடக துறையில் தொடர்ந்து நடித்து வருகின்றனர். தற்சமயம் இருவருமே சன் டிவியில்தான் நடித்து வருகின்றனர்.

ஆனால் வெவ்வேறு சீரியல்களில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவரிடம் பேசும்போது உங்கள் கணவர் தூங்கும்போது நீங்கள் அவரிடம் எண்ண பண்ணுவீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆல்யா மானசா எப்போதும் நாங்கள் படப்பிடிப்பில் இருப்பதால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதே அரிதாகிவிட்டது.

எனவே இரவு தூங்கும்போது அவரது அழகை ரசித்துக்கொண்டிருப்பேன். பிறகு அவருக்கு ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு நகர்ந்துவிடுவேன் என கூறியுள்ளார். மேலும் சஞ்சீவ் தளபதி விஜய் ரசிகர் என்பதால் அவரை சிம்பாலிக்காக விஜய்யாகவே நான் நினைத்து கொள்வேன் என கூறியுள்ளார் ஆல்யா மானசா.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version