கமல் ரஜினிக்காக எழுதின கதை அது.. ஆனால் இப்ப ஹீரோவை மாத்தியாச்சு.. உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்.!

தமிழ் சினிமாவில் சில சமயங்களில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகமாக இருக்கும். ஆனால் சில சமயங்களில் பிரபலமான படங்களில் பெரிய நடிகர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது மக்களின் ஆவலாக இருக்கும்.

அப்படியாக நடிகர் ரஜினியும் கமலும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது பலரது ஆசையாக இருந்து வருகிறது. கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் அறிமுகமான நடிகர்களாக இருந்தாலும் சில காலங்கள் மட்டுமே இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தனர்.

கமல் ரஜினிக்காக எழுதிய கதை:

அதற்கு பிறகு இருவருக்கும் தனி தனி மார்கெட் உருவாகிவிட்டதாலும் தனி தனி ரசிகப்பட்டாளம் உருவானதாலும் இருவருமே பிறகு சேர்ந்து நடிக்கவில்லை. இந்த நிலையில் 96 திரைப்படத்தின் இயக்குனரான சி பிரேம் குமார் ரஜினியையும் கமலையும் வைத்து ஒரு கதை எழுதியுள்ளார்.

பொதுவாக ரஜினி கமலை வைத்து இயக்குனர்கள் ஆக்‌ஷன் கதைகளைதான் எழுதுவார்கள். ஆனால் பிரேம் குமார் குடும்ப கதை ஒன்றை எழுதினார். அவருக்கே பிறகு தெரிந்தது அந்த படத்தில் இவர்கள் நடிக்க மாட்டார்கள் என்பது.

எனவே பிறகு அந்த படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமியை நடிக்க வைத்தார். அந்த படம் தான் மெய்யழகன் என்கிற பெயரில் திரையில் வெளியாகியுள்ளது. இப்போது நல்ல வரவேற்பை இந்த படம் பெற்றுள்ள நிலையில் இயக்குனர் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார்.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version