Saturday, November 15, 2025
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
kalainger kannadasan

ஒரே கதைக்கு போட்டி போட்டு வசனம் எழுதிய கலைஞர், கண்ணதாசன்!.. கடைசில நடந்ததுதான் டிவிஸ்ட்டு..!

by Arun
July 26, 2024
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சினிமாவில் ஒரு படம் வெளிவர வேண்டும் என்றால் அதில் பலரின் பங்களிப்பு இருக்கும். ஆனால் முக்கியமாக ஒரு படம் உருவாகுவதற்கு காரணமாக இருப்பது அந்த படத்தில் கதை தான்.

இந்நிலையில் ஒரு படத்தின் கதை எவ்வாறு உள்ளதோ அதை பொறுத்து தான் அந்தப் படத்தின் வெற்றி அமையும். மேலும் அந்தப் படத்திற்கு பாடல்கள். வசனங்கள் என அனைத்தும் முக்கியம். மக்கள் மத்தியில் ஒரு படம் சென்றடைகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் அந்த படத்தின் கதை. வசனம் தான்.

அவ்வாறு ஒரு கதைக்கு இரண்டு பேர் போட்டி போட்டுக் கொண்டு எழுதிய வசனங்கள் கடைசியில் என்ன ஆயிற்று என்பதை பிரபல திரைப்படக் கலைஞர் கூறியிருப்பது தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திரைப்படக் கலைஞர் கலைஞானம்

இவரின் இயற்பெயர் கே. எம். பாலகிருஷ்ணன். இவர் திரைப்படங்களுக்கு கதை எழுதுபவர். மேலும் தயாரிப்பாளர், இயக்குன,ர் நடிகர், பாடலாசிரியர் என பன்முகங்களைக் கொண்டவர். மேலும் 1960 முதல் 1990 வரை 200 திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியிருக்கிறார்.

kalaignanam

இவர் பல மேடை நாடகங்களில் நடித்து புகழ்பெற்றவர். கடந்த 1966 ஆம் ஆண்டு காதல் படுத்தும் பாடு என்ற படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி இருக்கிறார். 1978ல் ரஜினிகாந்த் நடித்த பைரவி திரைப்படத்தை தயாரித்தும் உள்ளார். மேலும் ரஜினிகாந்த் நடித்த ஆறு புஷ்பங்கள்அல்லி தர்பார் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இவ்வாறு பன்முகங்களைக் கொண்ட கலைஞானம் அக்காலகட்டத்தில் கருணாநிதியின் விஷக் கோப்பை, நஞ்சுக்கோப்பை போன்ற நாடகங்களிலும் நடித்திருக்கிறார். இவர் தற்பொழுது கவிஞர் கண்ணதாசன் மற்றும் கலைஞர் கருணாநிதியை பற்றி கூறியிருக்கும் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது

கவிஞர் கண்ணதாசன்

கவிஞர் கண்ணதாசன் புகழ்பெற்ற தமிழ் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். இவரின் பாடல்கள் தமிழ் சினிமாவில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் இருந்திருக்கிறார். இவருக்கு சாகித்ய அகாடமி விருது கொடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்கள் கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார்.

கலைஞர் கருணாநிதி

இவரை அறியாதோர் தமிழ்நாட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். இவர் இந்திய அரசியல்வாதிகளில் ஒருவராவார். மேலும் 5 முறை தமிழக முதல்வராக பதவி வகித்தவர். அரசியலை தவிர்த்து இவர் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். இவர் தன்னுடைய சிறு வயதிலிருந்தே கவிதை, இலக்கியம் நாடகத்தின் மீது ஆர்வம் கொண்டவர்.

போட்டி போட்டு வசனம் எழுதிய கதை

கவிஞர் கண்ணதாசன் அதுவரை கவிதைகளை எழுதி வந்த நிலையில், அவருக்கு சம்பளமாக நூறு, இருநூறு கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் இது அவருக்கு கட்டுப்படியாகவில்லை. எனவே அப்பொழுது டி. ஆர் சுந்தரம், சுகம் மங்கை என்ற ஒரு ஆங்கில படத்தின் கதையை, தமிழில் வசனம் எழுதிக் கொடுக்குமாறு கூறியுள்ளார். அதே கதையை கலைஞரும் ஹிஸ்டாரிக்கல் பாணியில் அம்மையப்பன் என்று எழுத இவ்விருவரும் அதற்கு வசனம் எழுதினார்கள். ஆனால் கடைசியில் இருவரும் எழுதியது தோல்வியில் முடிந்ததாக கலைஞானம் கூறினார். அந்த காலத்தில் கலைஞர் கருணாநிதி கதை, வசனம் எழுதுவதற்கு கிட்டத்தட்ட 25,000 ரூபாய் வரை பெற்று வந்தார் எனவும் அவர் கூறினார்.

கண்ணதாசன் பாடல், கவிதை எழுதுவதற்கு நூறு, இருநூறு பெற்று வந்த நிலையில் இந்த கதை எழுதும் பொழுது பத்தாயிரம் ரூபாய் வரை பெற்று வந்ததால், அவர் திரைக்கதை வசனங்கள் எழுதுவதில் இறங்கிவிட்டார் என கலைஞானம் கூறியிருக்கிறார்.

Tags: kalaingerkannadasanதமிழ் சினிமா
Previous Post

ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் மொத்தமும் தெரியுது.. இளசுகளை பதறவிட்ட மாளவிகா மோகனன்!.

Next Post

கர்சீப்பை கட்டிக்கிட்டு வேற மாறி போஸ் கொடுத்த காஷ்மீரா… சூம் பண்ணி பார்த்த ரசிகர்கள்!.

Related Posts

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

November 5, 2025

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025

மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

November 5, 2025

வெற்றிமாறன் என்னை வேண்டாம்னு சொல்லிட்டாரு..! உண்மையை கூறிய சந்தானம்.!

November 3, 2025
Next Post
kashmira

கர்சீப்பை கட்டிக்கிட்டு வேற மாறி போஸ் கொடுத்த காஷ்மீரா… சூம் பண்ணி பார்த்த ரசிகர்கள்!.

Recent Updates

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025
கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

November 5, 2025
kanthara 2

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025
மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

November 5, 2025

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved