மலையாள சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நிவின்பாலி. நேரம் திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் நிவின்பாலி.
தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நடிகராக நிவின் பாலி இருந்து வருகிறார். அவ்வபோது தமிழில் ஏதாவது ஒரு திரைப்படத்தில் இவர் நடித்து வருவது வழக்கம்.
ஏற்கனவே இவர் நயன்தாராவுடன் சேர்ந்து லவ் ஆக்சன் ட்ராமா என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து வெகு வருடங்களுக்குப் பிறகு இப்பொழுது மீண்டும் நயன்தாரா நிவின்பாலி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் டியர் ஸ்டூடண்ட்ஸ்.
இந்த திரைப்படம் மாணவர்களை அடிப்படையாக வைத்து செல்லும் என்றாலும் கூட நிவின்பாலி தான் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா நடித்திருக்கிறார். கதாநாயகி என்றாலும் கூட படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமாக நயன்தாரா இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நயன்தாரா இந்த திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் தற்சமயம் வெளியாகி இருக்கிறது.
நடிகை நயன்தாரா மற்றும் ஆர்.ஜே பாலாஜி நடித்து வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் மூக்குத்தி அம்மன். மூக்குத்தி அம்மன் திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக இருந்தாலும் கூட கடவுள் என்கிற பெயரில் நடக்கும் வியாபாரத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இந்த படத்தின் கதைகளம் அமைந்து இருந்தது.
இதனால் இந்த படத்திற்கு வெகுவான வரவேற்பு கிடைத்தது. படம் நல்ல லாபத்தையும் பெற்று கொடுத்தது. இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமானது அடுத்து எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தையும் ஐசரி கணேஷ்தான் தயாரிக்கிறார். இயக்குனர் சுந்தர் சி இந்த திரைப்படத்தை இயக்குகிறார். படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 100 கோடி என்று கூறப்படுகிறது.
mookuthi amman
நயன்தாராவிற்கு அப்படி ஒரு மார்க்கெட் இல்லை என்றாலும் கூட இந்த படம் வெற்றியை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில் பாதி படம் எடுக்கப்பட்ட நிலையில் அதை எடிட் செய்து ஐசரி கணேசுக்கு போட்டுக்காட்டினார் சுந்தர் சி.
அதனை பார்த்து பிரம்மித்து போய்விட்டாராம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கண்டிப்பாக இந்த திரைப்படம் பெரும் வெற்றியை கொடுக்கும் என்று அவர் நம்பத் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழில் சமூக சீர்திருத்த திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்கள் மிகக் குறைவான அளவிலேயே இருக்கின்றனர். சில இயக்குனர்கள் மட்டும்தான் தொடர்ந்து அந்த மாதிரியான திரைப்படங்களை இயக்கி வருகின்றனர்.
அந்த மாதிரியான இயக்குனர்களில் கோபி நாயனார் முக்கியமானவர். கோபி நாயனார் இயக்கத்தில் வெளியான அறம் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆழ்துளை கிணறுகளில் விழுந்து இறக்கும் குழந்தைகளின் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத்தின் கதைகளம் இருந்தது.
இந்த நிலையில் கோபி நாயனார் குறித்து அவருடன் வேலை பார்த்த உதவி இயக்குனர் ஒருவர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்து இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது கோபி நாயனாரை பொருத்தவரை அவர் திரைப்படங்களில் வேலை செய்வதற்கு சம்பளமே கொடுப்பது கிடையாது.
படப்பிடிப்புகள் முடியும் பொழுது சம்பளம் கேட்டாலும் கூட படத்தில் ஏதாவது ஒரு கதாபாத்திரம் தருவதாக கூறுவார். இல்லையென்றால் எங்கள் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு நல்ல முறையில் செலவு செய்வதாக கூறுவார்.
ஆனால் சம்பளம் என்று எங்களுக்கு அவர் கொடுத்தது கிடையாது இப்பொழுது எல்லாம் என்னை நேரில் பார்த்தால் அவரது செயல்முறைகள் மோசமாக இருக்கின்றன சம்பளம் கொடுக்காவிட்டால் கூட பரவாயில்லை நிம்மதியாக வாழ விடுங்கள் என்று கூறியிருக்கிறார் அந்த உதவி இயக்குனர்.
சந்திரமுகி ஐயா மாதிரியான திரைப்படங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நயன்தாராவின் வளர்ச்சி என்பது அதிகமாக தான் இருந்து வந்தது.
தொடர்ந்து தமிழில் பிரபலமாக இருந்த பெரிய நடிகர்களுடன் நடித்து வந்தார் நயன்தாரா. அப்படியாக அவர் நடித்து வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் கல்வனின் காதலி திரைப்படமும் முக்கியமான திரைப்படம் ஆகும்.
19 ஆண்டுகளுக்கு முன்பு 2006 ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்த திரைப்படம் கள்வனின் காதலி. அப்பொழுது அந்த திரைப்படத்தில் உள்ள பாடல்கள் பலவும் ஹிட் கொடுத்தன.
மேலும் அந்த திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் பழைய திரைப்படங்களை இப்பொழுது மறு வெளியீடு செய்வதை ஒரு வேலையாகக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் சச்சின் திரைப்படம் கூட மறு வெளியீடு செய்யப்பட்டு அதிக வெற்றியை கொடுத்தது. தற்சமயம் அவ்வளவாக காதல் திரைப்படங்கள் எடுக்கப்படாத காரணத்தினால் கள்வனின் காதலி திரைப்படத்தையும் செய்வதற்கு திட்டமிட்டு இருக்கின்றனர்.
இந்த வருட இறுதிக்குள் இந்த திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நயன்தாராவின் ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது முதலே அது தொடர்பான சர்ச்சைகள் என்பதும் நடந்து கொண்டே இருக்கின்றன.
நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகள் சிலவற்றை படத்தில் பயன்படுத்தியிருந்தார். அதற்காக தனுஷ் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு ஒன்றை தொடுத்து இருந்தார்.
ஏனெனில் நானும் ரவுடிதான் படத்தில் உள்ள அனைத்து காட்சிகளும் தனக்கே சொந்தம் என்று தனுஷ் பேசி இருந்தார். ஆனால் படத்தின் படப்பிடிப்புகளில் எடுக்கப்பட்ட காட்சிகளை தான் பயன்படுத்தினோம் அதுவும் விக்னேஷ் சிவன் கேமராவில் எடுக்கப்பட்ட காட்சிகள் தான் என்று விளக்கம் தந்திருந்தார் நயன்.
இருந்தாலும் இது ஒரு பக்கம் பிரச்சனையாக சென்று கொண்டே இருக்கிறது இந்த நிலையில் சந்திரமுகி திரைப்படத்தின் உரிமைத்தை வைத்துள்ள ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் ஏற்கனவே நெட்ப்லிக்ஸ் மற்றும் நயன்தாராவிற்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியதாக கூறுகிறது.
அதன்படி இந்த ஆவணப்படத்தில் சந்திரமுகி திரைப்படத்தின் காட்சிகளை நீக்க வேண்டும் என்பதாக அவர்கள் கூறியிருக்கின்றனர். இருந்தாலும் கூட அந்த காட்சிகள் நீக்கப்படவில்லை.
இதனை தொடர்ந்து அவர்கள் நீதிமன்றம் மூலமாக வழக்கு ஒன்றை தொடுத்திருக்கின்றனர் இந்த நிலையில் ஏன் காட்சியை நீக்கவில்லை என்பதற்கு நயன்தாரா விளக்கம் கொடுக்க வேண்டும் என்று நீதி மன்றம் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இப்பொழுது இன்னும் பெரிய நெருக்கடியில் சிக்கி இருக்கிறார் நயன்தாரா.
நடிகை நயன்தாரா பொதுவாக தான் நடிக்கும் திரைப்படங்களுக்கு கூட பெரிதாக ப்ரமோஷன் எதுவும் செய்ய மாட்டார் என்பது பலரும் அறிந்த விஷயமே.
படத்திற்கான அக்ரீமெண்ட் போடும் பொழுது இசை வெளியீட்டு விழா படத்தின் வெற்றி விழா போன்ற எந்த விழாக்களுக்கும் வரமாட்டேன் என்று விதிமுறை போட்டு தான் கையெழுத்தே போடுவார் நயன்தாரா.
ரஜினிகாந்தோடு நடிக்கும் படமாக இருந்தாலும் கூட படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நயன்தாரா வரமாட்டார். அந்த அளவிற்கு ப்ரோமோஷன் மீது ஈடுபாடு இல்லாத ஒருவராக நயன்தாரா இருந்தார்.
இதனால் மற்ற படங்களை கூட அவர் பிரமோஷன் செய்தது கிடையாது. ஆனால் முதன்முதலாக இயக்குனர் ராம் இயக்கத்தில் தற்சமயம் வெளியான பறந்து போ திரைப்படம் குறித்து இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்திருக்கிறார் நயன்தாரா.
அதில் அவர் கூறும் பொழுது வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும் என்றால் உங்கள் குழந்தையை அழைத்துக் கொண்டு மலை ஏறுங்கள் இல்லையென்றால் ஏதாவது குளத்தில் சென்று மீன்பிடியுங்கள். அதுவும் இல்லை என்றால் பறந்து போ திரைப்படத்திற்கு உங்கள் குழந்தையோடு செல்லுங்கள்.
அப்பொழுது வாழ்க்கையில் எதை இழந்திருக்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும் என்று கூறியிருக்கிறார் நயன்தாரா.
தமிழ் சினிமாவில் சினிமாவிற்குள்ளேயே காதல் உண்டாகி திருமணமான ஜோடிகள் பலர் உண்டு.
அதில் அதிக பிரபலமானவர்களாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடியினர் இருந்து வருகின்றனர். விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் வெகு வருடங்களாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பே இவர்கள் திருமணமும் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றன தற்சமயம் தந்தையர் தினத்தை முன்னிட்டு அவர்களோடு ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் விக்னேஷ் சிவன்.
அதில் இந்த இரண்டு குழந்தைகளுடனும் அவர் படும் பாடு என்பது போல அந்த வீடியோ அமைந்திருந்தது அதை இப்பொழுதே ட்ரண்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகை நயன் தாரா மிக முக்கியமான நடிகை ஆவார். பெரும்பாலும் நடிகை நயன் தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களைதான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் நடித்த படங்கள் எதுவுமே பெரிதாக அவருக்கு வரவேற்பை பெற்று தரவில்லை.
எனவே நடிகை நயன் தாரா தற்சமயம் கதை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்த துவங்கியுள்ளார். போன வருடம் அவரது நடிப்பில் வெளியான அன்னப்பூரணி திரைப்படம் அதிக சர்ச்சைக்கு உள்ளானது பலரும் அறிந்த விஷயமே.
ஆனால் அதற்கு பிறகு பாலிவுட்டில் அவர் நடித்த ஜவான் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. மேலும் ஒட்டு மொத்த திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரமாக நயன்தாராவின் கதாபாத்திரம் இருந்தது. இந்த நிலையில் அடுத்து தமிழில் அவர் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடிக்க துவங்கியுள்ளார்.
நயன் தாரா நடிப்பில் வெளியான திரைப்படங்களில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்திற்கு தனி செல்வாக்கு உண்டு. அதனை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்க உள்ளார்.
இயக்குனர் சுந்தர் சி இந்த படத்தை இயக்க துவங்கியது முதலே திரைப்படம் தொடர்பாக சில பிரச்சனைகள் சென்று கொண்டுள்ளன. இந்த நிலையில் நயன் தாராவுக்கும் சுந்தர் சி க்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வந்தன.
இதற்கு பதிலளித்த குஷ்பு கூறும்போது தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நல்லப்படியாக சென்றுக்கொண்டுள்ளது என கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகைகளில் மிக முக்கியமானவராக நடிகை நயன்தாரா இருந்து வருகிறார். பெரும்பாலும் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களுக்கு என்று ஒரு வரவேற்பு எப்போதுமே இருந்து வருகிறது.
இந்த நிலையில் நயன்தாரா நடிப்பில் பெரிய ஹிட் கொடுத்த திரைப்படங்களில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்திற்கு முக்கியமான பங்கு உண்டு. மூக்குத்தி அம்மன் திரைப்படத்தைப் பொறுத்தவரை அதன் திரை கதையில் துவங்கி பல விஷயங்களை வேலை பார்ப்த்தவர் நடிகரும் இயக்குனருமான ஆர.ஜே பாலாஜி
ஆர்.ஜே பாலாஜியின் உழைப்பால் அந்த திரைப்படம் சிறப்பான காமெடி திரைப்படமாக வந்தது. அந்த திரைப்படத்தில் நயன்தாராவிற்கு வைக்கப்பட்டிருந்த காட்சிகளுமே நன்றாக ஒர்க்அவுட் ஆயிருந்தது.
இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்து தயாரிக்க இருக்கிறது வேல்ஸ் நிறுவனம். இந்த திரைப்படத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி இந்த படத்தை இயக்குகிறார் என்பதாலேயே இப்பொழுது இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
mookuthi amman
ஏனெனில் சுந்தர் சி மற்றும் நயன்தாரா காம்போவில் ஒரு சாமி படம் என்னும் பொழுது இது மிகப் புதிதாக இருக்கும். சுந்தர்சியம் இதுவரை எந்த சாமி திரைப்படத்தையும் இயக்கியது கிடையாது பேய் படங்களை தான் இயக்கி இருக்கிறார் என்பதால் இந்த படத்திற்கு சாதாரணமாகவே எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
இந்த நிலையில் 55 கோடி பட்ஜெட்டில்தான் மூக்குத்தி அம்மன் திரைப்படம் உருவாக்கப்பட இருந்தது. ஆனால் சுந்தர்சி வந்த பிறகு படத்தின் பட்ஜெட் அதிகரித்திருக்கிறது. இப்பொழுது இந்த திரைப்படம் 112 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட இருக்கிறது.
தமிழ் சினிமவில் முதன்முதலாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கதைக்கு 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட் செலவிடப்படுவது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது. நயன்தாரா இந்த படம் நல்ல வசூலை கொடுக்கும் என்று நம்பி வருவதால் படத்திற்கு 50 சதவீத சம்பளத்தை மட்டுமே வாங்கி இருக்கிறார்.
மீதி 50 சதவீதத்தை படத்தில் வரும் லாபத்தில் இருந்து பங்குகளாக கேட்டிருக்கிறார் நயன்தாரா
நடிகை நயன் தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்று வரும் நடிகையாக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் நடிகையாக நயந்தாரா தான் இருந்து வருகிறார். அந்த அளவிற்கு அவரது மார்க்கெட் என்பது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தற்சமயம் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார் நடிகை நயன் தாரா. மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திற்கு பின்னால் பல பிரச்சனைகள் நடந்தது. மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் முதல் பாகத்தை வேல்ஸ் நிறுவனம்தான் தயாரித்தது.
ஆர்.ஜே பாலாஜி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது மட்டுமின்றி படத்தின் கதையிலும் பணிப்புரிந்திருந்தார். ஹிந்தியில் வெளியான பி.கே என்கிற திரைப்படத்தின் மீது கொண்ட ஈடுப்பாட்டால் இந்த படத்தை இயக்கினார் ஆர்.ஜே பாலாஜி.
இந்த நிலையில் அடுத்து ஒரு அம்மன் படமாக மாசாணி என்கிற திரைப்படத்தை இயக்க திட்டமிட்டார் ஆர்.ஜே பாலாஜி. அந்த திரைப்படத்தை அவர் சொந்த தயாரிப்பில் உருவாகக் நினைத்தார். அதனால் நயன் தாராவுக்கு அதிகப்படியான சம்பளம் கொடுத்து அவரை நடிக்க வைக்க முடியாது என அவர் திரிஷாவிடம் இதுக்குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த நயன் தாரா வேல்ஸ் நிறுவனத்திடம் பேசி வேக வேகமாக மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார். மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் முதல் லுக் வெளியானப்போது அதன் இயக்குனர் யார் என்று கூட முடிவு செய்யப்படவில்லை.
இந்த நிலையில் தற்சமயம் இயக்குனர் சுந்தர் சி இந்த படத்தை இயக்குகிறார். 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது முக்குத்தி அம்மன் 2 திரைப்படம். கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் எந்த ஒரு திரைப்படமும் இதுவரை 100 கோடி பட்ஜெட்டில் உருவானது இல்லை.
எனவே இது நயன் தாராவுக்கு தமிழ் சினிமாவில் பெரும் சாதனை என கூறப்படுகிறது,
நடிகை நயன்தாராவின் கணவரான இயக்குனர் விக்னேஷ் சிவன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்களாக இயக்கி வருகிறார். இவர் இயக்கிய திரைப்படங்களில் நானும் ரவுடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல் மாதிரியான ஒரு சில திரைப்படங்கள் அதிக வரவேற்பையும் பெற்றுள்ளன.
இந்த நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்கு பிறகு தற்சமயம் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் திரைப்படம் எல்.ஐ.கே. இந்த திரைப்படத்தில் வெற்றி நாயகன் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
மேலும் நடிகர் சீமான் தான் கதாநாயகனுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்று கொண்டுள்ளன. இந்த வருட இறுதிக்குள் படம் திரையரங்கிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
vignesh shivan
டைம் ட்ராவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் எல்.ஐ.கே படத்தின் கதையை முன்பே எழுதிவிட்டார் விக்னேஷ் சிவன். ஆனால் பட்ஜெட் காரணமாக அந்த கதை படமாக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்சமயம் அந்த கதை படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தின் கதை குறித்து ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல சர்வேதேச திரைப்பட தளமான ஐ.எம்.டி.பி இந்த படத்தின் ஒன் லைனை வெளியிட்டுள்ளது. அதாவது கதாநாயகன் காதலுக்காக 10 வருடம் எதிர்காலத்தை நோக்கி பயணிப்பதுதான் கதை என ஐ.எம்.டி.பியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வெளியாகாத திரைப்படத்தின் ஒன்லைனை இந்த தளம் வெளியிடுவதில்லை. அப்படியிருக்கும்போது இந்த தகவல் எப்படி அதில் வெளியானது என்பதுதான் இப்போது கேள்வியாகி வருகிறது.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக இருந்து வருகிறார் நடிகை நயன்தாரா, ஐயா மற்றும் சந்திரமுகி திரைப்படம் மூலமாக நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்றார். அதற்கு பிறகு தொடர்ந்து தமிழ் சினிமாவில் உள்ள பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் நடிகை நயன்தாரா.
அஜித், விஜய் என அப்போது பிரபலமாக இருந்த அனைவருடனும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்போது நயன் தாராவுக்கு என்று தனி மார்க்கெட் தமிழ் சினிமாவில் உருவாகிவிட்டது. இதனால் அவருக்கு பட வாய்ப்புகளும் அதிகமாக வருகின்றன. அதே போல தமிழ் நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன் தாரா இருந்து வருகிறார்.
இந்த நிலையில்தான் நயன் தாராவுக்கு பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படமாக மூக்குத்தி அம்மன் திரைப்படம் அமைந்தது. இந்த திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கி அவரே நடித்திருந்தார்.
மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை பொறுத்தவரை அந்த திரைப்படத்தை பி.கே என்கிற பாலிவுட் திரைப்படத்தின் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாகதான் ஆர்.ஜே பாலாஜி இயக்கினார். இந்த திரைப்படத்தில் போலி சாமியார்களுக்கு எதிரான பல விஷயங்களை மக்களுக்கு ஏற்புடைய விதத்தில் பேசியிருந்தார் ஆர்.ஜே பாலாஜி.
இந்த நிலையில் அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை ஆர்.ஜே பாலாஜியே தயாரித்து இயக்க நினைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு நயன் தாரா கேட்ட சம்பளம் கட்டுப்படியாகவில்லை. எனவே ஆர்.ஜே பாலாஜி அந்த படத்திற்கு வேறு கதாநாயகியை தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு மாசாணி என பெயர் வைத்தார் ஆர்.ஜே பாலாஜி.
இதனால் கோபம் கொண்ட நடிகை நயன் தாரா வேல்ஸ் நிறுவனத்திடம் மூக்குத்தி அம்மன் 2 படத்தை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து படத்தின் இயக்குனரை கூட தேர்ந்தெடுக்காமல் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ வெளியானது.
இதனை தொடர்ந்து அடுத்து இந்த படத்தை இயக்குவதற்கு இயக்குனர் சுந்தர் சி ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட்டில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் தயாராகிறது. ஆர்.ஜே பாலாஜிக்கு எதிராக இப்படி ஒரு திட்டத்தை நயன் தாரா செய்ய வேண்டுமா என ஒரு பக்கம் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் இருக்கின்றன.
ஆனால் இதுக்குறித்து இரு தரப்பில் இருந்தும் எந்த ஒரு பதிலோ குற்றச்சாட்டோ வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips