விஜய் சேதிபதியாவது 2 லட்சம் தரார்.. அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை குறித்து பேசிய பிரபலம்..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் விஜய் சேதுபதி இருந்து வருகிறார். தொடர்ந்து சண்டை காட்சிகள் கொண்ட ஆக்‌ஷன் திரைப்படங்கள் என்று மட்டும் நடிக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து சில படங்களில் இவர் நடித்து வருகிறார்.

அப்படியாக சமீபத்தில் அவரது நடிப்பில் தலைவன் தலைவி திரைப்படம் வெளியானது. பொதுவாகவே சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்த விஷயங்கள் என்பது தொடர்ந்து நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் கூட விஜய் சேதுபதி கேரவனுக்கு வர சொல்லி ஒரு பெண்ணுக்கு 2 லட்சம் தந்ததாக ஒரு விஷயம் பரவி வந்தது.

இந்த நிலையில் இதுக்குறித்து பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேசியுள்ளார். அவர் கூறும்போது விஜய் சேதுபதியாவது 2 லட்சம் கொடுத்து அந்த பெண்ணை கேரவனுக்கு அழைத்து சென்றார். எனக்கு தெரிந்த ஒரு நடிகர் இருக்கிறார்.

அவர் வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை கேரவனுக்கு அழைத்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவர் அந்த பெண்களிடம் எல்லாம் முடிந்த பிறகு 150 ரூபாய் மதிப்புள்ள ஒரு புடவையை அன்பளிப்பாக அவர்களுக்கு கொடுத்துவிடுவார்.

அப்படி செய்வதால் இப்போது அவர் செய்த பாவம் விலகிவிடுமாம். நடிகைகளும் ஒரு படத்தில் நல்ல வாய்ப்பு கிடைத்துவிட்டால் அதனால் வாழ்க்கையே மாறிவிடுமே என இந்த மாதிரி விஷயங்களை ஏற்றுக்கொண்டு செல்கின்றனர் என கூறியுள்ளார் தமிழா தமிழா பாண்டியன்.

 

 

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version