Connect with us

என்னையவா டிஸ்டர்ப் பண்றிங்க? – போலீஸ்க்கு போன் போட்ட மணி சார்!

Cinema History

என்னையவா டிஸ்டர்ப் பண்றிங்க? – போலீஸ்க்கு போன் போட்ட மணி சார்!

Social Media Bar

தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் மீது மக்களுக்கு தனி மரியாதை உண்டு. சினிமா துறையில் அவர்களது திறமையை கண்டு பலரும் அவர்களுக்கு ரசிகர்களாக ஆவது உண்டு.

அதே போல தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் பலரும்  மணிரத்னத்திற்கு மிகப்பெரிய ரசிகர்களாக இருந்து வருகின்றனர். ஆனால் சில நாட்களுக்கு முன்பு மணிரத்னத்துடன் மன கசப்பு ஏற்படும் வகையில் ஒரு இயக்குனருக்கு சில சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.

தமிழில் சில படங்கள் மட்டும் எடுத்துள்ள இயக்குனர்தான் சாந்தக்குமார், இவர் மெளனகுரு மாதிரியான படங்களை இயக்கியுள்ளார். தற்சமயம் கூட ஒரு படம் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது.

அதே கொடைக்கானலில் இவர்களுக்கு படப்பிடிப்பு தளத்திற்கு சிறிது தொலைவில் இயக்குனர் மணிரத்னத்தின் கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. படப்பிடிப்பு சமயத்தில் மணிரத்னம் அங்கு தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அது மணிரத்னத்தின் கெஸ்ட் ஹவுஸ் என்பது படப்பிடிப்பு குழுவிற்கு தெரியாது. இந்நிலையில் படப்பிடிப்பின்போது தவறுதலாக லைட் மணிரத்னத்தின் வீட்டின் மேல் அடித்துள்ளது.

இதனால் கோபமான மணிரத்னம் போலீஸ்க்கு போன் செய்துள்ளார். அவர்கள் வந்து இதுக்குறித்து படக்குழுவிடம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து படக்குழு மனம் வருந்தியதாக கூறப்படுகிறது.

Bigg Boss Update

To Top