Connect with us

உன்ன அடிக்க முடியாதுன்னுதாண்டி என்ன நானே செருப்பால அடிச்சிக்குறேன்!.. பாட்டியின் செயலால் ரஜினி படத்தில் வாய்ப்பை இழந்த நடிகை ஐஸ்வர்யா!.

aishwarya rajinikanth

Cinema History

உன்ன அடிக்க முடியாதுன்னுதாண்டி என்ன நானே செருப்பால அடிச்சிக்குறேன்!.. பாட்டியின் செயலால் ரஜினி படத்தில் வாய்ப்பை இழந்த நடிகை ஐஸ்வர்யா!.

cinepettai.com cinepettai.com

Actress Aishwarya : சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு முறை நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை தவறவிடும் பட்சத்தில் அது நமது சினிமா வாழ்க்கையிலேயே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விடும் என கூறலாம்.

உதாரணத்திற்கு நடிகர் அப்பாஸின் வாழ்க்கையை எடுத்துக் கொள்ளலாம் காதல் தேசம் திரைப்படத்தில் நடித்த பிறகு நடிகர் அப்பாஸிற்க்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் வந்தன. நிறைய பட வாய்ப்புகள் வந்தன. அவற்றில் நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்காமல் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வந்தார் அப்பாஸ்.

இதனால் அவரால் ஷங்கர் மாதிரியான முக்கியமான இயக்குனர்கள் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தும் நடிக்க முடியாமல் போனது. இப்படியான சம்பவம் நடிகை ஐஸ்வர்யாவிற்கும் நடந்துள்ளது. பாக்கியராஜ் போன்ற நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

ஐஸ்வர்யா தெலுங்கில் நிறைய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் அவர் தமிழில் வளர்ந்து வந்த காலகட்டங்களில் இயக்குனர் மணிரத்தினம் அவரை கதாநாயகியாக வைத்து திரைப்படம் எடுக்க நினைத்திருக்கிறார். தளபதி திரைப்படத்தில் அவரை கதாநாயகியாக நடிக்க வைக்க நினைத்தபொழுது அவர் வேறொரு திரைப்படத்தில் பிஸியாக இருந்ததால் அதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது.

வாய்ப்பை இழந்த நடிகை:

ஐஸ்வர்யாவை பொறுத்த வரை அவருக்கான கால்ஷீட் விஷயங்களை அவரது பாட்டிதான் பார்த்துக் கொள்வார். தளபதி படத்தின் வெற்றிக்குப் பிறகு ரோஜா திரைப்படத்தில் ஐஸ்வர்யாவை கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என்று நினைத்தார் மணிரத்தினம்.

ஆனால் அப்பொழுதும் அவர் வேறு ஒரு தெலுங்கு படத்தில் கமிட் ஆகி இருந்ததால் ஐஸ்வர்யாவின் பாட்டி இப்பொழுது வாய்ப்பில்லை என்று கூறிவிடார். அதன் பிறகு ரோஜா படம் வெளியான பொழுது ஐஸ்வர்யா தனது குடும்பத்துடன் சென்று அந்த திரைப்படத்தை பார்த்திருக்கிறார்.

அந்த திரைப்படம் ஏ.ஆர் ரகுமானிற்கும் முதல் திரைப்படம் ஆகும். பாடல்கள் வழியாகவே அந்த படம் பெரும் வெற்றியை கொடுத்திருந்தது. அந்த படத்தை பார்த்த பொழுது  ஐஸ்வர்யா மனமடைந்துவிட்டார். ஏனெனில் கதாநாயகிக்குதான் அந்த திரைப்படத்தில் முழுக்க முழுக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.

இதனை அடுத்து வீட்டிற்கு சென்ற ஐஸ்வர்யா செருப்பை எடுத்து தனது தலையில் அடித்து கொண்டதாக கூறுகிறார். அதனை பார்த்த பாட்டி அவரை சமாதானம் செய்ய நினைத்திருக்கிறார் அப்பொழுது பாட்டியிடம் பேசிய ஐஸ்வர்யா உன்னை அடிக்க முடியாது. அதனால் தான் என்னை நானே அடித்துக்கொள்கிறேன் என்று சத்தமாக கத்தி இருக்கிறார். அந்த இரண்டு திரைப்படங்களில் ஒருவேளை ஐஸ்வர்யா நடித்திருந்தால் தமிழ் திரை உலகில் அவருக்கு அது மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

POPULAR POSTS

To Top