நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் எடுக்க நினைத்து எடுக்க முடியாமல் நின்று போன படங்கள் ஏராளம். அப்படி நின்று போன படங்களில் முக்கியமான திரைப்படம்தான் சபாஷ் நாயுடு.
2008 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் தசவதாரம். இந்த படத்தின் வெற்றியை தொட்ரந்து படத்தில் வந்த பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு கமல்ஹாசன் அடுத்து எடுக்கவிருந்த திரைப்படம் சபாஷ் நாயுடு.
இந்த திரைப்படத்திற்கான வேலைகள் 2011 ஆம் ஆண்டு துவங்கியது. இந்திய உளவு துறை அதிகாரியான பல்ராம் நாயுடுவாக கமல்ஹாசனும், அவருக்கு உதவியாளர் கதாபாத்திரத்தில் வடிவேலு நடிப்பதாக முடிவானது. ராஜ் கமல் நிறுவனம் மற்றும் லைகா நிறுவனம் சேர்ந்து இந்த படத்தை எடுக்கலாம் என முடிவானது.

இயக்குனர் டி.கே ராஜீவ் குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், பிரம்மநாந்தம் என பல முக்கிய நடிகர்கள் நடிக்க இருந்தனர். காமெடி படமாக எடுக்கவிருந்த சபாஷ் நாயுடு முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட இருந்தது.
இந்த நிலையில்தான் படத்தில் தொடர்ந்து அசாம்பாவிதங்கள் நடக்க துவங்கின. படத்தின் இயக்குனரான டி.கே ராஜிவ் குமாருக்கு லிம்சே என்னும் நோய் தொற்று ஏற்பட்டது. அதனால் அவரால் படப்பிடிப்பை துவங்க முடியவில்லை. அதற்கு பிறகு படத்தின் எடிட்டரின் மனைவி விபத்துக்குள்ளானார்.
அதனை தொடர்ந்து கமல்ஹாசனுக்குமே படப்பிடிப்பில் அடிப்பட்டு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த சமயத்தில் சபாஷ் நாயுடு திரைப்படம். பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பிறகு இப்போது வரை அந்த திரைப்படம் துவங்கவே இல்லை.






