தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெற்றிமாறன். பெரும்பாலும் வெற்றிமாறன் இயக்கும் படங்கள் வெற்றி படங்களாகதான் அமையும். தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இயக்குனர்கள் மிக குறைவே.
இந்த இயக்குனர்களை பொறுத்தவரை அவர்கள் எந்த ஹீரோவை வைத்து படம் இயக்கினாலும் ரசிகர்கள் அந்த படத்தை பார்ப்பார்கள்.அப்படியான இயக்குனர்களில் முக்கியமானவர் வெற்றிமாறன்.
வெற்றிமாறனின் முதல் படமான பொல்லாதவன் படம் முதலே நடிகர் தனுஷ்க்கும் வெற்றிமாறனுக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆடுகளம் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருந்த திரைப்படம்தான் சூதாடி.

ஆடுகளம் போலவே இதுவும் சூதாட்டத்தை அடிப்படையாக கொண்ட திரைப்படமாகும். ஆனால் இந்த திரைப்படத்தின் படப்ப்பிடிப்பு 5 நாட்கள் மட்டுமே நடந்தது. அதற்கு பிறகு படப்பிடிப்பு நடக்கவில்லை. படமும் அதற்கு பிறகு தொடரப்படவில்லை.
இதற்காக வெற்றிமாறன் சொன்ன காரணம் என்னவெனில் நான் எப்போதெல்லாம் சூதாடி படம் எடுக்குறேனோ அப்ப எல்லாம் எனக்கு ஆடுகளம் படம்தான் கண் முன்ன வருது. அதனால் இந்த படத்தை என்னால பண்ண முடியல என கூறியுள்ளார்.
எனவே திரும்ப சூதாடி படம் வர வாய்ப்பில்லை என்றாலும் வட சென்னை 2 வந்தாலே போதும் என்பதுதான் மக்களின் ஆவலாக இருக்கிறது.







