Latest News
பாட்டுக்கு தேவை இசையா? மொழியா!.. இளையராஜா வைரமுத்து பிரச்சனை குறித்து பேசிய ஜேம்ஸ் வசந்தன்!..
பழைய தமிழ் சினிமாவில் கல்வியா? செல்வமா? வீரமா எது பெரிது என கடவுள்களுக்குள் சண்டை வருவது போல காட்சி இருக்கும். அதே மாதிரி தற்சமயம் ஒரு பாடலுக்கு முக்கியம் இசையா? பாடல் வரிகளா என்கிற சண்டை இளையராஜாவிற்கும் வைரமுத்துவிற்கும் இடையே வந்துள்ளது.
தான் இசையமைத்த பாடல்கள் எல்லாமே தனக்கு சொந்தமானவை எனவே அதற்கான காப்புரிமை தனக்கு வேண்டும் என்று வெகு காலங்களுக்கு முன்பே இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில் இதுக்குறித்து மறைமுகமாக பேசிய வைரமுத்து ஒரு இசை மட்டுமே பாடல் ஆகிவிட முடியாது. பாடலுக்கு வரிகள்தான் பெயர் போன்றவை எப்படி இசை இல்லாமல் ஒரு பாடல் கிடையாதோ அதே போல பாடல் வரிகள் இல்லாமலும் ஒரு பாடல் கிடையாது.
எனவே பாடலுக்கு இசை முக்கியமா? மொழி முக்கியமா என கேட்டால் ரெண்டுமே முக்கியம் என பேசியிருந்தார் வைரமுத்து. இந்த நிலையில் இதற்கு கருத்து தெரிவித்த கங்கை அமரன் என் அண்ணன் நிழல்கள் திரைப்படத்தில் வாய்ப்பு தரவில்லை என்றால் வைரமுத்துவிற்கு இந்த வாழ்க்கை கிடையாது.
ஆனால் அவர் நன்றி மறந்து பேசுகிறார். உட்கார்ந்த நாற்காலியையே எட்டி உதைக்கிறார் என கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழில் பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறும்போது ஒரு பாடலுக்கு இசை முக்கியமா பாடல் வரிகள் முக்கியமா என்றால் இரண்டுமே முக்கியம்தான். அப்படி பார்த்தால் எம்.ஜி.ஆர் காலக்கட்டத்தில் அவருக்காகவே பாடல்கள் ஓடின. சிவாஜியின் பாடல்களும் அப்படிதான். அதற்காக கதாநாயகர்கள் முக்கியம் என கூற முடியுமா. நான் சுப்பிரமணியப்புரம் திரைப்படத்திற்கு இசையமைத்தப்போது அதில் வரும் கண்கள் இரண்டால் பாடல் ஹிட்டானது.
அதில் நடித்தவர்களோ அல்லது இசையமைத்தோ நானோ அப்போது பிரபலம் கிடையாது. அதே போல அதில் இசையால் ஹிட்டானதா அல்லது மொழியால் ஹிட்டானதா என எப்படி கூற முடியும் என கூறியுள்ளார் ஜேம்ஸ் வசந்த்.