Connect with us

புகழ்ந்து பாட்டு எழுத நான் என்ன புலவனா!.. எம்.ஜி.ஆரை உதாசினப்படுத்திய கண்ணதாசன்!..

kannadasan mgr

Cinema History

புகழ்ந்து பாட்டு எழுத நான் என்ன புலவனா!.. எம்.ஜி.ஆரை உதாசினப்படுத்திய கண்ணதாசன்!..

cinepettai.com cinepettai.com

MGR and Kannadasan : பிளாக் அண்ட் வொயிட் சினிமா காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பெரும்புள்ளியாக இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். ஆரம்ப காலகட்டங்களில் சிவாஜி கணேசனை போலவே பலவிதமான கதைகளிலும் நடித்து வந்தாலும் ஓரளவு பிரபலமான பிறகு தொடர்ந்து கமர்சியல் கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களாக உள்ள சாதாரண கதைகளை தேர்ந்தெடுக்கவில்லை. தொடர்ந்து மக்களுக்காக உழைக்கும் கதாபாத்திரமாகவும் எதிரிகளை எதிர்த்து சண்டை போடும் கதாபாத்திரமாகவும் மட்டுமே நடித்து வந்தார் எம்.ஜி.ஆர்.

பெரும் நட்சத்திரமாக உயர்ந்த பிறகு அவரது திரைப்படங்களில் அனைத்து விஷயங்களையும் அவரே முடிவு செய்வார் என்கிற நிலை ஏற்பட்டது. இதனால் படத்தின் பாடல்களில் துவங்கி நடிக்கும் நடிகர்கள் வரைக்கும் அனைத்தும் எம்ஜிஆரின் விருப்பத்திற்கு ஏற்பவே செய்யப்பட்டது.

mgr (1)
mgr (1)

இந்த நிலையில் எம்.ஜி.ஆருக்கு கண்ணதாசன் பாடல் வரிகளை எழுத வந்த பொழுது இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளில் குறை கூறிய எம்.ஜி.ஆர் தொடர்ந்து பாடல் வரிகளை எழுதும் போது எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசுவது போல பாடல் வரிகள் வேண்டும் என்று கண்ணதாசனிடம் கேட்டிருக்கிறார்.

இதனால் கோபமான கண்ணதாசன் சிவாஜி கணேசனுக்கே நான் அப்படி பாடல் வரிகள் எழுதியது கிடையாது உங்களுக்கு எப்படி எழுத முடியும் புகழ்ந்து பேசி பரிசு வாங்கி செல்வதற்கு நான் என்ன புலவனா என்று கூறி கோபமான கண்ணதாசன் அதற்கு பிறகு எம்.ஜி.ஆருக்கு பெரிதாக பாடல் வரிகளே எழுதி கொடுக்கவில்லை. பெரும்பாலான பாடல் வரிகளை கவிஞர் வாலிதான் எழுதி கொடுத்தார்.

POPULAR POSTS

kurangu pedal
nani rajinikanth
aranmanai 4
kavin star
vijay ajith
ajith
To Top