Connect with us

இனிமே நடிச்சா த்ரில்லர் படம் மட்டும்தான் போல – அருள்நிதிக்கு வரிசையாக குவியும் க்ரைம் திரைப்படங்கள்

Latest News

இனிமே நடிச்சா த்ரில்லர் படம் மட்டும்தான் போல – அருள்நிதிக்கு வரிசையாக குவியும் க்ரைம் திரைப்படங்கள்

cinepettai.com cinepettai.com

நடிகர் அருள்நிதி எப்போதும் வித்தியாசமான கதைகளத்தை தேர்ந்தெடுத்து திரைப்படம் நடிக்க கூடியவர் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. அவர் நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள், டிமாண்டி காலணி ஆகியவை வெகுவாக பேசப்பட்ட க்ரைம் த்ரில்லர் மற்றும் ஹாரர் திரைப்படங்கள் ஆகும். 

இதனால் இவருக்கு வரிசையாக க்ரைம் திரில்லர் மற்றும் ஹாரர் திரைப்படங்கள் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. தற்சமயம் வெளியாகி இருக்கும் டி ப்ளாக் திரைப்படமும் கூட அந்த வகையை சேர்ந்ததுதான்.

இந்நிலையில் அடுத்து அவர் நடித்த தே ஜா வு என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது. மேலும் லைக்கா நிறுவனத்திற்கும் ஒரு திரைப்படம் நடித்து கொடுத்துள்ளாராம். மேலும் டைரி என்கிற பேரில் இன்னொறு த்ரில்லர் படத்தில் நடிக்கிறாராம் அருள்நிதி. இவையெல்லாம் இல்லாமல் அடுத்து டிமாண்டி காலணியின் இரண்டாம் பாகமானது படமாக்கப்பட இருக்கிறதாம்.

ராட்சஸி திரைப்படத்தின் இயக்குனரான கவுதம் அவர்களும் அருள்நிதியை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறாராம்.

இதனால் நான்ஸ்டாப்பான திரில்லர் படங்களை அருள்நிதி தமிழ் சினிமாவில் வழங்க இருக்கிறார் என தெரிகிறது.

POPULAR POSTS

lingusamy kamalhaasan
vishal rathnam
ks ravikumar vishal
vishal
prakash-raj-1
oru nodi poster
To Top