Connect with us

எனக்கு மரியாதை தராத சினிமாவே வேண்டாம்… தூக்கி எறிந்துவிட்டு கிளம்பிய கலைஞர்!.. எல்லாம் அந்த தயாரிப்பாளர்தான் காரணம்!.

karunanithi

Cinema History

எனக்கு மரியாதை தராத சினிமாவே வேண்டாம்… தூக்கி எறிந்துவிட்டு கிளம்பிய கலைஞர்!.. எல்லாம் அந்த தயாரிப்பாளர்தான் காரணம்!.

cinepettai.com cinepettai.com

Kalaigar m karunanithi: சினிமாவில் பெரும் கலைஞர்களை பொறுத்தவரை அவர்கள் எப்போதுமே அதிகமாக கோபப்படுபவர்களாக இருப்பார்கள் எப்போதும் தங்களது சுயமரியாதையை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

அந்த வகையில் கலைவாணர் நாகேஷ் சிவாஜி கணேசன் எனப் பெரும் நடிகர்கள் யாரும் தங்களது சுயமரியாதையை விட்டுக்கொடுத்தது கிடையாது. அதையும் தாண்டி கண்ணதாசனிடம் ஒரு வார்த்தை தவறாக பேசினால் கூட அவர் படபிடிப்பை விட்டு கிளம்பி விடுவார் என்று பழைய சினிமா பிரபலங்கள் பலரே கூறியிருக்கின்றனர்.

அந்த வகையில் கலைஞர் மு கருணாநிதியும் முக்கியமானவர் கலைஞர் மு கருணாநிதி திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதில் பிரபலமானவர் அவர் வசனம் எழுதினாலே அந்த படத்தை பார்ப்பதற்கு அப்போது ஒரு கூட்டம் இருந்தது.

அதனால் கருணாநிதிக்கும் அதிக வரவேற்பு இருந்தது. சிவாஜி கணேசனின் முதல் திரைப்படமான பராசக்தி திரைப்படத்திற்கு திரைக்கதையை கலைஞர் மு கருணாநிதிதான் எழுதினார். அந்த அளவிற்கு பிரபலமாக இருந்தாலும் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டுதான் சினிமாவிற்கு வந்தார் கருணாநிதி.

ஏனெனில் பொதுவாக நல்ல படிப்பறிவு கொண்டவர்களுக்கு எளிதாக சினிமாவில் பாடல்களை எழுத அல்லது திரைக்கதையை எழுதுவதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. குறைந்த அளவிலான படிப்பை கொண்டிருந்ததால் கருணாநிதிக்கு அது கொஞ்சம் கடினமான காரியமாகவே இருந்தது.

இந்த நிலையில் அவர் அபிமன்யு என்கிற திரைப்படத்திற்கு வசனம் எழுதும் பொழுது பிரபலமாகாமல் இருந்தார் கருணாநிதி. அந்த திரைப்படத்திற்கான முழு வசனத்தையும் அவரே எழுதி கொடுத்தார். ஆனால் படம் வெளியான பொழுது படத்தில் பெயர் போடும் போது அதில் கருணாநிதியின் பெயரே இல்லை.

இதனால் கோபமான கருணாநிதி தயாரிப்பாளரிடம் இது குறித்து கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த தயாரிப்பாளர் நீங்கள் இன்னும் கொஞ்சம் பிரபலமாக வேண்டும் அப்பொழுதுதான் உங்கள் பெயரை போட முடியும் என்று கூறியுள்ளார். பிரபலமானாலும் ஆகாவிட்டாலும் சினிமாவில் உழைப்பிற்கான பலன் என்பது படத்தில் அவர்களது பெயரை போடுவது தான் அதுதான் அவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமாகும்.

அதனால் ஆரம்பகட்டமாகவே இருந்தாலும் இந்த விஷயங்களை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கருணாநிதி இனிமேல் நான் திரைத்துறைக்கு வரமாட்டேன் என்று கூறி கிளம்பிவிட்டார். அதன்பிறகு திரை துறையை சார்ந்த பிரபலங்கள் சிலர் அவரை சென்று நேரில் சென்று பார்த்து அவரிடம் மன்னிப்பு கேட்ட பிறகு கருணாநிதி மீண்டும் திரைத்துறைக்கு வந்தார்.

To Top