News
அடுத்து மூன்று முக்கிய கதாநாயகர்களுடன் இணைகிறார் கமல்
விக்ரம் திரைப்படம் நடிகர் கமலுக்கு ஒரு நல்ல திருப்பு முனையாக அமைந்தது. அதையடுத்து அவர் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் எண்டர்டெயின்மெண்டை மீட்டெடுக்க முடிவு செய்துள்ளார். இதற்கு முன்பும் பல படங்களை கமல்ஹாசன் இயக்கியுள்ளார்.

ஆனால் விக்ரம் திரைப்படம் அளவுக்கு எந்த படமும் வசூல் சாதனை செய்யவில்லை. இதையடுத்து இனி சில கமர்ஷியல் திரைப்படங்களையும் தயாரித்தால் என்ன? என முடிவு செய்துள்ளார் கமல்.
ஏற்கனவே கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் படம் நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் உள்ள நிலையில் கமல் மேலும் சில நடிகர்களை கொண்டும் படம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன், சிம்பு, மற்றும் உதயநிதி ஆகிய கதாநாயகர்களை கொண்டு மூன்று தனி தனி திரைப்படங்களை கமல் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே இனி கமல் தயாரிப்பில் பல படங்களை நாம் எதிர்ப்பார்க்கலாம் என கூறப்படுகிறது.
