News
சர்தார் படமும் பார்ப்பேன் – மனம் திறந்த சிவகார்த்திகேயன்
சினிமாவில் நடிகர்களிடையே போட்டி என கூறுவதெல்லாம் ஒரு சினிமா அரசியலாகவே பார்க்கப்படுகிறது. உண்மையில் நடிகர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொள்வதாக தெரியவில்லை.

தீபாவளியை முன்னிட்டு சமீபத்தில் திரையரங்கில் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் மற்றும் கார்த்தி நடித்த சர்தார் இரண்டு திரைப்படங்களும் வெளியாகின. இதனால் பலரும் சிவகார்த்திகேயனும், கார்த்தியும் போட்டி போட்டுக்கொள்கின்றனர் என கூறி வந்தனர்.
ப்ரின்ஸ் படத்தின் முதல் நாள் ரெஸ்பான்ஸை காண நடிகர் சிவகார்த்திகேயன் ஒவ்வொரு திரையரங்காக சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சென்ற பத்திரிக்கையாளர்கள் சர்தார் படத்தை பார்ப்பீர்களா? என கேட்டனர்.
கண்டிப்பாக பார்ப்பேன். முதலில் நான் ஒரு சினிமா ரசிகன், பிறகுதான் நான் ஒரு நடிகன், எனவே நான் அனைவரின் படத்தையும் பார்ப்பேன் என கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.
