தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகி அதன் பிறகு நடிகராக அதிக வரவேற்பு பெற்றவர் நடிகர் எஸ்.ஜே சூர்யா. எஸ்.ஜே சூர்யாவிற்கு ஆரம்பத்தில் மிகப்பெரிய இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் பெரிய ஆசையாக இருந்தது.
அப்படியாக ஆரம்பத்தில் அவர் இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் நல்ல வெற்றியை கொடுத்தன. அவர் இயக்கிய வாலி, குஷி மாதிரியான படங்கள் எல்லாம் நல்ல வெற்றியைதான் கொடுத்தன. ஆனாலும் அதற்கு பிறகு கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் எஸ்.ஜே சூர்யா.
அப்படியாக எஸ்.ஜே சூர்யா கதாநாயகனாக நடித்த திரைப்படம் நியூ. இந்த நிலையில் நியூ திரைப்படம் குறித்து வீரதீர சூரன் திரைப்படத்தின் இயக்குனரான அருண்குமார் கூறியிருக்கிறார்.
முதலில் ஒரு இயக்குனர் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று நினைப்பதற்கு பெரிய தைரியம் வேண்டும். அதையெல்லாம் தாண்டி நியூ திரைப்படத்திற்கு முதல் நாள் முதல் ஷோவிற்கு டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை.
அந்த படத்தை பார்க்க நான் வெகுவாக காத்திருந்தேன். ஆனால் எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு இயக்குனர் நடித்த முதல் படத்திற்கு முதல் ஷோவில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் அது எஸ் ஜே சூர்யாவிற்கு மட்டும்தான் என்று கூறியிருக்கிறார் அருண்குமார்.