Tag Archives: sai pallavi

சாய் பல்லவிக்கு அந்த மாதிரி ட்ரெஸ் கொடுப்பீங்களா? ஓப்பனாக கேட்ட ஸ்ரீ காந்த்.!

தமிழ் சினிமாவில் எவ்வளவு முயன்றும் இன்னமும் ரீ என்ட்ரி கொடுக்க முடியாத ஒரு நடிகராக ஸ்ரீகாந்த் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் கதாநாயகனாக நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார் ஸ்ரீகாந்த்.

அதற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் என்பது குறைய துவங்கியது அவர் நடித்த திரைப்படங்களுக்கு வரவேற்புகளும் குறைய தொடங்கியது. இந்த நிலையில் அவருக்கு ஒரு நல்ல திரைப்பட வாய்ப்பாக அமைந்த திரைப்படம் தான் நண்பன் திரைப்படம்.

நண்பன் திரைப்படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்ரீகாந்த் ஆனாலும் கூட அதற்கு பிறகு அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

கிடைத்த படங்களும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதனால் இப்பொழுதுவரை ஸ்ரீகாந்த் சினிமாவில் வரவேற்பை பெறாமலே இருந்து வருகிறார்.

இந்த நிலையில் சமீப காலங்களாக சில திரைப்படங்களில் ஸ்ரீகாந்த் நடித்து வருகிறார். அது குறித்து சமீபத்தில் பேட்டியில் பேசியிருந்தார் அப்பொழுது நடிகைகளின் ஆடை சுதந்திரம் குறித்து அவர் பேசியிருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது நடிகைகள் எந்த ஆடைகளை அணிய விருப்பப்படுகிறார்களோ அந்த ஆடைக்கு அவர்களை விட்டு விடலாம் அதை விட்டுவிட்டு யாரும் அவர்களை வற்புறுத்தி இந்த ஆடையை தான் அணிய வேண்டும் என்று கூறக்கூடாது.

நடிகைகளும் அந்த மாதிரி நிராகரிப்பதற்கு கற்றுக் கொள்ள வேண்டும் உதாரணத்திற்கு நடிகை சாய் பல்லவியிடம் கவர்ச்சி ஆடையை போட்டுக் கொள்ளும்படி எந்த இயக்குனராவது கேட்டு விட முடியுமா? ஏனெனில் சாய்பல்லவி அந்த மாதிரி ஆடைகளை மறுத்துவிடுவார்.

அந்த ஒரு அதிகாரத்தை நடிகைகள் கொண்டிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் ஸ்ரீகாந்த்.

நடித்த படத்தில் சாய் பல்லவி செய்த சம்பவம்.! அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் இவர்தான்.!

நடிகை சாய் பல்லவி அமரன் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் முக்கியமான நடிகையாக மாறி இருக்கிறார் பெரும்பாலும் நடிகைகள் அழகின் மூலமாக மட்டுமே தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.

அதில் ஒரு சில நடிகைகள் மட்டுமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி இடத்தை பிடித்து விடுகின்றனர். அப்படி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகைகளின் மார்க்கெட் என்பது சீக்கிரத்திலேயே உயர்ந்து விடுகிறது.

அப்படிதான் இப்பொழுது சாய் பல்லவியின் மார்க்கெட் உயர்ந்து இருக்கிறது அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு எவ்வளவு முக்கிய கதாபாத்திரம் இருந்ததோ அதே அளவிற்கு முக்கியமான கதாபாத்திரம் சாய்பல்லவிக்கும் இருந்தது.

sai pallavi

மேலும் சாய் பல்லவியின் அபார நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. அதனை தொடர்ந்து தெலுங்கில் தற்சமயம் நாகசைதன்யா நடித்த தண்டேல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் சாய் பல்லவி.

இந்த திரைப்படம் ஆரம்ப கட்டத்தில் அதிக எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் கூட தற்சமயம் 100 கோடிக்கு ஓடி வெற்றியை கொடுத்திருக்கிறது இந்த திரைப்படம். இதற்கு என்ன காரணம் என்று பார்க்கும்பொழுது நடிகை சாய் பல்லவிக்காகதான் இந்த படம் ஓடியிருப்பதாக கூறுகின்றனர்.

எப்படி ஒரு நடிகருக்கு ரசிகர் பட்டாளம் இருக்குமோ அந்த ரசிகர் பட்டாளம் மூலமாக படத்திற்கு வெற்றி கிடைக்குமோ அதேபோல சாய்பல்லவிக்கு இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. சொல்லப்போனால் தென்னிந்தியாவில் இப்பொழுது நயன்தாராவை விட அதிகமான ரசிகபட்டாளத்தைக் கொண்ட ஒரு நடிகையாக சாய்பல்லவி இருக்கிறார் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

எனவே சின்ன பட்ஜெட் படத்தில் சாய் பல்லவி நடித்தால் கூட சாய்பல்லவிக்காக அந்த படம் ஓடும் என்றும் பேச்சுக்கள் இருக்கிறது. இதனால் சாய் பல்லவியின் சம்பளமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷுடன் இணையும் சாய்பல்லவி..! அடுத்த படம் குறித்து வந்த அப்டேட்..!

நடிகர் தனுஷ் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார். தனுஷின் தனிப்பட்ட நடிப்புக்கு என்று ஒரு மரியாதை இருக்கவே செய்கிறது. பொதுவாக ஒருவர் கமர்ஷியல் நடிகராகிவிட்டார் என்றால் தொடர்ந்து சண்டை படங்களில்தான் நடித்து வருவார்.

ஆனால் தனுஷை பொறுத்தவரை வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். அப்படி அவர் நடித்த திருச்சிற்றம்பலம், அசுரன் மாதிரியான படங்கள் எல்லாம் வெகுவாக மக்கள் மத்தியில் பேசப்பட்ட படங்களாக இருந்தன.

இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் தனுஷ் தற்சமயம் இட்லிக்கடை என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ராயன் திரைப்படம் போலவே இந்த திரைப்படத்தையும் தனுஷே இயக்கி நடிக்கிறார்.

இதற்கு பிறகு லப்பர் பந்து திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் நடிகர் அருள்நிதிக்கும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் ஏற்கனவே சாய் பல்லவியும் தனுஷும் இணைந்து மாரி 2 திரைப்படத்தில் நடித்தனர். அந்த படத்திலேயே அவர்களுடைய கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது.

எனவே இந்த திரைப்படமும் அவர்களுக்கு நல்ல வரவேற்பை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்புவுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி அந்த மாதிரி காட்சிகள் வைப்பதில் பிரச்சனை.!

தமிழ் சினிமாவில் தற்சமயம் அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக நடிகை சாய் பல்லவி இருந்து வருகிறார். பெரும்பாலும் சாய் பல்லவி நடிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு கூடி வருகிறது. அமரன் திரைப்படத்திற்கு பிறகு தற்சமயம் தமிழில் மிக முக்கியமான நடிகையாக மாறியுள்ளார் சாய் பல்லவி.

ஆரம்பம் முதலே அவரின் நடனம் காரணமாக சாய் பல்லவி பிரபலமானவராகவே இருந்து வருகிறார். இந்த நிலையில் அமரன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்த தண்டேல் என்கிற திரைப்படத்தில் சாய் பல்லவி நடித்திருந்தார்.

சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் அடுத்தும் வரிசையாக தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று வருகிறார் சாய் பல்லவி.

அப்படியாக சாய் பல்லவி அடுத்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பார்க்கிங் திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்த திரைப்படத்தை இயக்க உள்ளார்.

இதில் சாய் பல்லவிக்கு முக்கிய கதாபாத்திரம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் வழக்கமான சிம்பு படங்களில் உள்ளது போல இந்த படத்தில் கவர்ச்சி காட்சிகள் வைக்க முடியாது. சாய் பல்லவி அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார் என பேச்சுக்கள் இருக்கின்றன.

அதே சமயம் இயக்குனர் ராம்குமார் அந்த மாதிரியான கதை கருவை வைத்து திரைப்படம் எடுக்க வாய்ப்பில்லை என்பதால் இந்த திரைப்படம் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

வாரிசு நடிகருக்கு மனைவியாகும்  சாய் பல்லவி.. இனிமே கைல பிடிக்க முடியாது போல..!

நடிகை சாய்பல்லவி தற்சமயம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியா முழுவதுமே வாய்ப்பை பெற்று நடித்து வரும் நடிகையாக இருக்கிறார். முதன் முதலாக மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மூலமாக இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அந்த திரைப்படமே அவருக்கு பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது. அதற்கு பிறகு தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அதிகமாக வாய்ப்புகளை நடித்து வந்தார் சாய் பல்லவி.

மற்ற சினிமாவுடன் ஒப்பிடும்போது தமிழ் சினிமாவில் குறைவான படங்களிலேயே நடித்துள்ளார் சாய் பல்லவி. ஆனால் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் அவருக்கு முக்கிய படமாக அமைந்தது.

sai pallavi

அமரன் திரைப்படத்தில் இந்து ரெபேக்கா வர்கீஸ் என்கிற மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாய் பல்லவி. அதனை தொடர்ந்து அதிக வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

அடுத்ததாக பாலிவுட்டில் பெரும்பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் சாய் பல்லவி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டிலும் வாய்ப்புகள் வர துவங்கியுள்ளது.

நடிகர் அமீர்கானின் மகன் நடிக்கும் திரைப்படத்தில் அடுத்து அவர் நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திரைப்படத்தில் அவருக்கு மனைவி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சாய்பல்லவி.

அந்த படத்தை தொடர்ந்து அவருக்கு அதிகமாக வாய்ப்புகள் கிடைக்க உள்ளன என பேச்சுக்கள் இருக்கின்றன.

காட்டி நடித்தால்தான் பாலிவுட்டில் சான்ஸ்.. சாய் பல்லவிக்கு வந்த பிரச்சனை..!

தமிழ் தெலுங்கு அன்று இரண்டு மொழிகளிலும் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை சாய் பல்லவி. அதிலும் தமிழில் சமீபத்தில் அவர் நடித்த அமரன் திரைப்படம் அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.

அதனை தொடர்ந்து எப்படியும் தமிழில் ஒரு ரவுண்டு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு நடுவே ஹிந்தியில் ராமாயணம் திரைப்படத்தில் சீதையாக நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்திருந்தது.

பலரும் இதற்காக சாய்பல்லவியை விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் அமரன் திரைப்படம் ஹிந்தியில் கூட வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து சாய் பல்லவி நடிப்பதற்கு இப்பொழுது இந்தியிலும் வரவேற்புகள் அதிகரித்து இருக்கிறது.

sai pallavi

இந்த படத்திற்கு பிறகு ஹிந்தியில் நிறைய திரைப்படங்களில் சாய்பல்லவிக்கு வாய்ப்புகள் வந்து வண்ணம் இருக்கிறது. தற்சமயம் அமீர்கானின் மகனுடன் இன்னொரு திரைப்படத்தில் இவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அடுத்தடுத்து நடிக்கும் திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிப்பதற்கு பாலிவுட்டில் அழைக்கின்றனர் என்று கூறப்படுகிறது. சாய்பல்லவியை பொருத்தவரை அவர் தொடர்ச்சியாக நடிக்க கூடாது என்கிற நோக்கத்துடன் இருந்தவர் எனவே இதை எப்படி கையாள போகிறார் என்பது கேள்வியாக இருக்கிறது.

ஒரு தடவை மட்டும்தான்.. பத்திரிக்கையாளர் கேட்ட அந்த கேள்வி.. கடுப்பான நடிகை சாய் பல்லவி..!

தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக மாறியிருப்பவர் நடிகை சாய் பல்லவி. பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சாய்பல்லவி மருத்துவ படிப்பை படித்துவிட்டு பிறகு சினிமாவின் மீது ஆர்வம் கொண்டு சினிமாவிற்கு நடிக்க வந்துவிட்டார்.

சினிமாவிற்கு வந்த பிறகு சாய் பல்லவியின் நடனத்திற்கு தனி வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து சினிமாவிலும் பிரபல நடிகையாக மாறினார் சாய்பல்லவி.

இந்த நிலையில் தற்சமயம் தமிழில் அமரன் திரைப்படத்தில் நடித்து அதன் மூலமாக இவர் அதிக வரவேற்பு பெற்று இருக்கிறார். தொடர்ந்து நிறைய விருதுகளையும் வாங்கி வருகிறார். சமீபத்தில் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் அமரன் திரைப்படத்திற்காக சாய் பல்லவிக்கு விருது வழங்கப்பட்டது.

அப்பொழுது பத்திரிகையாளர்களை சந்தித்த சாய் பல்லவியிடம் அது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அமரன் திரைப்படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து இருந்தார் சாய் பல்லவி. அப்பொழுது தொடர்ந்து அவரை நிறுத்தி இன்னொரு கேள்வி கேட்க நினைத்தனர் பத்திரிகையாளர்கள்.

உடனே கோபம் அடைந்த சாய் பல்லவி ஒரு கேள்விக்குதான் பதில் சொல்ல முடியும் .சர்வதேச திரைப்பட விழா குறித்தும் பேசிவிட்டேன் விருது குறித்தும் பேசிவிட்டேன், பிறகு என்ன என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

ஒரு அளவுக்குதான் பொறுமை..! பிரபல பத்திரிக்கையால் கடுப்பான சாய்ப்பல்லவி..! அப்ப அது உண்மை இல்லையா..!

தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளின் மிக முக்கியமானவர் நடிகை சாய் பல்லவி. சாய் பல்லவியை பொருத்தவரை முக்கியமான கதாபாத்திரங்களாக இருந்தால் மட்டும்தான் அந்த திரைப்படத்தில் அவர் நடிப்பார்.

சும்மா வந்துவிட்டு செல்லும் கதாநாயகியின் கதாபாத்திரம் என்றால் அதில் சாய் பல்லவி பெரிதாக நடிக்க மாட்டார். இப்படியான கதை தேர்ந்தெடுப்புகளின் காரணமாக நிறைய படங்களில் சாய் பல்லவிகளுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கிறது.

ஆனாலும் கூட அவர் நடிக்கும் குறைவான படங்கள் கூட அவருக்கு அதிக வரவேற்பு பெற்று தருகிறது. தமிழில் மாரி 2, கார்கில், அமரன் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் அவருக்கு முக்கியமான திரைப்படங்களாக இருந்து வருகின்றன.

சாய்பல்லவி வளர்ச்சி:

அமரன் திரைப்படத்திற்கு பிறகு சாய் பல்லவி சம்பளம் உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் அடுத்து பாலிவுட்டில் வெளியாக இருக்கும் ராமாயணம் திரைப்படத்தில் சீதையாக நடிக்கிறார் சாய்பல்லவி.

sai pallavi

இதன் மூலமாக இந்திய அளவில் அவருக்கு மார்க்கெட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பொதுவாக பாலிவுட் சினிமாவில் என்றாலே கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்கிற ஒரு விஷயம் இருக்கும். ஆனால் சாய் பல்லவி சீதையாக நடிக்க செல்வதால் அந்த பிரச்சனையே அவருக்கு கிடையாது.

இந்த நிலையில் இதை போல பாலகிருஷ்ணா உடன் சேர்ந்து ராமாயண கதையில் நயன்தாரா சீதையாக நடித்தார். அப்பொழுது நயன்தாரா படப்பிடிப்பு முடிவு வரையில் அசைவம் எதுவும் சாப்பிடாமல் இருந்தார். தற்சமயம் அதை விரதத்தை சாய் பல்லவியும் கடைபிடிப்பதாக நிறைய பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டன.

கடுப்பான சாய்பல்லவி:

இந்த நிலையில் இதனால் கடுப்பான சாய்பல்லவி தொடர்ந்து வதந்திகளை பரப்பாதீர்கள் என்று விமர்சனம் செய்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். மேலும் பிரபல ஊடகம் ஒன்று போட்ட பதிவையும், அதோடு சேர்த்து போட்டு இருக்கிறார்.

இதனை அடுத்து அந்த ஊடகத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர். எனவே இதற்காக சாய்பல்லவி எதுவும் விரதம் இருக்கவில்லை என இதன் மூலம் உறுதியாகிறது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் சாய் பல்லவியின் சாதனைகள்.. மற்ற நடிகைகள் பக்கத்துல வர முடியாது போல..!

தமிழ் சினிமாவில் தற்சமயம் ஒரு முக்கியமான நடிகையாக மாறி இருப்பவர் நடிகை சாய் பல்லவி. அவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் அவருக்கு வரவேற்பைதான் பெற்று தருகின்றன.

ஏற்கனவே மாரி 2 திரைப்படத்தில் அவர் நடித்த ஆனந்தி என்கிற கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டது. அதற்கு பிறகு அவர் நடித்த கார்கி திரைப்படம் தமிழக அளவில் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் சாய் பல்லவிக்கும் அது நல்ல அந்தஸ்தை பெற்று கொடுத்தது.

சாய்பல்லவியை பொறுத்தவரை வாய்ப்பு கிடைக்கிறது என்று அனைத்து திரைப்படங்களிலும் அவர் நடிப்பதில்லை. பெரும்பாலும் கதையை கேட்ட பிறகுதான் அவர் திரைப்படங்களில் நடிக்கிறார். முக்கியமாக அவரது கதாபாத்திரத்திற்கு கதையில் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடித்து வருகின்றார் சாய்பல்லவி.

சாய்பல்லவியின் மார்க்கெட்:

sai pallavi

இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். அமரன் திரைப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான ஒரு கதாபாத்திரமாக சாய் பல்லவியின் கதாபாத்திரம் இருந்தது. இந்த நிலையில் சாய்பாபாவின் மார்க்கெட் இன்னும் அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில் சாய்பல்லவி பாடல்களுக்கு தமிழில் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே சாய் பல்லவியும் தனுஷும் இணைந்து மாரி 2 திரைப்படத்தில் ரவுடி பேபி என்கிற ஒரு பாடலில் ஆடியிருந்தனர்.

அந்த பாடல் பலகோடி பார்வைகளை கடந்து பெரும் சாதனையை படைத்தது. தற்சமயம் அமரன் திரைப்படத்தில் வந்த மின்னலே பாடலும் அதே மாதிரியான சாதனையை படைத்திருக்கிறது. இதற்கு இசையமைப்பாளர் தானே காரணமாக இருக்க முடியும் என்று ஒரு பக்கம் கூறினாலும் கதாநாயகியின் நடனம் மற்றும் முகபாவனைகளும் இந்த பாடல்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

அந்த வகையில் சாய்பல்லவி இதற்கு காரணமாக இருக்கிறார். எனவே தமிழில் இவருக்கு இன்னமும் அதிகமாக வரவேற்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாய்ப்பல்லவி தூக்கிப்போட்ட சீட்டால் வந்த பிரச்சனை.. 1 கோடி இழப்பீடு வேண்டும்..!

தென்னிந்திய சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகைகள் மிகக் குறைவுதான். அப்படியான நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை சாய் பல்லவி. எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை சிறப்பாக நடிக்க கூடிய நடிகை என்பதாலேயே சாய் பல்லவி மிக பிரபலமானவர்.

பெரும்பாலும் தென்னிந்திய சினிமாவில் நிறைய நடிகைகள் ஒரு கட்டத்திற்கு மேல் கவர்ச்சியாக நடிக்க துவங்கி விடுவார்கள். ஆனால் இப்பொழுது வரை கவர்ச்சியாக நடிக்காத ஒரு நடிகையாக சாய் பல்லவி இருந்து வருகிறார்.

சாய்பல்லவி நடித்த அமரன் திரைப்படம் சமீபத்தில் அதிக வரவேற்பு பெற்றது. 300 கோடி ரூபாய் வரையில் வசூல் பெற்ற இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு சாய்பல்லவி முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

சாய்ப்பல்லவி பிரச்சனை:

amaran 2

முக்கியமாக ஆந்திர பிரதேசம் மாதிரியான மாநிலங்களில் அமரன் திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைப்பதற்கு சாய் பல்லவிதான் முக்கிய காரணமாக இருந்தார்.

ஏனெனில் அவருக்கு தெலுங்கு சினிமாவில் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் அமரன் திரைப்படத்தில் வந்த ஒரு காட்சி தற்சமயம் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது. அமரன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் சாய்பல்லவி சிவகார்த்திகேயனுக்கு தன்னுடைய மொபைல் நம்பரை எழுதிக் கொடுப்பதாக ஒரு காட்சி இருக்கும்.

அதில் எழுதப்பட்ட மொபைல் நம்பர் சென்னையை சேர்ந்த ஒரு இளைஞரின் மொபைல் எண் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பலரும் அது சாய் பல்லவியின் நம்பர் என்று நினைத்து இந்த இளைஞருக்கு போன் செய்திருக்கின்றனர்.

இதனால் கோபமடைந்த இளைஞர் தற்சமயம் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அமரன் திரைப்பட குழு மீது வழக்கு ஒன்றை தொடர்ந்து இருக்கிறார் இந்த நிலையில் அவருக்கு இழப்பீடு கிடைக்குமா கிடைக்காதா என்பது குறித்துதான் பேச்சுக்கள் சென்று கொண்டுள்ளன.

10 நிமிஷம் என்னால மூச்சு விட முடியல.. சாய் பல்லவியால் ஜோதிகாவுக்கு நடந்த நிகழ்வு.. பதிவாக வெளியிட்ட ஜோதிகா.!

Sai Pallavi made his debut among South Indian fans with the movie Premam. His recent movie Amaran was better than expected. In this situation, Jyothika has given a review about her performance in this movie

பிரேமம் திரைப்படத்தில் நடித்தது முதலே தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனிப்பட்ட மதிப்பை பெற்றவராக நடிகை சாய் பல்லவி இருந்து வருகிறார். பெரும்பாலும் எல்லா நடிகைகளுக்கும் எதிர்மறையான விமர்சனங்களை கொடுக்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

ஆனால் சாய் பல்லவிக்கு மட்டும் அப்படியான ரசிகர்களை அதிகமாக பார்க்க முடியாது. ஏனென்றால் மிகவும் சிம்பிளான ஒரு நடிகையாக சாய்பல்லவி இருந்து வருகிறார்.

பெரிதாக மேக்கப் போட்டுக் கொள்ள மாட்டார். மிகவும் மாடர்னான உடைகளை அணிய மாட்டார். பார்ப்பதற்கு நமது ஊர்களில் தெருக்களில் பார்க்கும் பெண்களைப் போல சாதாரணமாக தெரியக்கூடியவர் சாய்பல்லவி.

sai pallavi

ஜோதிகா சொன்ன விஷயம்:

இதனாலேயே ரசிகர்களுடன் ஒன்றி போன ஒரு நடிகையாக இவர் இருக்கிறார் சாய்பல்லவி தமிழில் பெரும்பாலும் நல்ல நல்ல கதை களங்களைதான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் அமரன் திரைப்படத்தில் இவர் நடித்திருக்கும் நடிப்பு மிக சிறப்பாக இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் இதனை பாராட்டி நடிகை ஜோதிகா தனி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் எவ்வளவு சிறப்பான நடிப்பை வெளியிட்டிருக்கிறீர்கள் அதுவும் கிளைமாக்ஸில் நீங்கள் அழுத அந்த காட்சி மிகவும் அருமையாக இருந்தது.

பத்து நிமிடம் என்னால் அந்த காட்சியை பார்த்துவிட்டு மூச்சு விட முடியவில்லை என்று ஜோதிகா கூறி இருக்கிறார். இதற்கு பதில் அளித்த சாய் பல்லவி மிகுந்த நன்றிகளை தெரிவித்திருக்கிறார்.

எந்த நடிகையாலும் முடியாது… 3 நிமிஷத்தில் அதை பண்ணிடுவேன்.. அதிர்ச்சி கொடுத்த நடிகை சாய்பல்லவி..!

Actress Saipallavi made her debut in South Indian cinema with the movie Premam. Sai Pallavi has been talking about many things to create awareness. Recently, his talk about actresses’ clothes has become popular

பெரிதாக மேக்கப் எதுவும் போட்டுக் கொள்ளாமல் சிம்பிளாக பட நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் ஒரு நடிகை என்றால் அது நடிகை சாய் பல்லவி மட்டும்தான்.

தென்னிந்தியாவிலேயே பெரிதாக மேக்கப் மற்றும் மாடர்ன் உடைகளை விரும்பாத ஒரு நடிகையாக சாய் பல்லவி இருக்கிறார். இதனாலேயே சாய் பல்லவிக்கு என்று அதிக ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

பெரும்பாலும் நடிகைகள் சினிமாவில் பிரபலம் அடைவதற்காக முக அலங்காரங்களில் துவங்கி முகத்தில் அறுவை சிகிச்சைகள் வரைக்கும் செய்து கொள்கின்றனர். ஆனால் சாய் பல்லவியை பொருத்தவரை தனக்கு கிடைக்கும் மார்க்கெட் மட்டுமே போதுமானது என்று இயற்கையான முக அழகுடன் தொடர்ந்து இருந்து வருகிறார்.

இதனாலையே சாய் பல்லவிக்கு ரசிகர்கள் அதிகம் என்று கூறலாம். மேலும் வெள்ளை நிறம்தான் அழகு என்பதை ஒரு மூடநம்பிக்கை என்று முதன் முதலில் கூறிய தமிழ் நடிகை என்றால் அது சாய் பல்லவி தான்.

சாய் பல்லவி கொடுத்த பதில்:

இப்படி தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தான் சாய் பல்லவியின் பேச்சுக்கள் இருந்து வந்துள்ளன. இதே மாதிரி சமீபத்தில் அவர் பேசியிருந்த விஷயம் அதிக வரவேற்பை பெற்றது. சாய்பல்லவியிடம் ஒரு பேட்டியில் எதற்காக எல்லா நிகழ்வுகளுக்கும் புடவை கட்டிக் கொண்டு வருகிறீர்கள் என்று கேட்டிருந்தனர்.

அதற்கு பதில் அளித்த சாய் பல்லவி அதுதான் எனக்கு மிகவும் வசதியான ஒரு ஆடையாக இருக்கிறது. புடவையை கட்டிக் கொண்டோம் என்றால் உடல் பாகங்கள் அனைத்தையும் அது மூடிவிடும். நிகழ்ச்சிகளில் போய் அமர்ந்து விட்டால் நமக்கு எந்த பயமும் இருக்காது.

ஆனால் மாடர்ன் உடைகளை அணிந்து கொண்டு போனால் எங்கு துணி விலகும் என்கிற ஒரு பயத்திலேயே அமர்ந்திருக்க வேண்டியிருக்கும். மேலும் மற்ற உடைகளை அணிவதற்கு நிறைய நேரம் எடுக்கும் ஆனால் மூன்று நிமிடத்தில் நான் புடவையை கட்டி விடுவேன்.

எனக்கு புடவை அவ்வளவு எளிதானது. அதனால்தான் நான் புடவை கட்டிக்கொண்டு வருகிறேன் என்று கூறியிருக்கிறார் சாய் பல்லவி. இதற்கு பதில் அளித்து வரும் ரசிகர்கள் மூன்று நிமிடத்தில் புடவை கட்டுவதற்கு தமிழ் சினிமாவில் நடிகைகளே இல்லை. சினிமா நடிகைகளிலேயே சாய் பல்லவியால் மட்டும்தான் முடியும் என்று நினைக்கிறேன் என்று பதில் அளித்து வருகின்றனர்.