மத்தவங்க மாதிரி இவர் இல்ல.. விஜய் குறித்து அஜித்தின் தாயார் உருக்கம்..!

நடிகரும் த.வெ.க கட்சியின் தலைவருமான விஜய் தொடர்ந்து சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். அரசியலில் ஈடுபாடு காட்டி வரும் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு இருந்தே மக்களுக்கு ஆதரவாக நிறைய முறை நின்றுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் திருப்புவனத்தை சேர்ந்த அஜித் என்கிற இளைஞன் தனிப்படை போலீசார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிக சர்ச்சையை கிளப்பி வந்தது. மக்கள் தொடர்ந்து காவலர்கள் மற்றும் அரசுக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கினர்.

இதனையடுத்து மதுரை உயர்நீதிமன்றத்தில் இது சிறப்பு வழக்காக எடுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதற்கு நடுவே த.வெ.க தலைவர் விஜய் நேற்று எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் அஜித்தின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னதுடன் 2 இலட்சம் ரூபாய் இழப்பீடாகவும் கொடுத்துள்ளார் விஜய்.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.