அந்த பழக்கத்தால் வாய்ப்பை இழந்த முரளி.. ஓப்பன் டாக் கொடுத்த இயக்குனர்..!

ரஜினி மாதிரியான நடிகர்கள் பிரபலமாக இருந்த அதே காலகட்டங்களில் வளர்ச்சி பெற்ற ஒரு நடிகராக இருந்தவர் நடிகர் முரளி. ஆரம்பத்தில் முரளிக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது.

ஆனால் போக போக அவருக்கான வாய்ப்புகள் என்பதே குறைய தொடங்கியது. பெரும்பாலும் மற்ற நடிகர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு காரணமாக முன்பு நடித்த நடிகர்களுக்கு வரவேற்பு என்பது குறையும்.

ஆனால் முரளியை பொருத்தவரை அவருடைய கேரக்டர் தான் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு காரணம் என்கிறார் இயக்குனர் வி சேகர். இயக்குனர் வி சேகர் சமீபத்தில் ஒரு பேட்டியில் குறித்து கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது முரளியை பொறுத்தவரை அவருக்கு வாய்ப்புகள் என்பது அதிகமாகவே வந்து கொண்டிருந்தது.

ஆனால் படப்பிடிப்புகளுக்கு அவர் நேரத்திற்கு வரமாட்டார் மது அருந்துவது பெண்கள் பழக்கம் போன்ற பழக்கங்கள் முரளிக்கு இருந்தது. எவ்வளவோ தயாரிப்பாளர்கள் அவரிடம் படப்பிடிப்பு சமயங்களில் இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கூறினாலும் அவர் கேட்கவில்லை.

ஆர்.பி.சௌத்ரி மாதிரியான பெரிய தயாரிப்பாளர்களை கூறியும் அவர் கேட்கவில்லை இதனால் அந்த தயாரிப்பாளர்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் அவரை கைவிட தொடங்கினர். இதனால்தான் முரளிக்கு வாய்ப்புகள் என்பதே கிடைக்காமல் போனது என்று கூறியிருக்கிறார் வி சேகர்.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version