தயவு செஞ்சு என் முன்னாடி அந்த வார்த்தையை சொல்லாதீங்க!.. நிருபரிடம் கடுப்பான விஷால்!..

தமிழ் சினிமா நடிகர்களில் மிக பிரபலமானவர் நடிகர் விஷால். செல்லமே திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். சினிமாவிற்கு வந்த காலத்தில் இருந்து இப்போது வரை விஷால் படத்தில் அதிகமாக அவர் நகைச்சுவை செய்வதை பார்க்க முடியும்.

அது அவருக்கு ஓரளவு செட் ஆகிறது என்றே கூறலாம். சினிமாவிற்கு வந்த ஆரம்பம் முதலே அரசியல் மீது ஆர்வம் காட்டி வருகிறார் விஷால். சமூகத்தில் சம காலத்தில் நடக்கும் அரசியல் குறித்து அவ்வப்போது பேசி வருகிறார் விஷால்.

vishal1
vishal1

இதற்கு நடுவே அவருக்கு கடன் தொடர்பாக இடையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டன. அதனால் தற்சமயம் ரத்னம் திரைப்படம் வெளியாகும்போது கூட சில பிரச்சனைகள் ஏற்பட்டன.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவரிடம் பேசிய தொகுப்பாளர் ரமணநந்தா என்னும் நபரின் கடன் பிரச்சனையை பேசியதும் விஷால் கொஞ்சம் கோபமாகிவிட்டார். வாழ்க்கையில் நான் சில கெட்ட வார்த்தைகள், பெயர்களை எல்லாம் திரும்ப கேட்கவே கூடாது என நினைக்கிறேன்.

எனவே அதை பற்றி பேசாதீங்க வேற ஏதாவது பேசலாம் என பேசியிருக்கிறார்.