Connect with us

படப்பிடிப்பில் கண்ணீர் வடித்த இயக்குனர்.. வீர தீர சூரன் படத்தில் இயக்குனர் செய்த சம்பவம்.!

Tamil Cinema News

படப்பிடிப்பில் கண்ணீர் வடித்த இயக்குனர்.. வீர தீர சூரன் படத்தில் இயக்குனர் செய்த சம்பவம்.!

Social Media Bar

நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் இன்று திரையரங்கில் வெளியாக இருக்கும் திரைப்படம் வீர தீர சூரன். இந்த திரைப்படத்தின் சில பிரச்சனைகள் காரணமாக முதல் காட்சியே 11 மணிக்குதான் வெளியாக இருக்கிறது.

சிறப்பு காட்சிகள் எதுவும் இந்த திரைப்படத்திற்கு வழங்கப்படவில்லை. ஆனால் இந்த திரைப்படம் நல்ல வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அருண்குமார் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் நடித்த மலையாள நடிகரான சுராஜ் பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் விஷயங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. இயக்குனர் அருண்குமாரை பொறுத்தவரை ஒரு காட்சி நன்றாக வரவில்லை என்றால் திரும்பத் திரும்ப எடுத்துக் கொண்டே இருப்பாராம்.

உதாரணத்திற்கு ஒரு நாள் இரவில் படப்பிடிப்பு காட்சியை எடுக்கப்பட வேண்டி வந்தது அந்த காட்சி திரும்பத் திரும்ப எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிவதற்கு காலை நான்கு மணி ஆகிவிட்டது.

ஆனாலும் கூட காலை 4 மணிக்கு கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தாராம் இயக்குனர். என்னவென்று கேட்ட பொழுது இந்த காட்சியே எனக்கு பிடிக்கவில்லை மீண்டும் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது என கூறி இருக்கிறார்.

மீண்டும் ஒரு நாளில் போட வேண்டிய ஷெட்டை மறுபடி அரை மணி நேரத்தில் போட்டு இருக்கின்றனர் அதன் பிறகும் படப்பிடிப்பு முடிந்த பிறகு இவர் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார் என்னவென்று கேட்டபோது இப்பொழுது ஆனந்தத்தில் அழுகிறேன் என்று கூறியிருக்கிறார் அருண்குமார் இந்த விஷயத்தை சுராஜ் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top