Cinema History
எஸ்.ஜே சூர்யா முதன் முதலில் நடிச்ச படம் எது தெரியுமா? – அப்பவே சினிமாவுக்கு வந்துட்டாரா?
தமிழ் சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக வந்து, இயக்குனராக மாறி, பிறகு கதாநாயகனாக மாறி தற்சமயம் வில்லனாக நடித்து வருபவர் எஸ்.ஜே சூர்யா.

நியூ போன்ற திரைப்படங்கள் வந்த காலங்களில் இவர் சர்ச்சைக்குரிய நடிகர் என்று அழைக்கப்பட்டார். ஆனால் அந்த காலக்கட்டங்களிலேயே தொடர்ந்து நியூ, வியாபாரி என புது புது கதைகளை படமாக்கி வந்தவர் எஸ்.ஜே சூர்யா.
தற்சமயம் மாநாடு திரைப்படத்தில் வில்லனாக தோன்றினார். அதில் இருந்து அவருக்கு மீண்டும் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. பழைய பேட்டி ஒன்றில் அவரது ஆரம்ப கால சினிமா வாழ்க்கை பற்றி பேசப்பட்டது.
அப்போது அதுக்குறித்து பேசிய எஸ்.ஜே சூர்யா “அப்போது நான் தமிழ் சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக பணிப்புரிந்து வந்தேன். அப்படி ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நான் நடித்த படம் கிழக்கு சீமையிலே. அதில் ஒரு சண்டை காட்சியில் நான் வருவேன்” என கூறியுள்ளார் எஸ்.ஜே சூர்யா.
மேலும் அப்போதெல்லாம் திரையில் நாம் தெரிவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அது அனைத்தையும் செய்ய வேண்டும் என இருந்தேன். முக்கியமாக நடிப்பின் மீது நான் மிகுந்த ஆர்வத்தில் இருந்தேன்” என கூறுகிறார் எஸ்.ஜே சூர்யா.
