விடுதலை திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து கதாநாயகனாக நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார் சூரி. நிச்சயமாக அவர் நடிக்கும் திரைப்படங்களில் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு வகையான கதைகளம் அமைந்திருப்பதை பார்க்க முடிகிறது.
கிடைக்கும் கதைகளில் எல்லாம் நடிக்காமல் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த வருகிறார் சூரி. விடுதலை திரைப்படத்தில் நடித்த பொழுது சந்தேகத்துடன் தான் அந்த படத்தில் நடித்தேன் என்று சூரியே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
அதில் அவர் கூறும் பொழுது வெற்றிமாறன் என்னிடம் முடிந்த அளவுக்கு நன்றாக இந்த படத்தை பண்ண வேண்டும் என்று கூறினார். நானும் நடித்து கொடுத்தேன். படம் முடிந்த பிறகு வெற்றிமாறன் படத்தை பார்த்துவிட்டு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக மிகச் சிறப்பாக நடித்திருக்கிறீர்கள்.
இந்த படத்திற்கு பிறகு உங்களுக்கு காமெடி நடிகராக நடிப்பதற்கு வாய்ப்புகள் வருவது என்பது கடினம் தான் என்று என்னிடம் கூறினார். அதேபோல விடுதலை திரைப்படம் வெளியான பிறகு எனக்கு காமெடியனாக நடிப்பதற்கு வாய்ப்புகளை வரவில்லை தொடர்ந்து கதாநாயகனாக நடிப்பதற்கு மட்டும்தான் கதைகள் வந்து கொண்டுள்ளன என்று கூறியிருக்கிறார் சூரி.