9 பட சான்ஸை இழந்த விஷ்ணு விஷால்.. தரமான படம் எல்லாம் போய் இருக்கே..!

தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து ஓரளவு வரவேற்பு பெற்ற நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். அவர் நடித்த வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் துவங்கி அதற்கு பிறகு அவர் நடித்த ஜீவா, குள்ளநரி கூட்டம் மாதிரியான நிறைய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றன. இவ்வளவு வரவேற்பு பெற்றாலும் ஒரு கட்டத்தில் விஷ்ணு விஷாலுக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இந்த நிலையில்தான் அவருக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக ராட்சசன் […]

Continue Reading

அஜித்தோடு கூட்டு சேரும் ரஜினி பட இயக்குனர்.. இதுதான் கதையாம்..!

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் மிக முக்கியமானவராக அஜித் இருந்து வருகிறார். தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் என்று லிஸ்ட் எடுத்தால் அதில் முதல் ஐந்து நடிகர்களில் முக்கியமானவராக அஜித் இருப்பார் என்று கூறலாம். தொடர்ந்து அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கும் சினிமாவில் வரவேற்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் கார் ரேஸ் மாதிரியான மற்ற விஷயங்கள் மீது அஜித் கவனம் செலுத்தி வருவதால் வருடத்திற்கு ஒரு திரைப்படம் தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். கார் […]

Continue Reading

வேகத்தை அதிகரித்த பூமி.. குறையும் நாட்கள்..! எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானிகள்.!

சமீப காலங்களாகவே அறிவியல் சார்ந்து நடக்கும் நிறைய விஷயங்கள் மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தி வருகிறது. முக்கியமாக உலக அழிவு குறித்து எப்பொழுதுமே ஒரு வதந்தி என்பது மக்கள் மத்தியில் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. எப்போதுமே இந்த பயம் ஒரு பக்கம் மக்களுக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் பூமி தன்னை தானே சுற்றி வரும் வேகம் என்பது தற்சமயம் அதிகரித்து இருப்பது ஒரு அபாயகரமான விஷயமாக பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை 9 ஆம் தேதி பூமி சாதாரணமாக சுற்றுவதை […]

Continue Reading

10 லட்சம் கடனை அடைத்த ஏ.ஐ… 30 நாட்களில் நடந்த சம்பவம்..!

ஏ.ஐயின் பயன்பாடு என்பது இப்போது அதிகரித்து வருகிறது. பல விஷயங்களுக்கு மக்கள் ஏ.ஐ ஐதான் நம்பி இருக்கின்றனர். மெயில் அனுப்புவதில் துவங்கி பல விஷயங்களுக்கு ஏ.ஐதான் உதவியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் ஒரு பெண் சாட் சிபிடியின் உதவியோடு தனது 10 லட்சம் கிரெடிட் கார்டு கடனை வெறும் 30 நாட்களில் அடைத்து சாதனை செய்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த இந்த பெண்ணுக்கு நல்ல வருமானம்தான் வந்துள்ளது. ஆனால் மோசமான நிதி மேலாண்மை காரணமாக அதிகமான […]

Continue Reading

பிறந்த குழந்தைக்கு சிந்தூர் என பெயர் சூட்டல்.. தேசபக்திகாக பெற்றோர் செய்த செயல்.!

இந்தியாவில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலில் முக்கியமான தாக்குதலாக பஹல்காம் தாக்குதல் இருந்து வருகிறது. இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட திட்டம்தான் ஆபரேஷன் சிந்தூர். அதிரடியாக பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பகுதிகளில் 9 வெவ்வேறு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது இந்தியா. இந்த தாக்குதலின் காரணமாக பயங்கரவாதிகள் பலர் தாக்கப்பட்டனர். இந்த நிலையில் பீகார் மாநிலம் கதிகாரில் ஒரு அரசு மருத்துவமனையில் ராக்கி குமாரி என்கிற பெண்ணுக்கு குழந்தை […]

Continue Reading

இந்தியாவுக்காக தாக்குதலை தொடங்கிய INS Vikrant – பாதிப்பிக்குள்ளான துறைமுகம்..!

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே அறிவிக்கப்படாத போர் ஒன்று துவங்கியுள்ளது. இந்த போர் பதற்ற நிலையில் தொடர்ந்து இரு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஆப்பரேஷன் சிந்தூர் என்கிற திட்டத்தை அமல்ப்படுத்தியது இந்தியா. அதன்படி பாகிஸ்தான் பகுதிகளில் பயங்கரவாதிகளின் பகுதிகளில் இந்தியா தனது தாக்குதலை துவங்கியது. நாட்டின் பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை ஒரு நாடு மற்றொரு நாட்டின் வான்வெளி எல்லைக்குள் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் […]

Continue Reading

ஒன்றிய அரசே தடை செய்த இந்திய தீவு.. போனால் மரணம்..! வந்த புதிய சிக்கல்.!

ஆங்கிலேயர்களின் நாகரிக வளர்ச்சிக்கு பிறகு பல தேசங்களை ஆங்கிலேயர்கள் காலணியாதிக்கத்திற்குள் கொண்டு வந்தனர். அதன் மூலம்தான் ஆங்கிலம் உலகம் முழுக்க பிரபலமான ஒரு மொழியாக மாறியது. நாகரிகமும் உலகம் முழுக்க பரவியது. ஆனால் இவ்வளவு நாகரிக தொழில்நுட்ப வளர்ச்சியிலும் கூட இன்னமும் ஆதிவாசியாக வாழ்ந்து வரும் மக்கள் கூட்டமும் இருந்துதான் வருகின்றனர். அமேசான் காடுகள் மாதிரியான பல பகுதிகளில் இப்படியான பழங்குடிகள் இருக்கின்றனர். அப்படியாக இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியான செண்டினல் என்கிற தீவிலும் கூட ஆதிவாசி […]

Continue Reading

இனி எடை விஷயத்தில் ஏமாற்ற முடியாது..! ரேசன் கடைக்கு தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை..!

நியாய விலை கடைகளில் நடக்கும் ஊழல்களை தடுப்பதற்காக தொழில்நுட்ப ரீதியாக பல விஷயங்களை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. முன்பெல்லாம் ரேஷன் கார்டுகள் என புத்தகம்தான் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் பிறகு அதற்கு பதிலாக க்யூ.ஆர் கோடுகளை கொண்ட ஸ்மார்ட் கார்டு என்னும் முறை கொண்டு வரப்பட்டது இதன் மூலமாக ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ரேஷன் கார்டு புதிதாக கொடுக்க தேவையில்லை என்கிற நிலை வந்தது. ஸ்மார்ட் கார்டு காணாமல் போனால் கூட எளிதாக ஆன்லைனில் விண்ணப்பித்து வாங்கி […]

Continue Reading

எமனாக மாறிய கோதுமை… பாதிக்கப்பட்ட கிராம மக்கள்..

பெரும்பாலும் மக்கள் பெரிதாக யோசிக்காமல் உண்ணும் உணவுகள் என்றால் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள்தான். ஆனால் அவற்றிலேயே பிரச்சனை ஏற்படும் போது அது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அப்படி ஆனால் ஒரு சம்பவம் இந்தியாவில் சமீபத்தில் நடந்திருக்கிறது மகாராஷ்டிராவில் உள்ள குல்தானா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கோதுமை சாப்பிட்டதால் பல பிரச்சினைகளை அனுபவித்து இருக்கின்றனர் கிராம மக்கள். கோதுமையை சாப்பிட்டதால் 217 க்கும் அதிகமான கிராம மக்களுக்கு முடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நிறைய உடல் […]

Continue Reading

நேதாஜி மரணத்தில் உள்ள மர்மம்.. பொய் சொன்னதா ஜப்பான்?. உண்மையை உடைத்த சீனா?.

200 வருடங்களுக்கு மேலாக இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர் ஆங்கிலேயர்கள். ஆனால் இரண்டாம் உலகப்போர் துவங்கியப்போது கதை மாறியது. பிரிட்டனால் இந்தியாவை தொடர்ந்து அடிமைப்படுத்தி வைத்திருக்க முடியவில்லை. மக்களும் தொடர்ந்து விடுதலைக்காக போராட துவங்கியிருந்தனர். அப்போது மக்களுக்கு சரியான பாதையை காட்டும் பல தலைவர்கள் உருவானார்கள். அதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸும் முக்கியமானவர். ஆரம்பத்தில் காந்தியின் கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார் சுபாஷ் சந்திர போஸ். ஆனால் நாளாடைவில் சண்டையிட்டுதான் சுதந்திரத்தை பெற முடியும் […]

Continue Reading
open ai

நிறுவனத்தின் தவறை சுட்டிக்காட்டியவுடன் மரணம்.. சாட் ஜிபிடியில் பணிப்புரிந்த இந்திய இளைஞர்.. மர்மம் என்ன?

தற்சமயம் ஏ.ஐ தொழில்நுட்பம் என்பது அதிக வளர்ச்சியை கண்டு வருகிறது மக்களும் ஏ.ஐ தொழில்நுட்பத்திற்கு பழக துவங்கி இருக்கின்றனர். மக்களை பழக வைக்க வேண்டும் என்பதற்காகவே நிறுவனங்கள் தொடர்ந்து இந்த சேவைகளை இலவசமாக கொடுத்து வருகிறது. ஓப்பன் ஏ.ஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி, google நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஜெமினி மாதிரியான எக்கச்சக்கமான ஏ.ஐ தொழில்நுட்பங்கள் இலவசமாக பயன்பாட்டில் இருக்கின்றன. ஆனால் எதிர்காலத்தில் இவற்றிற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஓபன் ஏ.ஐ நிறுவனத்தில் வேலை […]

Continue Reading
bike taxi

பைக் டாக்ஸிகளுக்கு 10,000 அபராதம்..! ஆட்டோக்காரங்க மட்டும் என்ன நியாயமா இருக்கீங்களா?.

இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே பைக் டாக்ஸி என்கிற ஒரு முறை பயன்பாட்டில் இருந்து வருகிறது. பெரும்பாலும் சென்னை மாதிரியான பெருநகரங்களில் சென்னைக்கு புதிதாக வரும் நபர்களுக்கு சரியான இடத்திற்கு போவதற்கு வழி தெரியாது. அப்பொழுது அவர்கள் ஆட்டோ அல்லது டாக்ஸி மாதிரியான வாகனங்களை பிடித்துதான் செல்வார்கள். ஆனால் ஒரு நபர் மட்டும் பயணம் செய்வதாக இருந்தாலும் நான்கு பேர் பயணித்தாலும் ஆட்டோவில் கட்டணம் ஒரே மாதிரி தான் இருக்கும். எனவே ஒரு நபர் பயணம் செய்வதற்காக […]

Continue Reading