ஆரம்பத்தில் கதாநாயகனாக வேண்டும் என்கிற ஆசையில் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தவர் நடிகர் பப்லு. அதற்கு பிறகு அவருக்கு துணை கதாபாத்திரங்களில் தான் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது.
நிறைய திரைப்படங்களில் மக்களை ஈர்க்கும் வகையிலான கதாபாத்திரம் அவருக்கு கிடைத்தது. ஆனாலும் கூட அவரால் கதாநாயகனாக ஆகவே முடியவில்லை.
இப்பொழுது வரையிலும் அது கை கூடாத விஷயமாக தான் இருந்து வருகிறது சமீப காலங்களாக பப்லு நிறைய சமூக வலைதளங்களில் பேசி வருகிறார். அப்படியாக சமீபத்தில் ஒரு வீடியோவில் அவர் பேசும்பொழுது ஆரம்பகால சினிமா வாழ்க்கை குறித்து பேசி இருந்தார்.
அதில் அவர் கூறும் பொழுது சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட நிலையில் எல்லாம் நான் இருந்து கொண்டு சினிமாவிற்கு வரவில்லை எனது அப்பா காவலாளியாக இருந்தார் எனவே சினிமாவிற்கு வரும்பொழுது பொருளாதார ரீதியாக எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
எனக்கு இருந்த பிரச்சனை எல்லாம் பார்ப்பதற்கு அஜித் மாதிரி இருக்க ஏன் ஹீரோ ஆகவில்லை என்று தொடர்ந்து அனைவரும் கேட்டதுதான் என்று கூறியிருக்கிறார் பப்லு.