மாநாடு திரைப்படத்தில் வர்ற மாதிரி திருமணத்துக்கு முதல் நாளில் சிக்கிய ஹீரோ..! Bhool chuk maaf Movie Review

பாலிவுட்டில் டைம் லூப் கதை அம்சத்தில் உருவான திரைப்படம் தான் Bhool chuk maaf. இந்த திரைப்படத்தை கர்ணன் சர்மா என்பவர் இயக்கி இருக்கிறார்.

நடிகர் ராஜ்குமார் ராவ் இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படம் ஒரு திருமணத்தை அடிப்படையாகக் கொண்டு செல்கிறது படத்தின் கதாநாயகனான ரஞ்சன் திவாரிக்கு ஒரு காதலி இருக்கிறார். அவரை திருமணம் செய்ய வேண்டும் என்றால் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்கிற நிர்பந்தம் ரஞ்சனுக்கு ஏற்படுகிறது.

அதனை தொடர்ந்து ரஞ்சன் குறுக்கு வழியில் அந்த அரசு வேலையை பெற நினைக்கிறார். அதற்காக ஒரு ஏஜண்டிடம் சென்று பணமும் கட்டுகிறார். இந்த நிலையில் அவருக்கு ஒரு அரசு வேலையும் கிடைக்கிறது. அதனை தொடர்ந்து திருமணத்திற்கு முதல் நாள் மஞ்சள் விழா என்கிற விழா நடக்கிறது.

அந்த விழா முடிந்ததும் தூங்க செல்கிறார் ரஞ்சன் ஆனால் மறுநாள் எழும்பொழுது திருமண நாளுக்கும் பதிலாக மீண்டும் அந்த மஞ்சள் நாளே இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் இரவு தூங்கும் போது மறுநாள் முப்பதாம் தேதி வருவதற்கும் பதிலாக 29ஆம் தேதியிலேயே அவருடைய வாழ்க்கை நிற்கிறது. இந்த நிலையில் இது குறித்து ஜோசியரிடம் கேட்கும் பொழுது அவரால் காயப்பட்ட ஆத்மாவின் காரணமாக தான் இப்படி நடப்பதாக கூறுகிறார் ஜோசியர்.

இதனை தொடர்ந்து எதனால் இந்த பிரச்சனை தனது வாழ்வில் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்து ரஞ்சன் சரி செய்வது தான் கதையாக இருக்கிறது.

 

 

 

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version