கூலி திரைப்படம் தற்சமயம் வெளியான நிலையில் அதிகமான வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் கதையானது இதுவரை இருந்த லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களிலிருந்து வித்தியாசமான கதைக்களமாக இருக்கிறது.
கதைப்படி ரஜினிகாந்தின் நெடுநாள் நண்பராக சத்யராஜ் இருந்து வருகிறார் இந்த நிலையில் திடீரென்று ஒரு நாள் சத்யராஜ் கொலை செய்யப்படுகிறார். அதை யார் செய்தார் என யாருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில் சுருதிஹாசன் இந்த செய்தியை ரஜினிகாந்திடம் கொண்டு வருகிறார்.
யார் இதை செய்தது என்று ரஜினிகாந்த் தேடுவதில் இருந்து கதைகளம் துவங்குகிறது. சத்யராஜை கொன்றவர்கள் யார் என தேடும்போதுதான் அவர்கள் உண்மையில் தேடி வந்தது ரஜினிகாந்தை என தெரிகிறது அப்படி என்றால் ரஜினிகாந்த் யார் அவருடைய பின்புலம் என்ன என பல விஷயங்களை பேசி கதைகளும் செல்கிறது.
படத்தில் நாகார்ஜுனாவின் கதாபாத்திரம் மிக சிறப்பானதாக அமைந்து இருக்கிறது. அதே மாதிரி இதுவரை லோகேஷ் கனகராட்சி எடுத்த திரைப்படங்களில் இருந்து கூலி சில விஷயங்களில் மாறுபட்டு இருக்கிறது தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் என்றால் அவரது திரைப்படத்தில் சில விஷயங்களை பயன்படுத்துவார் என்று பேச்சுக்கள் உண்டு .
போதை பொருட்கள் மாதிரியான விஷயங்கள் குறித்த காட்சிகள் இருக்கும் என்று பேச்சுக்கள் இருந்தன ஆனால் அதையெல்லாம் தவிர்த்து இந்த திரைப்படத்தில் வித்தியாசமாக ஒன்றை முயற்சி செய்கிறார் லோகேஷ் கனகராஜ்.
ரஜினிகாந்தின் இளமை கால கதைகள் மிக சிறப்பாக அமைந்திருக்கின்றன ரஜினிகாந்த் வயதை குறைத்து காட்டுவதை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதுவும் மக்கள் மத்தியில் நல்ல பாராட்டுகளை பெற்று வருகிறது கூலி திரைப்படம்.