உலகப்போர் சமயத்தில் இருந்தே துப்பறியும் உளவாளிகளின் தேவை ஒவ்வொரு நாட்டுக்கும் அதிக தேவையாக இருந்தது. மற்ற நாடுகளில் நடக்கும் விஷயங்களை அறிந்துக்கொள்ள மாறுவேடத்தில் ஒவ்வொரு நாட்டிலும் பிற நாட்டினர் தங்களது உளவாளிகளை வைத்திருந்தனர்.
அதற்கு திரைப்பட துறை வளர்ந்த பிறகு அந்த கதை அம்சத்தில் நிறைய திரைப்படங்கள் ஹாலிவுட் சினிமாவில் வந்தன. தமிழில் ஒரு சில திரைப்படங்கள்தான் அப்படி வந்துள்ளன.
அப்படியான ஒரு கதை அம்சத்தை கொண்ட திரைப்படமாகதான் கேங்கர்ஸ் திரைப்படம் வந்துள்ளது. இந்த திரைப்படத்தை சுந்தர் சி யே இயக்கி, நடித்து தயாரித்தும் இருக்கிறார். வடிவேலு மிக முக்கிய கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் கதைப்படி வடிவேலு ஏற்கனவே ஒரு பள்ளியில் பி.டி மாஸ்டராக இருந்து வருகிறார். அந்த பள்ளிக்கு புதிய பி.டி மாஸ்டராக சுந்தர் சி வருகிறார். ஆனால் சுந்தர் சி ஒரு பி.டி மாஸ்டர் மட்டுமே கிடையாது. அவர் ஒரு உளவாளியும் கூட.
அவர் என்னவெல்லாம் செய்ய போகிறார் என்பதாக கதை அம்சம் செல்கிறது.