Connect with us

என்னங்க இவன் ரொம்ப திமிரா பேசுறான்!.. இயக்குனர் செய்கையால் கடுப்பான மாதவன்!..

madhavan

Cinema History

என்னங்க இவன் ரொம்ப திமிரா பேசுறான்!.. இயக்குனர் செய்கையால் கடுப்பான மாதவன்!..

cinepettai.com cinepettai.com

தமிழ் இயக்குனர்களில் பலர் நடிகர்களுக்காக கதையை எழுதுவது உண்டு ஆனால் கதையை எழுதிவிட்டு அதற்காக நடிகரை தேடும் சில இயக்குனர்களும் தமிழ் சினிமாவில் உண்டு. எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்றார் போல அந்த நடிகர்கள் நடிக்க வேண்டும் என்று இயக்குனர்கள் எதிர்பார்ப்பது உண்டு.

அப்படியான இயக்குனர்களில் முக்கியமானவர் லிங்குசாமி. இயக்குனர் லிங்குசாமி ஒவ்வொரு படத்திற்கும் கதையை எழுதிவிட்டுதான் அதற்கு கதாநாயகன் யார் என்பதை முடிவு செய்வார். அப்படி அவர் எழுதிய கதை தான் ரன் படத்தின் கதை.

இந்த படத்தின் கதையை அவர் எழுதிய பிறகு அதற்கு கதாநாயகனாக யாரை நடிக்க வைக்கலாம் என்கிற பேச்சு போய்க் கொண்டிருந்தது. அப்பொழுது படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்தினம் தற்சமயம் மாதவன் மிகவும் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார். எனவே அவரை இந்த படத்தில் நடிக்க வைக்கலாம் என்று கூறினார்.

எனவே மாதவனுக்கு போன் செய்த லிங்குசாமி, படத்தின் கதையை கூற ஒரு இரண்டு மணி நேரம் எனக்கு அவகாசம் வேண்டும் என்று கூறியிருக்கிறார் அதனை கேட்ட மாதவன் 2 மணி நேரம் எல்லாம் என்னால் கதை கேட்க முடியாது, அரை மணி நேரத்தில் கூற முடியுமா என்று கேட்டிருக்கிறார் மாதவன்.

அதற்கு லிங்குசாமி இல்லை சார் நான் 2 மணி நேரம் கூறி ஆக வேண்டும் உங்களுக்கு எப்போது நேரம் இருக்கிறதோ அப்போது சொல்லுங்கள் என்று கூறிவிட்டு ஃபோனை வைத்து விட்டார். இதனால் கடுப்பான மாதவன் தயாரிப்பாளர் ரத்தினத்திற்கு போன் செய்து என்ன சார் இவன் ரொம்ப திமிரா பேசுறானே என்று கேட்டிருக்கிறார்.

அதனை அடுத்து தயாரிப்பாளர் ரத்தினம் இல்லை அவருக்கு நேரம் ஒதுக்கி கதையை கேளுங்கள். பிறகு உங்களுக்கு பிடிக்கும் என்று கூறி இருக்கிறார் பிறகு ஒரு மணி நேரம் மாதவன் லிங்குசாமிக்காக நேரம் ஒதுக்கி இருக்கிறார் அந்த ஒரு மணி நேரத்தில் லிங்குசாமி மிகவும் ட்ரிக்காக இன்டர்வல் வரை மட்டுமே கதையை கூறியிருக்கிறார்.

அதனை கேட்டு உற்சாகமான மாதவன் இன்னும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்னிடம் முழு கதையையும் கூறுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

To Top