கவர்ச்சியா நடிச்சே ஆகணும்! நடிகையை வற்புறுத்திய ஷங்கர் – நடவடிக்கை எடுத்த ராதாரவி!..

Cinema History News Tamil Cinema News

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் அதிக பிரச்சனைகளை சந்திக்கின்றனர். ஏனெனில் கதாநாயகர்களாக நடிக்கும் ஆண் நட்சத்திரங்கள் போல் இல்லாமல் கதாநாயகிகள் மார்க்கெட்டை பிடித்து தமிழ் சினிமாவில் அப்படியே இருப்பது கடினமான காரியமாக இருக்கிறது.

எம்.ஜி.ஆர் காலத்திலும் சரி பிறகு கமல் ரஜினி வந்த ஆரம்பக்காலக்கட்டங்களிலும் சரி கதாநாயகிகள் சினிமாவில் வெகு காலங்கள் இருக்க முடிந்தது. ஸ்ரீ தேவி, ரேவதி மாதிரியான கதாநாயகிகளை இதற்கு உதாரணமாக கூறலாம்.

இந்த நிலையில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்கிற குறிக்கோளோடு இருக்கிற நடிகைகள் வெகுவாக சிரமப்படுகின்றனர். அந்த வகையில் இந்தியன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. இந்தியன் திரைப்படத்தில் வயதான கமலுக்கு ஜோடியாக நடிகை சுகன்யா நடித்திருப்பார்.

எந்த படத்தில் நடிப்பதாக இருந்தாலும் கவர்ச்சி காட்சிகள் இல்லாததை உறுதி செய்துக்கொண்டே சுகன்யா நடிப்பார். அந்த வகையில் இந்தியன் படத்தில் உடையில்லாமல் நிற்கும் சுகன்யாவிற்கு கமல் பொட்டு வைத்து மனைவியாக ஏற்றுக்கொள்ளும் காட்சி இருக்கும்.

ஆனால் அந்த காட்சியில் எந்த கவர்ச்சியும் இல்லை என இயக்குனர் ஷங்கர் கூறியிருந்தார். ஆனால் படப்பிடிப்பு நடக்கும்போது அவர் சுகன்யாவை கவர்ச்சியாக நடிக்க வற்புறுத்தியுள்ளார். இதனால் கோபமான சுகன்யா அப்போது நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்த நடிகர் ராதா ரவியிடம் இந்த பிரச்சனையை கொண்டு சென்றுள்ளார்.

பிறகு ஷங்கரை சந்தித்த ராதா ரவி சுகன்யா கவர்ச்சியாக நடிக்க மாட்டார் என கூறியுள்ளார். தற்சமயம் ஒரு பேட்டியில் இதுக்குறித்து அவர் பேசும்போது ராதாரவிக்கு நன்றி கூறியுள்ளார் நடிகை சுகன்யா.