Connect with us

நான் எடுத்த தவறான முடிவு… ரஜினி படத்தை பார்த்த பிறகு மனம் திருந்தினேன்.. நடிகர் சூர்யா

surya

Tamil Cinema News

நான் எடுத்த தவறான முடிவு… ரஜினி படத்தை பார்த்த பிறகு மனம் திருந்தினேன்.. நடிகர் சூர்யா

Social Media Bar

Actor Suriya regrets his wrong decision after seeing a fan

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து வருகிறார். அதனாலேயே எப்போதும் சூர்யாவிற்கு வரவேற்பு என்பது இருந்து வருகிறது.

கொரோனா காலகட்டத்தில் சூர்யா நடித்த இரண்டு முக்கியமான திரைப்படங்கள் அதிக வரவேற்பு பெற்றன. அதில் ஒன்று சூர்ரை போற்று இன்னொன்று ஜெய் பீம் திரைப்படம்.

இந்த இரண்டு திரைப்படங்களுமே திரையரங்கில் வெளியாகவில்லை மாறாக ஓடிடியில்தான் வெளியானது. இதனால் திரையரங்க முதலாளிகளே சூர்யாவின் மீது மிகுந்த வருத்ததில் இருந்து வந்தனர். இதற்கு இடையே இது குறித்து ஒரு பேட்டியில் சூர்யாவே பேசியிருக்கிறார்.

சூர்யா எடுத்த முடிவு:

surya jaibhim

surya jaibhim

அதாவது அண்ணாத்த திரைப்படம் வெளியான பிறகு அதை பார்ப்பதற்காக நான் திரையரங்கிற்கு சென்று இருந்தேன். பொதுவாகவே ரஜினி சார் திரைப்படத்தை திரையரங்கில் தான் பார்ப்பேன். அப்படி பார்த்துவிட்டு வெளியில் வரும் பொழுது ஒருவர் நான் நடித்த ஜெய் பீம் திரைப்படத்தை பார்ப்பதற்காக டிக்கெட் வாங்குவதற்கு நின்று கொண்டு இருந்தார்.

அவர் ஒரு வயதான நபர் அவரிடம் நான் சென்று ஜெய் பீம் திரைப்படம் திரையரங்கில் வெளியாகவில்லை. ஓடிடியில்தான் வெளியாகி இருக்கிறது என்று கூறினேன். ஆனால் அவருக்கு ஓடிடி என்றால் என்ன என்று தெரியவில்லை.

அப்போதுதான் எனக்கு தெரிந்தது எவ்வளவு பெரிய தவறான முடிவை எடுத்துள்ளோம் என்று, ஓடிடி யில் வெளியாவதன் மூலம் அனைத்து மக்களிடமும் படம் சென்றடையும் என்று நினைத்தேன். ஆனால் ஓடிடியின் மூலமாக கூட அனைத்து மக்களையும் படம் சென்றடையாது என அப்போதுதான் தெரிந்தது என்று கூறி இருக்கிறார் சூர்யா.

Articles

parle g
madampatty rangaraj
To Top