Tamil Cinema News
ஏ.ஆர் ரகுமானை தொடர்ந்து விவாகரத்து அறிவித்த கிதார் கலைஞர்.. இப்பதான் டவுட் வருது..!
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இளையராஜாவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக பிரபலமான ஒரு இசை அமைப்பாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தன்னுடைய விவாகரத்து குறித்து அறிவித்தது அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஏ ஆர் ரகுமானின் மனைவியின் வழக்கறிஞர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன்படி ஏ ஆர் ரகுமானை அவரது மனைவி பிரிவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. ஏ ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா பானுவின் பக்கம் இருந்து விவாகரத்து குறித்து அறிவிப்பு வந்த அடுத்த சில மணி நேரங்களில் ஏ.ஆர் ரகுமான் அவர் தரப்பிலிருந்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் 29 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து விட்டோம் 30 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைப்போம் என்று நினைத்தேன் ஆனால் அதற்குள் எல்லாமே முடிந்துவிட்டது. என பதிவிட்டு இருந்தார் ஏ.ஆர் ரகுமான் இந்த நிலையில் இது குறித்த பேச்சுக்கள் தற்சமயம் சினிமா வட்டாரங்களில் அதிகமாக பேசப்பட்டு வந்தது.
கிதார் கலைஞரின் முடிவு:
இதற்கு நடுவே ஏ.ஆர் ரகுமானின் இசை குழுவில் கிதார் கலைஞராக பணிபுரிந்து வரும் மோகினி டே என்பவரும் தனது கணவர் மார்க்கை பிரிவதாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றே வெளியிட்டு இருக்கிறார்.
சாய்ரா பானு தனது விவாகரத்து அறிவித்த சில மணி நேரங்களிலேயே மோகினி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில் நானும் எனது கணவர் மார்க்கும் பிரிந்து விட்டோம் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் இருவரும் பேசி ஒருமித்தமாக இந்த முடிவை எடுத்திருக்கிறோம் என்று அவர் கூறியிருக்கிறார்.
மேலும் பிரிவிற்கு பிறகும் நாங்கள் நண்பர்களாக இருப்போம் என்றும் அவர் கூறி இருக்கிறார். இந்த நிலையில் இது ரசிகர்களுக்கு இடையே சந்தேகத்தை ஏற்படுத்த தொடங்கி இருக்கிறது. இந்த இரண்டு விவாகரத்தையும் அவர்கள் சேர்த்து பேசி வருகின்றனர்.