Tag Archives: அமரன்

எனக்கு பிரச்சனை இல்லாமல் பார்த்துக்கிட்டார்..! எஸ்.கேவுக்கு கமல் செய்த உதவி.. சினிமாவில் தலைவர் பவர் அப்படி..!

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு மற்ற நடிகர்களை போலவே ஒரு தனிப்பட்ட இடம் உருவாகி இருக்கின்றது என்று தான் கூற வேண்டும். தமிழில் விஜய் அஜித் மாதிரியான பெரிய கமர்சியல் நடிகர்கள் சினிமாவின் மீது ஆர்வம் காட்டாமல் தங்களது சொந்த விருப்பங்களின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் விஜய் அரசியலுக்கும் அஜித் கார் ரேஸுக்கும் சென்று விட்டார்கள். இந்த நிலையில் கமர்சியல் கதாநாயகர்களுக்கான ஒரு வெற்றிடம் தானாகவே தமிழ் சினிமாவில் உருவாகி உள்ளது.

அதில் ஒரு முக்கியமான இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்து இருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்தது. அமரன் திரைப்படம் கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவான திரைப்படம்.

sk amaran

தமிழில் டாப் நடிகராக இருந்தாலும் எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் தொடர்ந்து சினிமாவில் சில பிரச்சினைகளை அவர் சந்தித்து கொண்டு தான் இருக்கிறார்.

இந்த நிலையில் அமரன் திரைப்படம் பெரிய வெற்றியை கொடுத்தது மட்டும் இல்லாமல் 100 நாட்களாக திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்துள்ளது அதற்கான கொண்டாட்டம் சமீபத்தில் நடந்தது.

அதில் பேசிய சிவகார்த்திகேயன் கூறும் பொழுது படத்திற்கான அக்ரிமெண்ட் போட்ட போதே எனக்கான முழு சம்பளத்தையும் கொடுத்துவிட்டார் கமல்ஹாசன். மேலும் பெரும்பாலும் நான் நடிக்கும் திரைப்படத்திற்கு நிறைய பிரச்சனைகள் வரும்.

ஆனால் இந்த திரைப்படத்தில் எனக்கு எந்த பிரச்சனைகளும் வராமல் பார்த்துக் கொண்டார் கமல்ஹாசன் என்று கூறியிருக்கிறார் சிவ கார்த்திகேயன். இதன் மூலமாக சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு எவ்வளவு மோசமான விஷயங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன என தெரிகிறது.

காட்டி நடித்தால்தான் பாலிவுட்டில் சான்ஸ்.. சாய் பல்லவிக்கு வந்த பிரச்சனை..!

தமிழ் தெலுங்கு அன்று இரண்டு மொழிகளிலும் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை சாய் பல்லவி. அதிலும் தமிழில் சமீபத்தில் அவர் நடித்த அமரன் திரைப்படம் அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.

அதனை தொடர்ந்து எப்படியும் தமிழில் ஒரு ரவுண்டு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு நடுவே ஹிந்தியில் ராமாயணம் திரைப்படத்தில் சீதையாக நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்திருந்தது.

பலரும் இதற்காக சாய்பல்லவியை விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் அமரன் திரைப்படம் ஹிந்தியில் கூட வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து சாய் பல்லவி நடிப்பதற்கு இப்பொழுது இந்தியிலும் வரவேற்புகள் அதிகரித்து இருக்கிறது.

sai pallavi

இந்த படத்திற்கு பிறகு ஹிந்தியில் நிறைய திரைப்படங்களில் சாய்பல்லவிக்கு வாய்ப்புகள் வந்து வண்ணம் இருக்கிறது. தற்சமயம் அமீர்கானின் மகனுடன் இன்னொரு திரைப்படத்தில் இவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அடுத்தடுத்து நடிக்கும் திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிப்பதற்கு பாலிவுட்டில் அழைக்கின்றனர் என்று கூறப்படுகிறது. சாய்பல்லவியை பொருத்தவரை அவர் தொடர்ச்சியாக நடிக்க கூடாது என்கிற நோக்கத்துடன் இருந்தவர் எனவே இதை எப்படி கையாள போகிறார் என்பது கேள்வியாக இருக்கிறது.

சாய்ப்பல்லவி தூக்கிப்போட்ட சீட்டால் வந்த பிரச்சனை.. 1 கோடி இழப்பீடு வேண்டும்..!

தென்னிந்திய சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகைகள் மிகக் குறைவுதான். அப்படியான நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை சாய் பல்லவி. எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை சிறப்பாக நடிக்க கூடிய நடிகை என்பதாலேயே சாய் பல்லவி மிக பிரபலமானவர்.

பெரும்பாலும் தென்னிந்திய சினிமாவில் நிறைய நடிகைகள் ஒரு கட்டத்திற்கு மேல் கவர்ச்சியாக நடிக்க துவங்கி விடுவார்கள். ஆனால் இப்பொழுது வரை கவர்ச்சியாக நடிக்காத ஒரு நடிகையாக சாய் பல்லவி இருந்து வருகிறார்.

சாய்பல்லவி நடித்த அமரன் திரைப்படம் சமீபத்தில் அதிக வரவேற்பு பெற்றது. 300 கோடி ரூபாய் வரையில் வசூல் பெற்ற இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு சாய்பல்லவி முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

சாய்ப்பல்லவி பிரச்சனை:

amaran 2

முக்கியமாக ஆந்திர பிரதேசம் மாதிரியான மாநிலங்களில் அமரன் திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைப்பதற்கு சாய் பல்லவிதான் முக்கிய காரணமாக இருந்தார்.

ஏனெனில் அவருக்கு தெலுங்கு சினிமாவில் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் அமரன் திரைப்படத்தில் வந்த ஒரு காட்சி தற்சமயம் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது. அமரன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் சாய்பல்லவி சிவகார்த்திகேயனுக்கு தன்னுடைய மொபைல் நம்பரை எழுதிக் கொடுப்பதாக ஒரு காட்சி இருக்கும்.

அதில் எழுதப்பட்ட மொபைல் நம்பர் சென்னையை சேர்ந்த ஒரு இளைஞரின் மொபைல் எண் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பலரும் அது சாய் பல்லவியின் நம்பர் என்று நினைத்து இந்த இளைஞருக்கு போன் செய்திருக்கின்றனர்.

இதனால் கோபமடைந்த இளைஞர் தற்சமயம் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அமரன் திரைப்பட குழு மீது வழக்கு ஒன்றை தொடர்ந்து இருக்கிறார் இந்த நிலையில் அவருக்கு இழப்பீடு கிடைக்குமா கிடைக்காதா என்பது குறித்துதான் பேச்சுக்கள் சென்று கொண்டுள்ளன.

அமரன் படத்தால் பயத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன்.. உண்மையை சொன்ன தயாரிப்பாளர்..!

கமர்சியல் நடிகர்களை பொருத்தவரை ஒரு பக்கம் வெற்றி படங்களை கொடுப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் ஒரு பக்கம் அது கவலையை கொடுக்கிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் அமரன். இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார். நடிகர் கமலஹாசனின் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்தது.

சொல்ல போனால் சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் அதிக வசூலை கொடுத்த படமாக அமரன் திரைப்படம் இருக்கிறது. 300 கோடியை தாண்டி திரைப்படம் வசூல் சாதனை செய்திருக்கிறது.

அமரன் படம் கொடுத்த பயம்:

amaran

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் சம்பளமும் அடுத்த படத்திற்கு உயரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து சினிமா தயாரிப்பாளரான தனஞ்செயன் சில விஷயங்களை கூறியிருக்கிறார். அவர் கூறும்போது சிவகார்த்திகேயன் இப்பொழுது 300 கோடி வெற்றியை கொடுத்து விட்டார்.

இனி அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே கொஞ்சம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களாக இருக்கும். எனவே இதை தாண்டிய வெற்றியை சிவக்கார்த்திகேயன் கொடுக்க வேண்டி இருக்கும். அடுத்து அவர் நடிக்கும் திரைப்படத்தில் 310 கோடியாவது அவர் வசூல் சாதனை காட்டியாக வேண்டும்.

இதனால் சிவகார்த்திகேயனுக்கு பொறுப்பு இப்பொழுது அதிகமாக இருக்கிறது. எனவே இது குறித்து பயத்தில் தான் இருப்பார் என்று கூறியிருக்கிறார் தனஞ்செயன்.

வசூலில் பாகுபலியை முறியடித்த அமரன் திரைப்படம்..! மாஸ் காட்டும் எஸ்.கே..!

நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிறைய வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். இதனாலேயே சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே அந்த படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது.

மக்களை பொருத்தவரை சிவகார்த்திகேயன் திரைப்படத்திற்கு சென்றாலே கண்டிப்பாக என்டர்டைன்மென்ட் ஆக இருக்கும் என்கிற நம்பிக்கை வந்திருக்கிறது.

அந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான அமரன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்து இருக்கிறது.

அமரன் பட வசூல்:

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான திரைப்படம் அமரன். உண்மையாக வாழ்ந்த முகுந்த் வரதராஜன் என்கிற ராணுவ வீரரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் அமரன்.

amaran

தீபாவளி ஆண்டு வெளியான அமரன் திரைப்படம் இப்பொழுது வரை திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது. சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் வெளியான பிறகும் கூட சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் நிறைய திரையரங்குகளில் ஓடி வருவதை பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் உலக அளவில் இதுவரை 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரும் சாதனை படைத்திருக்கிறது அமரன் திரைப்படம். இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களிலேயே அதிக வசூல் பெற்ற திரைப்படமாக அமரன் திரைப்படம் இருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது அமரன் திரைப்படம். இதற்கு முன்பு வெளியான பாகுபலி திரைப்படத்தின் தமிழ் நாடு வசூலை விட தற்சமயம் அமரன் படத்தின் வசூல் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

சும்மா விளையாட்டா சொன்னதை சீரியஸா எடுத்துக்கிட்டாரு.. எஸ்.கேகிட்ட அதை எதிர்பார்க்கல.. ஓப்பன் டாக் கொடுத்த சங்கீதா..!

நிறைய காமெடி திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துக் கொண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். பெரும்பாலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் அதிக வெற்றியை தான் கொடுத்து வருகின்றன.

வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன் இப்பொழுது முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கிறார். அதுவும் சமீபத்தில் அவர் நடித்த அமரன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்தது.

அந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு பெரிய பட்ஜெட் திரைப்படங்களாக வர துவங்கியிருக்கின்றன இன்னும் ஐந்து வருடங்களுக்குள்ளாகவே சிவகார்த்திகேயன் விஜய் அஜித் இடத்தை பிடிப்பார் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

sivakarthikeyan

சிவகார்த்திகேயன் திறமை:

இந்த நிலையில் அவர் எவ்வளவு கடினமான உழைப்பாளி என்பது குறித்து நடிகை சங்கீதா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும் பொழுது விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக நாங்கள் இருந்தபோது ஒருமுறை சிவகார்த்திகேயனை அதில் நடனம் ஆட சொன்னோம்.

சிவகார்த்திகேயனும் நடனமாடினார். ஆனால் சிறப்பாக நடனம் ஆட வில்லை இதனை அடுத்து நாங்கள் அதை குறை கூறினோம். இதனால் அப்பொழுது கோபம் அடைந்த சிவகார்த்திகேயன் நான் ஒரு காமெடியன் என்னால் இவ்வளவுதான் மேடம் ஆட முடியும் என்று கூறி கூறினார்.

உடனே நான் உங்களுக்கு நடனம் ஆடுவதற்கான தகுதி இருக்கிறது அந்த நளினம் இருக்கிறது. எனவே நீங்கள் முயற்சி செய்தால் உங்களால் சிறப்பாக ஆட முடியும் என்று கூறினேன். அதை மிக சீரியஸாக எடுத்துக்கொண்டு ஒரு நடன பயிற்சி பள்ளியில் சேர்ந்து கடினமாக பயிற்சி கற்றுக் கொண்டு மேடையில் வந்து ஆடினார் என்று சிவகார்த்திகேயன் குறித்து கூறியிருக்கிறார் சங்கீதா.

விமான படையில் எனக்கு நடந்த சம்பவம்… அமரன் படத்தை தாண்டி டெல்லி கணேஷ்க்கு நடந்த சம்பவம்.!

Actor Delhi Ganesh is one of the most famous actors in Tamil. He has been a prominent actor in cinema for many years. Before cinema, he served in the army

எவ்வளவோ ராணுவம் சார்ந்த திரைப்படங்கள் தமிழில் வெளிவந்து இருக்கின்றன. ஆனாலும் கூட தொடர்ந்து அமரன் திரைப்படம் அதிகமாக கொண்டாடப்படுவதற்கான முக்கியமான காரணம் ராணுவம் குறித்து மிக தெளிவாக காட்டப்பட்டு இருப்பது தான்.

சொல்லப்போனால் படத்தில் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை இராணுவம் தொடர்பாக பணத்தில் காட்டப்பட்ட நிறைய விஷயங்கள் உண்மையிலேயே ராணுவத்தில் எப்படி நடக்கிறதோ அதேபோல காட்டப்பட்டுள்ளன. அந்த வகையில்தான் அமரன் திரைப்படம் பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கிய திரைப்படமாக மாறி இருக்கிறது.

ராணுவம் குறித்து டெல்லி கணேஷ்:

இந்த நிலையில் நடிகர் டெல்லி கணேஷ் தன்னுடைய ராணுவ அனுபவங்கள் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். ராணுவத்தில் விமானப்படையில் ஃபைட்டர் ஜெட் எனப்படும் விமானத்தை ஓட்டுபவராக பணிபுரிந்தவர் டெல்லி கணேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

delhi ganesh

பிறகு அவருக்கு நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக ராணுவத்தில் இருந்து விலகி சினிமாவிற்கு நடிக்க வந்துவிட்டார். இருந்தாலும் அப்போதைய காலகட்டத்தில் நடந்த அனுபவங்களை அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது முதன் முதலாக நான் நேர்காணலுக்கு சென்ற பொழுது என்னிடம் அமெரிக்காவின் பிரசிடெண்ட் யார் என்று கேட்டார்கள் நான் கென்னடி என்று கூறினேன். உடனே கென்னடி என்ன உன்னை பக்கத்து வீட்டுக்காரரா, ஸ்ரீ ஜான் எஃப் கென்னடி என்று கூறவேண்டும் என்று என்னை திருத்தினார்.

நேர்க்காணலில் நடந்த நிகழ்வு:

அதே போல ஒரு நான்கு கேள்விகளை என்னிடம் கேட்டார். நானும் அதற்கு பதில் அளித்தேன். பிறகு நாளை நேர்காணலுக்கு வந்து விடு என்று கூறினார் நான் சென்று மறுநாள் வந்த பொழுது அவர் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி ஒரு ஐந்து ஆறு நபர்கள் அமர்ந்திருந்தார்கள்.

முந்தைய நாள் கேட்ட அதே நான்கு கேள்விகளை தான் அன்றும் என்னிடம் திருப்பி கேட்டார் .நான் பதில் அளித்ததும் என்னை ராணுவத்தில் சேர்த்துக்கொண்டார். அவரது பெயர் கண்ணன். அவர்தான் நான் விமான படையில் சேர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் என்று கூறி இருக்கிறார் டெல்லி கணேஷ்.

இதே மாதிரி நேர்காணல் காட்சி ஒன்று அமரன் திரைப்படத்திலும் வரும் டெல்லி கணேஷ் கூறியது போலவே அந்த காட்சியும் அமைந்திருக்கும் அந்த அளவிற்கு ராணுவம் குறித்த விஷயங்களை அமரன் திரைப்படத்தில் ஆய்வு செய்து வைத்திருக்கின்றனர் என்பது இதன் மூலம் தெரிகிறது.

 

எஸ்.கேவுக்கு செஞ்ச செய்கைக்கு இப்ப பழி வாங்கிட்டார் போல..கங்குவா படத்திற்கு சிவகார்த்திகேயன் வைத்த ஆப்பு..!

சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்து அதிக எதிர்பார்ப்பை பெற்ற திரைப்படமாக கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. நேற்று திரையரங்குகளில் வெளியான கங்குவா திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிலான வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காரணத்தினாலேயே தொடர்ந்து படத்தை வெளியிடுவதிலும் மாற்றங்கள் இருந்து வந்தன. படத்திற்கு நிறைய திரையரங்குகள் கிடைக்க வேண்டும் என்பதால் பெரிதாக படம் வராத நாளில் படத்தை வெளியிட வேண்டும் என்பது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் விருப்பமாக இருந்தது.

அதனாலேயே படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டு கொண்டு வந்தது. அக்டோபர் பத்தாம் தேதி கூட வேட்டையன் வெளிவந்த காரணத்தினால் அடுத்த தீபாவளிக்கு படத்தை வெளியிடலாம் என்று இருந்தனர்.

kanguva

சிவகார்த்திகேயன் பதிலடி:

ஆனால் அமரன் மாதிரியான பெரிய படங்கள் தீபாவளிக்கு வருகிற காரணத்தினால் அதிலிருந்து 15 நாட்களுக்கு நவம்பர் 14ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டனர் அதே போல படமும் நேற்று வெளியானது ஆனால் இதை படத்தில் பிரச்சனை என்னவென்றால் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான அமரன் திரைப்படம் 15 நாட்களை கடந்த பிறகு கூட மிகவும் வரவேற்பை பெற்று வருகிறது.

அதனால் நிறைய திரையரங்குகள் அமரன் திரைப்படத்தை இன்னமும் திரையில் ஒட்டிக்கொண்டு இருக்கின்றனர். திரையரங்குகளை பொறுத்தவரை முதல் இரண்டு வாரங்களை விட அதற்குப் பிறகு ஓடும் காலங்களில் தான் படங்களில் இருந்து வரும் லாபம் அதிகமாக கிடைக்கும்.

அதனால் திரையரங்குகள் இந்த படத்தை எடுத்துவிட்டு கங்குவாவை வெளியிட மறுக்கின்றன. இதனால் தமிழ்நாட்டில் எதிர்பார்த்த அளவில் திரையரங்குகள் கங்குவா படத்திற்கு கிடைக்கவில்லை இதனால் கங்குவா படத்தின் முதல் நாள் வசூல் குறைந்து இருக்கிறது. முன்பு ஒருமுறை ஞானவேல்ராஜா சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுப்பதாக கூறி அவருக்கு அவதி கொடுத்ததாக ஒரு பேச்சு உண்டு.

தனது படத்தின் வாயிலாக அதற்கு பதிலடி தந்துள்ளார் சிவகார்த்திகேயன் என்கின்றனர் ரசிகர்கள்.

தெரியாம அமரன் பத்தி வாய்விட்ட விக்னேஷ் சிவன்.. விளக்கம் கொடுத்த இராணுவ வீரர்.. இது தெரியாம போச்சே..!

சமீபத்தில் தமிழில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு திரைப்படமாக அமரன் திரைப்படம் இருந்தது. அமரன் திரைப்படம் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இரண்டாவது திரைப்படம் ஆகும்.

இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனை விடவும் ராஜ்குமார் பெரியசாமிக்கு அதிக அளவிலான வரவேற்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்து ராஜ்குமார் பெரியசாமி நடிகர் தனுஷின் 55வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

அதற்கான அதிகாரப்பூர்வ செய்திகளும் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் அமரன் திரைப்படம் குறித்து தொடர்ந்து சில எதிர்மறையான விமர்சனங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த படத்தின் டிரைலர் வந்ததிலிருந்து சிவகார்த்திகேயன் அந்த படத்தில் தாடி வைத்திருந்தது குறித்து நிறைய சர்ச்சைகள் இருந்தது.

அமரன் திரைப்படம்:

ராணுவ வீரர்களுக்கு தாடி வைப்பதற்கு அனுமதி கிடையாது எப்படி சிவகார்த்திகேயன் தாடி வைத்திருப்பது போன்ற காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன என்றெல்லாம் கேள்விகள் இருந்தது. இந்த மாதிரியான பல கேள்விகளுக்கு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தொடர்ந்து பதில் அளித்து வந்து கொண்டிருந்தார்.

அதேபோல படத்தில் ஏன் முகுந்த் வரதராஜனின் ஜாதி காட்டப்படவில்லை என்கிற ஒரு கேள்வியும் இருந்தது. அதற்குமே கூட ராஜ்குமார் பெரியசாமி பதில் அளித்து இருந்தார் இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இந்த படம் குறித்து ஒரு விமர்சனம் ஒன்றை வைத்திருந்தார்.

sivakarthikeyan

அதில் அவர் கூறும் பொழுது ஒரு ராணுவ அதிகாரியின் சம்பளத்தை பார்க்கும் பொழுது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. முகுந்த் வரதராஜனால் அவர்கள் ஆசைப்பட்ட நிலத்தை வாங்க முடியவில்லை நகரத்திற்கு வெளியே குறைந்த விலையில் நிலத்தை வாங்குவதற்கு அவர் திட்டமிடுவது போல காட்சிகள் இருக்கிறது.

விக்னேஷ் சிவன் கருத்து:

உயிரையே பணயம் வைத்து நாட்டுக்காக போராடுபவர்களுக்கு எவ்வளவு வெகுமதிகள் செய்ய வேண்டும். அவர்களுக்கு நிறைய சம்பளம் கொடுக்க வேண்டும் என்று பேசியிருந்தார் விக்னேஷ் சிவன். இந்த நிலையில் அமரன் திரைப்படத்தில் நடித்த முகுந்த் வரதராஜனின் நண்பரான இன்னொரு ராணுவ வீரர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது இப்பொழுது ராணுவ வீரர்களுக்கான சலுகைகள் என்பது மிக அதிகமாக இருக்கிறது.

ஒரு ஹமாம் சோப்பாக இருந்தாலும் கூட பொதுமக்களுக்கு வருவது போல ராணுவ வீரர்களுக்கு வருவது கிடையாது அதன் தயாரிப்பே ராணுவ வீரர்களுக்கு அதிக குவாலிட்டியாக செய்யப்படுகிறது. இப்படி ராணுவ வீரர்களுக்கு கொடுக்கப்படும் எல்லா பொருட்களுமே பொதுமக்களில் இருந்து சிறப்பானதாக மாற்றப்பட்டு தான் கொடுக்கப்படுகிறது.

அவர்களுக்கு நிறைய சலுகைகளும் கொடுக்கப்படுகிறது. இது இல்லாமல் குறைந்தபட்சமாகவே ஒரு ராணுவ அதிகாரிக்கு 2 லட்சம் ரூபாய் மாத சம்பளமாக இப்பொழுது வழங்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறியிருந்தார்.

முகுந்த் சார் போன்ல சொன்ன அந்த விஷயம்.. அதைதான் அமரன் படத்தில் காட்சியா வச்சேன்.. சீக்ரெட்டை கூறிய இயக்குனர்.!

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தற்சமயம் உருவாகி இருக்கும் திரைப்படம் அமரன். அமரன் திரைப்படத்தின் மீது அதிகமான எதிர்பார்ப்பு வருவதற்கு முக்கிய காரணமே நிஜமான ராணுவ வீரர் ஒருவரின் கதையை படமாக்கி இருக்கிறார்கள் என்பது தான்.

முகுந்த் வரதராஜன் என்கிற முன்னாள் ராணுவ வீரர் ஒருவரின் கதையை தான் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி படமாக்கி இருக்கிறார். முக்கியமாக சிவகார்த்திகேயனுக்கும் இது ஒரு வகையில் முக்கியமான படமாகும்.

ஏனெனில் இதுவரை காமெடி நடிகராக நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு ஒரு சீரியசான கதாபாத்திரத்தை கொடுத்து விஜய் அஜித் மாதிரியான கமர்சியல் நடிகர்கள் லிஸ்டில் கொண்டு வந்து சேர்த்து இருப்பது அமரன் திரைப்படம்தான்.

amaran

அமரன் படத்தில் வந்த காட்சி:

இந்த நிலையில் அமரன் படத்தில் வரும் ஒரு காட்சி குறித்து அதிக பேச்சுக்கள் இருந்து வந்தன. அமரன் திரைப்படத்தில் முகுந்த் இறந்துவிட்ட செய்தி வருவதற்கு முன்பு சாய்பல்லவி கதாபாத்திரம் போய் படுத்து உறங்குவதாக ஒரு காட்சி இருக்கும்.

ஏன் அந்த காட்சி வைக்கப்பட்டது என்று இயக்குனரிடம் கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த இயக்குனர் முகுந்த் வரதராஜன் இறப்பதற்கு முதல் நாள் அவரது மனைவிக்கு போன் செய்தார். அப்பொழுது எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதைப் பற்றி குழப்பிக் கொள்ளாதே? நிம்மதியாக தூங்குவதற்கு கற்றுக் கொள் என்று கூறி இருப்பார்.

அதைதான் முகுந்த் வரதராஜனின் மனைவி செய்வதாக நான் காட்சியில் வைத்திருக்கிறேன் என்று விளக்கி இருந்தார்.

உதயநிதி செல்வாக்கால் கங்குவா படத்திற்கு கிடைத்த சலுகை.. விஜய்யை மட்டும் வச்சு செய்ய வேண்டியது? கடுப்பான ரசிகர்கள்.!

kanguwa is a big budget movie starring actor Surya. This movie is getting a lot of response. This movie is going to hit the theaters tomorrow

நடிகர் சூர்யா நடிப்பில் பெரிய பொருட் செலவில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. பெரும்பாலும் சூர்யா நடிக்கும் திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் இருப்பது உண்டு. ஏனெனில் சூர்யா எப்போதுமே புதுப்புது கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர்.

ஒரு பக்கம் சண்டை காட்சிகள் கொண்ட கமர்சியல் திரைப்படங்களில் நடித்த அளவு கூட மற்றொரு பக்கம் மாறுபட்ட கதைக்களங்களை தேர்ந்தெடுத்தும் அவர் நடித்து வருகிறார். அவர் நடித்த 24 மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் அந்த மாதிரி தேர்ந்தெடுக்கப்பட்டதுதான்.

எதிர்பார்ப்பை தூண்டும் கங்குவா திரைப்படம்:

இந்த நிலையில் தற்சமயம் சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படம் இது அதிகப்படியான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏனெனில் இந்த படத்தின் கதை அம்சமே பலருக்கும் பிடித்த வகையில் அமைந்து இருக்கிறது. 700 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பழங்குடியின மக்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு கங்குவா திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

kanguva

இந்த நிலையில் பெரிய பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருப்பதால் இந்த படத்தை பேன் இந்தியா அளவில் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்து இருக்கின்றனர். அதனை தொடர்ந்து சூர்யா மற்றும் படக்குழுவினர் இந்தியா முழுவதும் பல இடங்களுக்கு சென்று படத்தை குறித்து விளம்பரத்தை செய்து வருகின்றனர்.

சிறப்பு காட்சிகள்:

தெலுங்கு மற்றும் மலையாளத்தில் சூர்யாவிற்கு ரசிகர்கள் அதிகம். அதனால் அங்கும் சென்று சூர்யா நேரடியாகவே தனது திரைப்படத்தை பிரமோஷன் செய்து வருகிறார். ஏனெனில் சூர்யாவும் இந்த திரைப்படத்தை அதிகமாக நம்பி இருக்கிறார்.

இவருக்கு கண்டிப்பாக இந்த திரைப்படம் கைகொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாளை இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் பொதுவாக பெரிய பெரிய திரைப்படங்களை ஸ்பெஷல் ஷோ முறையில் அதிகாலை காட்சிகள் மூலமாக திரையிடப்படும்.

ஆனால் எல்லா திரைப்படங்களும் அதற்கு அனுமதி கிடைப்பது கிடையாது ஆனால் கங்குவா திரைப்படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு முன்பு நிறைய விஜய் திரைப்படங்களுக்கு இந்த மாதிரியான சிறப்பு காட்சிகள் மறுக்கப்பட்டு இருக்கின்றன.

அப்படி இருக்கும் பொழுது கங்குவா திரைப்படத்திற்கு எப்படி அனுமதி கிடைத்தது என்று பார்க்கும் பொழுது உதயநிதி ஸ்டாலின் தான் இந்த திரைப்படத்தை வெளியிடுகிறார். அதனால்தான் இந்த படத்திற்கு அனுமதி கிடைத்திருக்கிறது என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. அதே சமயம் விஜய் மீது இருக்கும் கோபத்தின் காரணமாக தான் அவரது திரைப்படத்திற்கு மட்டும் அனுமதி வழங்க மறுக்கிறார்கள் என்றும் ஒரு பக்கம் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

அமரன் படம் மீது குற்றச்சாட்டு வைத்த ராணுவ அதிகாரி.. பதிலடி கொடுத்த இயக்குனர்.!

Directed by Rajkumar Periyasamy, the recently released movie Amaran. The film has collected more than 200 crores within 10 days of its release.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் அமரன். இந்த திரைப்படம் வெளியான 10 நாட்களுக்குள்ளாகவே கிட்டத்தட்ட 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருக்கிறது.

இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களிலேயே அதிக வசூல் கொடுத்த திரைப்படமாக அமரன் திரைப்படம்தான் இருக்கிறது இத்தனைக்கும் மற்ற திரைப்படங்கள் அளவிற்கு இந்த படத்தில் அவ்வளவாக சிவகார்த்திகேயன் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை.

இருந்தாலும் கூட சிவகார்த்திகேயனுக்கு அதிக வரவேற்பு கிடைத்து இருக்கிறது. எனவே இனி சிவகார்த்திகேயன் தொடர்ந்து ஆக்ஷன் திரைப்படங்களாகதான் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு நடுவே இந்த திரைப்படம் குறித்து நிறைய சர்ச்சைகள் ஒரு பக்கம் எழுந்து வந்தன.

amaran

அமரன் படத்தில் சர்ச்சை:

ஒரு பக்கம் முகுந்த் வரதராஜன் ஜாதி என்னவென்று ஏன் படத்தில் கூறவில்லை என்று ஒரு கும்பல் பேசி வந்தது. இன்னொரு பக்கம் இராணுவ அதிகாரிகளை கொச்சைப்படுத்தும் விதமாக இந்த படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் அளித்து வருகிறார் ராஜ்குமார் பெரியசாமி .அந்த வகையில் ராணுவம் குறித்த குற்ற சாட்டுக்கு அவர் பதில் அளிக்கும் போது இந்த திரைப்படம் பாதுகாப்புத்துறை அமைச்சகம் மற்றும் ஏ.டி.ஜி.பி.ஐ ஒப்புதல் பெற்ற பின்னர் தான் படமாக உருவாக்கப்பட்டது.

படத்தை சென்சருக்கு அனுப்புவதற்கு முன்பே பாதுகாப்பு அமைச்சகத்திற்கு நாங்கள் போட்டு காட்டினோம். அவர்கள் கூறிய அறிவுரைகளையும் கருத்துகளையும் கொண்டு பாடத்தில் திருத்தங்களை செய்த பின்பு தான் சென்சாருக்கே அனுப்பினோம் அவர்கள் கொடுத்த சான்றிதழ் எங்களிடம் உள்ளது எனவே யாரோ குற்றம் சொல்கிறார்கள் என்று அதை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறி இருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.