Connect with us

ஒரு பாடலுக்குதான் வரி எழுதினேன்! –  ஒரே வாய்ப்பில் பெரும் ஹிட் கொடுத்த பஞ்சு அருணாச்சலம்!

Latest News

ஒரு பாடலுக்குதான் வரி எழுதினேன்! –  ஒரே வாய்ப்பில் பெரும் ஹிட் கொடுத்த பஞ்சு அருணாச்சலம்!

cinepettai.com cinepettai.com

தமிழ் திரையுலகில் பன்முகத்தன்மை கொண்ட ஒரு நபராக இருந்தவர் பஞ்சு அருணாச்சலம். சினிமாவில் உள்ள அனைத்து துறைகளிலும் கால் பதித்தவர் பஞ்சு அருணாச்சலம் என சொல்லலாம்.

சினிமாவிற்கு வந்த புதிதில் இவர் கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்தார். அப்போதைய காலக்கட்டங்களில் ஒரு படத்தின் பாடல்களுக்கு இசையமைப்பாளர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு பாடலாசிரியர்களும் முக்கியமானவர்களாக இருந்தனர்.

கவிஞர் கண்ணதாசன் எழுதும் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்ததால் அப்போது தமிழ் சினிமாவில் முக்கால்வாசி பாடல்களுக்கு கண்ணதாசன்தான் பாடல் வரிகளை எழுதி வந்தார். இந்த நிலையில் 1960 களில் வெளிவர இருந்த திரைப்படம் சாரதா.

இந்த படத்திற்கும் கூட கண்ணதாசன்தான் பாடல் வரிகளை எழுதி தந்தார். ஆனால் இறுதிக்கட்டத்தில் படத்தில் இன்னொரு பாடல் சேர்க்க வேண்டி இருந்ததால் படக்குழு கண்ணதாசனை தொடர்பு கொள்ள முயற்சி செய்தது.

ஆனால் அதற்குள்ளாக கண்ணதாசன் வெளியூருக்கு சென்றுவிட்டார். உடனடியாக பாடலுக்கு வரிகள் எழுத வேண்டும் என்கிற நிலை வரவே அவர்கள் கண்ணதாசனின் உதவியாளராக இருந்த பஞ்சு அருணாச்சலத்தை அணுகியுள்ளனர்.

அவரும் படக்குழு மிகவும் வற்புறுத்தி கேட்டதால் ஒரு பாடலுக்கு வரிகளை எழுதி கொடுத்தார். சாரதா படத்தில் வரும் மணமகளே மணமகளே வா வா என்னும் அந்த பாடல் திரைத்துறையில் மிகவும் பிரபலமானது. இப்படி முதல் பாடலிலேயே ஹிட் கொடுத்து பஞ்சு அருணாச்சலம் திரை துறைக்குள் வந்தார்.

To Top