Connect with us

குட் நைட் படத்தை பார்த்துட்டு எங்கம்மா சொன்னதை மறக்க மாட்டேன்!.. இதையா கவனிச்சீங்க!.. மணிகண்டனுக்கு நடந்த சம்பவம்!..

actor manikandan

News

குட் நைட் படத்தை பார்த்துட்டு எங்கம்மா சொன்னதை மறக்க மாட்டேன்!.. இதையா கவனிச்சீங்க!.. மணிகண்டனுக்கு நடந்த சம்பவம்!..

Social Media Bar

Goodnight Manikandan: தமிழில் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் முக்கியமானவராக நடிகர் மணிகண்டன் இருக்கிறார். ஜெய் பீம் திரைப்படம்தான் மணிகண்டனுக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

பழங்குடி இன மக்களை சேர்ந்த நபராக அதில் நடித்திருந்த மணிகண்டன் மிகச் சிறப்பாக அவரது நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரத் துவங்கி விட்டன. அதற்கு பிறகு அவர் நடித்த குட் நைட் திரைப்படம் ஜெய் பீம் படத்திலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட ஒரு கதை களமாகும்.

ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் வாழும் ஒரு இளைஞனுக்கு இருக்கும் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு செல்லும் இந்த கதை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் மணிகண்டனை பொறுத்தவரை அவர் நடிக்கும் எந்த திரைப்படத்தையும் அவர் பார்க்கவே மாட்டாராம்.

படத்தை பார்த்த அம்மா:

ஏனெனில் அவர் நன்றாக நடிப்பதில்லை என்று அவருக்கு தோன்றுமாம் இதை அவரே ஒரு பேட்டி கூறியிருக்கிறார். இந்த நிலையில் குட் நைட் திரைப்படத்தை தனது தாய் பார்த்துவிட்டு வந்து அவரது அனுபவத்தை பகிர்ந்த விஷயத்தை மணிகண்டன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது அந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு இரண்டு நாள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன் சாப்பாடு கூட சாப்பிட முடியவில்லை என்று அவரது தாய் ஆனந்தமாக கூறினாராம். சரி நமது நடிப்பை பாராட்டி தான் அப்படி கூறுகிறார் என்று நினைத்தபொழுது அதெல்லாம் இல்லை உனக்கு கல்யாணம் ஆவது போன்ற காட்சி படத்தில் இருந்தது அதை பார்ப்பதற்கு மிக ஆனந்தமாக இருந்தது என்று கூறி இருக்கிறார் மணிகண்டனின் தாய்.

அதற்கு பதில் அளித்த மணிகண்டன் எனது திருமணத்தை திரைப்படத்தில் மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும். எனவே எப்பொழுது எல்லாம் எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அந்த படத்தை வைத்து பார்த்துக் கொள் என்று நகைச்சுவையாக கூறி இருக்கிறார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top