Latest News
நடிகர்களிடம் பணத்தை ஏமாற்ற பார்த்த ஏஜெண்ட் – சட்டையை பிடித்த கேப்டன்!
கேப்டன் விஜயகாந்திற்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே நல்ல மதிப்பு உண்டு. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பணியாளர்களுக்கு நிறைய நன்மைகள் செய்துள்ளார் விஜயகாந்த்.
அப்போதெல்லாம் நடிகர் சங்கத்திற்கு எதாவது நல்லது செய்ய வேண்டும் எனில் அதற்கு முதலில் நிதி திரட்ட வேண்டும். இந்த மாதிரி நிதி திரட்டுவதற்காக அப்போதெல்லாம் நடிகர்கள் ஒன்று கூடி வெளிநாடுகளுக்கு சென்று நிகழ்ச்சிகள் நடத்துவார்கள்.
இந்த நிகழ்ச்சிகள் மூலமாக சேரும் பணத்தை கொண்டு நடிகர்கள் சங்கத்திற்கு உதவி புரிவார்கள். விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோதும் இதே போன்ற விழா ஒன்று சிங்கப்பூரில் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட அந்த விழாவில் 1.5 லட்சம் ரூபாய்க்கு டிக்கெட் விற்றது.
வெளிநாட்டில் இருக்கும் ஒரு ஏஜென்சி நிறுவனம்தான் இந்த நிகழ்ச்சிகளின் வரவு செலவு கணக்குகளை பார்த்துக்கொண்டது. வந்த லாபத்தில் சுமார் 75,000 ரூபாயை இந்த நிறுவனம் சுருட்டிவிட்டது.
இந்த விஷயம் விஜயகாந்த் காதுக்கு வந்தது. வேகமாக அந்த ஏஜெண்டிடம் சென்ற விஜயகாந்த அவரது சட்டையை பிடித்து சுவற்றோடு வைத்து பிடித்துள்ளார். முழு காசும் ஒழுங்கு மரியாதையா வந்து சேரணும் என மிரட்டிவிட்டு சென்றார்.
அடுத்த அரை மணி நேரத்தில் அந்த நிறுவனம் முழு பணத்தையும் ஒப்படைத்ததாம். படத்தில் பார்ப்பது போல நிஜ வாழ்க்கையிலும் அடாவடியான ஆளாகதான் கேப்டன் இருந்திருக்கிறார்.