vijay anitha

இப்ப மட்டும் அந்த பல்லி கத்துதா1.. கள்ளக்குறிச்சி கள்ளசாராயம் விவகாரத்தில் விஜய்யை கலாய்த்த நடிகை.. கடுப்பான ரசிகர்கள்..!

News Tamil Cinema News

தமிழக அரசியலில் தற்சமயம் முக்கியமான ஒருவராக இருக்கிறார் நடிகர் விஜய். அரசியல் மீது தீவிரமாக ஆர்வம் காட்டி வரும் விஜய் திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க போவதில்லை என்றும் அறிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் சமூகத்தில் நடக்கும் நிறைய பிரச்சனைகளுக்கு குரல் எழுப்பி வருகிறார் விஜய். அந்த வகையில் சமயத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த காரணத்தினால் 25 பேர் உயிரிழந்து இருந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சிக்கு பயணம்:

இந்த நிலையில் அவர்களை நலம் விசாரிப்பதற்காக சென்றிருந்தார் விஜய் அப்பொழுது விஜய்யை விமர்சிக்கும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தால் பிரபல செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான அனிதா சம்பத்.

அதில் அவர் கூறும் போது ”நாட்டுக்காக போராட பார்டருக்கு  போனப்ப டெரரிஸ்ட் நேருக்கு நேர் தாக்கும் போது நெஞ்சில் குண்டடிபட்டு ஹாஸ்பிடலில் கவலைக்கிடமாய் இருக்காங்க பாவம்” என நக்கலாக பதிவிட்டு இருந்தார்.

இதனை பார்த்த விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த கோபம் வந்து விட்டது அரசியல் பிரமுகர்கள் கூறும்போது உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்த்துவிட்டு அவர்களுக்கு நிவாரண நிதிகளும் அறிவித்து வந்தனர்.

அனிதாவின் செயல்:

அப்பொழுதெல்லாம் வாய் திறக்காத அனிதா சம்பத் விஜய் வரும்பொழுது மட்டும் இப்படி கமெண்ட் செய்திருப்பது ஏன் ஏனென்றால் சன் டிவியில் செய்தியாளராக பணியாற்றியவர் அனிதா சம்பத்.

அந்த விசுவாசத்தின் காரணமாக திமுக குறித்து அவர் விமர்சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் தளபதி விஜய்யை இப்படி விமர்சிக்க அவருக்கு என்ன தைரியம் என்று அவரை விமர்சித்து வருகின்றனர் ரசிகர்கள். பிக் பாஸ் மூலமாக பிரபலமான நடிகை அனிதா சம்பத் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடப்பட்டது.