ஓ#$தா யார்ரா பேசுறது!.. நடிகர் அசோக் செல்வனை கெட்ட வார்த்தையில் திட்டிய இசையமைப்பாளர்!..

Actor Ashok selvan: தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து கொஞ்சம் வளர்ந்து வரும் நடிகர்களில் அசோக் செல்வனும் ஒருவர். சூது கவ்வும் திரைப்படத்தில் இவர் நடித்தப்போது இவருக்கு கதாபாத்திரம் கூட பெரிதாக இல்லை.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல நடிகர் பாபி சிம்ஹாவை விடவும் அசோக் செல்வனுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. அசோக் செல்வன் சினிமா வாழ்க்கையில் தெகிடி மற்றும் ஓ மை கடவுளே இரண்டு திரைப்படங்களும் முக்கியமான திரைப்படங்களாகும்.

தெகிடி திரைப்படம் பெரும் வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் கூட வந்த சமயத்தில் வெகுவாக பேசப்பட்ட திரைப்படமாக இது இருந்தது. அதற்கு பிறகு வந்த ஓ மை கடவுளே திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை பெற்றது.

ashok-selvan
ashok-selvan
Social Media Bar

தற்சமயம் இவர் நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து ப்ளூ ஸ்டார் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தனர். இது தற்சமயம் திரையரங்கில் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் ப்ளூ ஸ்டார் ப்ரோமோஷனுக்காக ஒரு பேட்டி அளித்தப்போது அதில் யாருக்காவது ப்ராங்க் கால் செய்ய சொல்லி கூறியிருந்தனர். உடனே தற்சமயம் வளர்ந்து வரும் இசையமைப்பாளரான நிவாஸ் கே பிரசன்னாவிற்கு போன் செய்தார் அசோக்.

போன் செய்ததும் சார் நிவாஸா நான் உங்களின் பெரிய ஃபேன் சார் என அசோக் செல்வன் பேசவும் அவர் கெட்ட வார்த்தைகளில் திட்ட துவங்கினார் நிவாஸ். இதனையடுத்து பிறகு அவரே அசோக் செல்வன் தான் பேசுகிறார் என கண்டுப்பிடித்துவிட்டார். ஆனால் ஒரு ஷோவில் இதெல்லாம் கேட்டுக்கொண்டுள்ளனர் என்பது அவருக்கு பிறகுதான் தெரிந்தது.

Source: Link