Connect with us

கிராபிக் தரமா இருக்கணும் –  வாடி வாசல் படத்தில் இணைந்த அவதார் குழு!

News

கிராபிக் தரமா இருக்கணும் –  வாடி வாசல் படத்தில் இணைந்த அவதார் குழு!

Social Media Bar

எழுத்தாளர் சி.சு செல்லப்பா எழுதி வெளிவந்த ஜல்லிக்கட்டு தொடர்பான நாவல் வாடிவாசல்.

இந்த நாவல் தற்சமயம் படமாக்கப்பட்டு வருகிறது. இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தை இயக்கி வருகிறார். நடிகர் சூர்யா, ஆண்ட்ரியா, அமிர் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பிற்கான வேலைகள் நடந்துக்கொண்டுள்ளன. படம் ஜல்லிக்கட்டு தொடர்பானது  என்பதால் காளைகளை படத்தில் காட்ட வேண்டியது வரும். காளையுடன் சண்டைக்காட்சிகள் இருக்கும். அவற்றிற்கு கிராபிக் முறையில்தான் காட்சியை அமைக்க வேண்டி வரும்.

எனவே இதற்காக வெற்றி மாறன் சிறப்பான வி.எஃப்.எக்ஸ் குழுவை இறக்க திட்டமிட்டார். அப்படியாக விசாரித்து அவதார் படத்தில் பணிப்புரிந்த ஒரு வி.எஃப்.எக்ஸ் குழுவை தற்சமயம் வாடிவாசல் திரைப்படத்திற்காக நியமித்துள்ளனர்.

அவதார் குழு வி.எஃப்.எக்ஸ் செய்வதால் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் தரமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

To Top