Connect with us

அன்னைக்கு காரை எடுக்காமல் இருந்திருந்தா இந்த நிலை இருந்திருக்காது!.. பவதாரணி இழப்பு குறித்து பத்திரிக்கையாளர் விளக்கம்!.

ilayaraja bavatharani

News

அன்னைக்கு காரை எடுக்காமல் இருந்திருந்தா இந்த நிலை இருந்திருக்காது!.. பவதாரணி இழப்பு குறித்து பத்திரிக்கையாளர் விளக்கம்!.

Social Media Bar

Bavatharani and Ilayaraja: தொடர்ந்து நடந்து வரும் திரை பிரபலங்களின் இழப்பு என்பது தமிழ் மக்கள் மத்தியிலேயே அதிக வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மாதம் விஜயகாந்தின் இழப்பில் இருந்தே இன்னும் மீளாமல் இருக்கும் ரசிகர்களுக்கு தற்சமயம் இளையராஜாவின் மகளான பவதாரணியின் இழப்பு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பாரதிராஜா முதற்கொண்டு பல  மூத்த பிரபலங்கள் தூக்கி வளர்த்த ஒரு பெண்தான் பவதாரணி. ஆனால் அவர் இவ்வளவு வெகு சீக்கிரத்தில் காலமானது பலருக்கும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பவதாரணிக்கு புற்றுநோய் பிரச்சனை இருப்பது அறிந்த உடனேயே அவரது குடும்பத்தினர் அதை பவதாரணியிடம் மறைத்துதான் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர் என்று கூறப்படுகிறது. இறுதிவரை பவதாரணிக்கு அவருக்கு புற்றுநோய் இருக்கும் விஷயமே தெரியாமல் பார்த்துக் கொண்டனர் என்றும் கூறப்படுகிறது.

கிமோதெரபி என்கிற புற்றுநோய்க்கான சிகிச்சைதான் முதலில் பவதாரணிக்கு வழங்கப்பட இருந்தது. ஆனால் அவரது உடல்நிலை அப்பொழுது மிகவும் மோசமான நிலையை அடைந்து விட்டதால் கீமோதெரபிக்கு அவரது உடல்நிலை ஆதரவளிக்காது.

எனவே அவருக்கு இயற்கை வழி சிகிச்சைகள்தான் அளிக்க வேண்டும் என்று கூறி இலங்கையில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்திருக்கின்றனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பே இளையராஜா அங்கு ஒரு இசை நிகழ்ச்சி நடத்த இருந்ததால் அது தொடர்பான வேலைகளை செய்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இளையராஜாவை பார்த்தே ஆக வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டிருக்கிறார் பவதாரணி. ஆனால் அதற்கு யாரும் அனுமதிக்காத காரணத்தினால் அவரே அங்கே இருந்த காரை எடுத்துக்கொண்டு இளையராஜாவை பார்க்க நேரில் சென்றதாக கூறப்படுகிறது. அதை பார்த்து பதறிப் போன இளையராஜா கூறி இருந்தால் நானே பார்க்க வந்திருப்பேனே எதற்கு அம்மா நேரில் வந்தாய் என்று கேட்கவும் இல்லை உங்களை பார்த்தே ஆக வேண்டும் என்று எனக்கு தோன்றியது என்று கூறி இருக்கிறார் பவதாரணி.

அதன்பிறகு திரும்ப மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்ற பொழுது வரும் வழியில் அவர் தூசிகளை முகர்ந்ததன் காரணமாக பெரும் மூச்சுத் திணறல் ஏற்பட ஆரம்பித்தது. மூன்று நாட்கள் தொடர்ந்த இந்த பிரச்சனை இறுதியில் உயிரையே பறித்து விட்டது என்று கூறுகிறார் பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் இளையராஜாவிற்கு தனது மகளின் பிரிவு ஒரு ஆறாத துயராக அமைந்துள்ளது.

Articles

parle g
madampatty rangaraj
To Top