Connect with us

குறைந்த வாடகைக்காக புகை பிடிச்ச அறையில் தங்கிய ரஜினி!.. ஆரம்பத்தில் இவ்வளவு கஷ்டப்பட்டாரா?..

News

குறைந்த வாடகைக்காக புகை பிடிச்ச அறையில் தங்கிய ரஜினி!.. ஆரம்பத்தில் இவ்வளவு கஷ்டப்பட்டாரா?..

Social Media Bar

சினிமாவிற்கு வரும் ஆரம்ப காலகட்டங்களில் அனைத்து நடிகர்களும் சாதாரண மனிதர்களே, அவர்கள் சினிமாவிற்கு வரும்பொழுது எக்கச்சக்கமான கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். ஆனால் அவர்கள் பெரிய ஆள் ஆன பிறகு அதை யாரும் கண்டு கொள்வதில்லை.

அவர் இப்பொழுது கோடி கணக்கில் சம்பளம் வாங்குகிறார் என்று மட்டும் தான் பார்க்கிறார்கள் அப்படியாக நடிகர் ரஜினிகாந்த் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிற்கு வந்தார். கர்நாடகாவில் பிறந்த ரஜினிகாந்த் தனக்கு இருந்த நடிப்பின் ஆர்வம் காரணமாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார்.

அப்படி வாய்ப்பு தேடி வந்த பொழுது அவருக்கு முதலில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வாய்ப்பு கிடைத்த பிறகு தங்குவதற்கு இடம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டார் ரஜினிகாந்த். அப்போது ஒரு இடத்தில் தங்குவதற்கும் சாப்பாட்டுக்கும் சேர்த்து மாதம் 32 ரூபாய் என்கிற ரீதியில் தங்கும் இடம் கிடைத்தது.

ஆனால் ரஜினிகாந்திடம் குறைவாகவே காசு இருந்ததால் அங்கு இருந்த உரிமையாளரிடம் ஒரு பேச்சு வார்த்தை நடத்தினார். அதன்படி சாப்பாடு செய்யும் இடத்தில் இருந்து புகை செல்லும் புகை போக்கிக்கு அருகில் ஒரு இடம் இருந்தது. அந்த இடத்தில் தங்கிக் கொள்ள 28 ரூபாய் கொடுத்தால் போதும் என்று கூறியிருந்தார்.

ஆனால் பகல் முழுதும் அந்த இடம் புகையாகதான் இருக்கும் இரவில் அடுப்பை நிறுத்திய பிறகு புகையெல்லாம் அடங்கி அந்த இடத்தில் இருக்கும் வெப்பமும் குறைந்த பிறகுதான் அங்க போய் படுக்க முடியும். அப்படியாக இரவு தூங்குவதற்கு மட்டும் அந்த அறைக்கு செல்வார் ரஜினிகாந்த் இப்படியே அங்கே தங்கி வாய்ப்பு தேடி தன் இவ்வளவு பெரிய நடிகராகியுள்ளார் ரஜினிகாந்த். இந்த விஷயத்தை நடிகர் இளவரசு ஒரு பேட்டியில் பகிர்ந்து எடுத்தார்.

To Top