லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து தப்பு பண்ணுனார்!.. அநியாயமாக பலி போட்ட இளையராஜா!.. கமல் கடுப்பாக வாய்ப்பிருக்கு!..

இளையராஜா பாடல்களுக்கு காப்புரிமை குறித்த பிரச்சனை தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே சென்றுக்கொண்டுள்ளது. இளையராஜா அவர் இசையமைத்த பாடல்களுக்கான காப்புரிமையை அவருக்கு வழங்க வேண்டும்.

அதன்படி இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துவதற்கு அவருக்கு ஒரு உரிமை தொகையை பயன்படுத்துபவர்கள் கொடுக்க வேண்டும் என்பது இளையராஜாவின் வாதமாக இருக்கிறது. ஆனால் ஒரு பாடலுக்கான காப்புரிமை என்பது பொதுவாக தயாரிப்பாளரை சார்ந்தது. அதை எந்த நிறுவனத்திற்கு வேண்டுமானாலும் அவர்கள் விற்று கொள்ளலாம்.

ilayaraja
ilayaraja
Social Media Bar

இந்த நிலையில் இளையராஜா இப்படி கேட்பது புது விஷயமாக இருப்பதால் நீதிமன்றமே இதற்கு என்ன தீர்ப்பளிப்பது என்று தெரியாமல் இருக்கிறது. இந்த நிலையில் தற்சமயம் அனிரூத் இசையில் கூலி திரைப்படத்தில் வெளிவந்த பாடலில் இளையராஜாவின் பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இந்த பாடலுக்கு காப்புரிமை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் இளையராஜா. மேலும் லோகேஷ் கனகராஜ் விக்ரம் மற்றும் ஃபைட் க்ளப் போன்ற படங்களில் தனது பாடலை பயன்படுத்தியிருப்பதையும் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

ஆனால் விக்ரம் திரைப்படத்தின் பாடலானது கமலுக்கு உரிதானதாகும். ஏனெனில் பழைய விக்ரம் திரைப்படத்தை தயாரித்ததே கமல்தான். இப்படியிருக்கும்போது அதையும் தனது லிஸ்ட்டில் சேர்த்திருப்பது கமலுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.