Connect with us

என்கிட்டயே சந்தேகமா?.. பத்தாயிரம் பந்தயம் வச்சிக்கலாமா!.. இயக்குனரோடு போட்டி போட்டு ஜெயித்த கலைஞர்!..

karunanithi

Cinema History

என்கிட்டயே சந்தேகமா?.. பத்தாயிரம் பந்தயம் வச்சிக்கலாமா!.. இயக்குனரோடு போட்டி போட்டு ஜெயித்த கலைஞர்!..

Social Media Bar

Kalainger M Karunanithi: கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் இப்போது உள்ளதை விடவும் திரைப்படம் இயக்குவது என்பது எளிமையான விஷயமாக இருந்தது. அதேபோல அப்பொழுது இருந்த திரைப்பட கலைஞர்கள் அனைவருக்கும் ஒரே அளவிலான சம்பளம் கிடைத்தது.

உதாரணமாக கதாநாயகனுக்கு கிடைக்கும் சம்பளத்தில் பாதி அளவு இசையமைப்பாளர் பாடலாசிரியர் திரைக்கதை எழுதுபவர்கள் ஆகியவர்களுக்கு கிடைக்கும். ஆனால் இப்பொழுது எல்லாம் அது குறைந்துவிட்டது.

Karunanidhi-1
Karunanidhi-1

அப்பொழுது திரைக்கதை எழுதுவதில் மிகவும் பிரபலமானவராக கலைஞர் மு கருணாநிதி இருந்தார். இந்த சமயத்தில் 1961 ஆம் ஆண்டு இயக்குனர் எல்.வி பிரசாத் ஒரு கதையை படமாக்க நினைத்தார். ஆனால் அந்த படிக்கும் பொழுது கொஞ்சம் சுமாராகத்தான் இருந்தது. இந்த படத்திற்கு கலைஞர் வசனம் எழுதினால் ஒரு வேலை திரைப்படம் நன்றாக அமைவதற்கு வாய்ப்பு உள்ளது என்று நினைத்து அவர் அந்த கதையை கருணாநிதியிடம் கொண்டு சென்றார்.

கலைஞர் எழுதிய திரைக்கதை:

அதனை படித்த கருணாநிதி கதை சுமாராகதான் இருக்கிறது திரைக்கதையில் இதை சிறப்பான ஒரு படமாக மாற்ற முடியும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். அதன் பிறகு அமர்ந்து திரைக்கதையையும் எழுதி இருக்கிறார். பிறகு எல் வி பிரசாத் தாயில்லா பிள்ளை என்கிற அந்த படத்தின் திரைக்கதையை படித்திருக்கிறார்.

அப்பொழுதும் கூட அவருக்கு மன நிறைவாகவே இல்லை அப்பொழுது கருணாநிதி ஒன்று கூறி இருக்கிறார். இந்த திரைப்படத்தை படமாக்கி வெளியிடுங்கள் கண்டிப்பாக இந்த திரைப்படம் 100 நாள் ஓடும் என்று கூறி இருக்கிறார். என்ன படம் வெற்றி பெறுமா என்பதே சந்தேகமாக இருக்கும் பொழுது கலைஞர் 100 நாட்கள் ஓடும் என்று கூறுகிறாரே என்று சந்தேகப்பட்டிருக்கிறார் இயக்குனர்,

இதனை கண்டு கொண்ட கலைஞர் அந்த திரைப்படம் 100 நாட்கள் ஓடினால் எனக்கு பத்தாயிரம் ரூபாய் நீங்கள் தர தயாரா என்று கேட்டிருக்கிறார். சரி என்று எல்.வி பிரசாத்தும் ஒப்பு கொண்டிருக்கிறார். பிறகு அந்த திரைப்படம் வெளியான பிறகு கருணாநிதி கூறியது போலவே 100 நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்றது.

அந்த நூறாவது நாள் ஓடிய அன்றே வேக வேகமாக வந்து எல்.வி பிரசாத் கருணாநிதியிடம் பத்தாயிரம் ரூபாயை கொடுத்திருக்கிறார் அந்த அளவிற்கு தன்னுடைய திரைக்கதையின் மீது நம்பிக்கை வைத்திருந்திருக்கிறார் கலைஞர் மு கருணாநிதி.

To Top