Tamil Cinema News
உங்களை மிஸ் பண்ணினது வருத்தம்தான்.. சந்தானத்திடம் பேசிய ராஜமௌலி..!
காமெடி நடிகர்களை பொருத்தவரை தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் தங்களுக்கான காமெடி காட்சிகளை அவர்களே அமைத்துக் கொள்வதுதான் வழக்கம்.
நடிகர் வடிவேலு கூட நிறைய திரைப்படங்களில் அவருக்கான காமெடி காட்சிகளை அவரே அமைத்துக் கொள்வார். அதேபோலதான் நடிகர் சந்தானமும் இது குறித்து சந்தானம் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
அதில் அவர் கூறும் பொழுது பொல்லாதவன் திரைப்படத்தில் நான் நடித்த பொழுதே வெற்றிமாறன் எனக்கு என்று எந்த காட்சியும் எழுதவில்லை. தயாரிப்பாளர் சொன்னதால்தான் என்னை அந்த திரைப்படத்தில் நடிக்க வைத்தார்.
அப்பொழுதே வெற்றிமாறன் என்னிடம் கூறியது என்னவென்றால் நடிகர் கருணாஸுக்காக சில காட்சிகள் நான் படத்தில் வைத்திருக்கிறேன். உங்களுக்கென்று எந்த கட்சியும் நான் எழுதவில்லை. எனக்கு காமெடியாக எழுதவும் தெரியாது.
எனவே நீங்களே உங்களுக்கான காட்சிகளை அமைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். நானும் அந்த இடத்திற்கு தகுந்த மாதிரியான காமெடிகளை உருவாக்கினேன். அது நல்ல வரவேற்பையும் பெற்றது. அதேபோல நான் ஈ திரைப்படத்தில் நான் நடித்த பொழுது இயக்குனர் ராஜமௌலி அதை தான் கூறினார்.
எனக்கு காமெடி எல்லாம் எழுத தெரியாது திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்திற்கு டயலாக்கே கிடையாது அவருக்கு தகுந்த மாதிரியாக காமெடி காட்சிகளை அமைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
நானும் மைண்ட் வாய்ஸில் பேசுவது போலவே அந்த கதாபாத்திரத்தை அமைத்திருந்தேன் பிறகு ராஜமவுலி அந்த படத்தை பார்த்த பிறகு உங்களை நான் மிஸ் செய்து விட்டேன் என்று என்னிடம் கூறினார் என்று சந்தானம் இந்த நிகழ்வுகளை பகிர்ந்து விட்டார்.
