News
மக்களுக்கு விழிப்புணர்வு தரணும்னு எனக்கு எண்ணம் கிடையாது – சர்தார் குறித்து பேசிய இயக்குனர்
இயக்குனர் பி.எஸ் மித்ரன் என்றாலே வித்தியாசமான கதைகளை படமாக்க கூடியவர் என்று ஒரு பிம்பம் உண்டு. அவர் படமாக்கிய இரும்பு திரை, ஹீரோ இரண்டுமே வித்தியாசமான கதைகளை கொண்ட ஒரு திரைப்படமாகும். இந்த இரண்டு திரைப்படங்களுமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

எப்போதும் பி.எஸ் மித்ரன் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திரைப்படங்களை இயக்குபவர் என்ற பெயர் உண்டு.
தற்சமயம் சர்தார் படத்திற்காக பேட்டி ஒன்றில் பேசினார் பி.எஸ் மித்ரன். அப்போது அவரிடம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உங்கள் படங்கள் இருக்கிறதே? என கேட்டனர்.
அதற்கு பதிலளித்த மித்ரன் மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை. நாம் பார்க்கும் ஒவ்வொரு விஷயத்திலும் இன்னொரு பக்கம் இருக்கும்.
அதை படமாக்கும்போது சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால் படமாக்குகிறேன் என கூறியிருந்தார்.
