Connect with us

ஒரே நைட்டில் ஏரோப்ளேனில் வைத்து சம்பவம் செய்த ஹாரிஸ்! –  என்ன சம்பவம் தெரியுமா?

News

ஒரே நைட்டில் ஏரோப்ளேனில் வைத்து சம்பவம் செய்த ஹாரிஸ்! –  என்ன சம்பவம் தெரியுமா?

Social Media Bar

திரை உலகில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த  இசை அமைப்பாளர்களில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு முக்கியமான  இசையமைப்பாளர் ஆவார்.

 ஏ ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா இவர்கள் வரிசையில் அப்பொழுது இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் இருந்தார். 2010 காலகட்டங்களில் ஹாரிஸ் ஜெயராஜின் இசைக்கு ஒரு ரசிகர் பட்டாளமே தமிழ் சினிமாவில் இருந்தது.

 இப்போதும் கூட  அவருக்கு என்று ஒரு தனி  ரசிகா வட்டாரம் இருக்கிறது. 2016 ஆம் ஆண்டு ஹாரிஸ் ஜெயராஜ்,  விக்ரம் நடித்த இருமுகன் என்கிற திரைப்படத்திற்கு இசையமைத்தார்.  இந்த படத்தில் வரும் தீம் மியூசிக் மிகவும் பிரபலமானது.

 ஆனால் படத்தில் காண முக்கியமான இசையை ஒரே இரவில் இசையமைத்துள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ். இருமுகன் படத்திற்கு டீசர் ட்ரைலருக்கான இசையை ஒரே இரவில் இசையமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

படத்தின் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் திடீரென ஹாரிஸ் ஜெயராஜ்க்கு போன் செய்து உடனே டீசருக்கு இசையமைக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் அன்றைய தினம் ஹாரிஸ் ஜெயராஜ் முக்கியமான வேலையாக வெளிநாடு கிளம்பி கொண்டிருந்தார்.

இருந்தாலும் அவசரமாக இசையமைத்து கேட்பதால் ஒரு லேப்டாப்பையும் கீ போர்டையும் எடுத்துக்கொண்டு ஏரோப்ளேன் ஏறியுள்ளார் ஹாரிஸ். ஏரோப்ளேனில் விடிய விடிய அமர்ந்து ஒரே நாளில் டீசருக்கான இசையை தயார் செய்து காலையில் இயக்குனருக்கு அனுப்பியுள்ளார்.

அந்த அளவிற்கு தனது பணிக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ்.

To Top