Bigg Boss Tamil
விஷ்ணு, மாயாவை காப்பாற்றிய பவா! – பிக்பாஸ் குடுத்த திடீர் அறிவிப்பு!
பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷனுக்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்களில் முக்கியமானவர்கள் விஷ்ணு , மாயா. கடந்த வாரம் அதிகப் பேரால் பரிந்துரைக்கப்பட்ட பிரதீப், இந்த வாரத்தில் வெறும் மூன்று பேரால் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டு கடைசி இடத்தில் உள்ளார்.
இந்த வாரத்தில் யார் எலிமினேஷன் ஆவார்? என்ற கேள்விகள் ஒரு பக்கம் இருக்க, அவர்களது பெர்ஃபார்மென்ஸை பொறுத்து பார்வையாளர்கள் அவர்களுக்கு ஓட்டு போட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது விஜய் டிவி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனன்யா வெளியேற்றப்பட்ட அடுத்த நாளே எழுத்தாளர் பவா செல்லதுரை தான் வெளியேறுவதாக அடம்பிடித்து வெளியே சென்றுவிட்டார். ஒரே வாரத்தில் இரண்டு பேர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதால் இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் விஷ்ணு, மாயா ஆகியோர் கொண்டாட்டத்தில் இருக்கலாம். என்னென்றால் இந்த வாரம் அதிகம் பரிந்துரைக்கப்பட்ட இவர்களில் யாரோ ஒருவர் கண்டிப்பாக வெளியேற்றப்படுவார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதால் இதில் சிறப்பாக பங்காற்றி அடுத்த வாரத்தில் எலிமினேஷன் இடம்பெறாமல் அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியும்.
ஏற்கனவே பிக் பாஸின் டாஸ்க்குகள் அதிகம் இல்லாமல் கொஞ்சம் போராக போவதாக நேயர்கள் கருதி வரும் நிலையில் இந்த வாரத்தில் எலிமினேஷனும் இல்லாதததால் இன்னும் சுமாராகவே சென்றுகொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.