Connect with us

நான் சினிமாவை விட்டு போக என் மனைவிதான் காரணம்!.. விக்ரமனிற்கு நடந்த மனதை உருக்கும் கதை…

director vikraman

Cinema History

நான் சினிமாவை விட்டு போக என் மனைவிதான் காரணம்!.. விக்ரமனிற்கு நடந்த மனதை உருக்கும் கதை…

Social Media Bar

தமிழ் சினிமாவில் குடும்ப திரைப்படங்கள் எடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் விக்ரமன். இப்போது லோகேஷ் கனகராஜ் உள்ளது போலவே அப்பொழுது தோல்வியே காணாத ஒரு இயக்குனராக இருந்தவர் விக்ரமன்.

அவர் இயக்கும் குடும்ப திரைப்படங்கள் அனைத்தும் பலமுறை பார்த்தாலும் அழுக்காது என்கிற அளவில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்த திரைப்படங்கள். அவற்றில் வானத்தைப்போல, சூர்யவம்சம் போன்ற திரைப்படங்கள் இப்போது தொலைக்காட்சிகளில் போட்டாலும் பார்ப்பதற்கு ரசிகர் கூட்டம் இருப்பதை பார்க்க முடிகிறது.

ஆனால் அப்படிப்பட்ட விக்ரமன் எதற்கு சினிமாவை விட்டு திடீரெனப் போனார் என்கிற விஷயம் பலருக்கும் தெரியாததாக இருந்தது. இந்த நிலையில் ஒரு பேட்டியில் விக்ரமன் கூறும்போது எனது மனைவியுடன் பல வருடம் நட்பாக இருந்த பிறகு அவரை நான் திருமணம் செய்தேன்.

எங்கள் இருவருக்குள்ளும் அப்படி ஒரு நெருக்கம் உண்டு. ஆனால் சில காலங்களுக்கு முன்பு அவர் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டு உடல்நிலை மோசமானது. அதனை அடுத்து அவரை பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது.

எனவே மனைவியை விட சினிமா முக்கியமா என்று யோசித்து சினிமாவை விட்டுவிட்டு மனைவிக்காக தற்சமயம் வீட்டிலேயே இருந்து வருகிறேன். என் மனைவியை பார்த்துக் கொள்வதுதான் தற்சமயம் எனது முழு நேர வேலையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

To Top