sj surya vijay

இன்னைல இருந்து நான் உங்களுக்கு ரசிகன்!.. எஸ்.ஜே சூர்யாவை பார்த்து வியந்து போன விஜய்!..

Cinema History News Tamil Cinema News

1992 இல் வந்த நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் விஜய். அதன் பிறகு தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அதில் பூவே உனக்காக திரைப்படம் அவருக்கு ஒரு மாற்றமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து காதல் திரைப்படங்களில் அதிகமாக நடிக்க துவங்கினார் விஜய். தற்சமயம் ஆக்ஷன் ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தமிழில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார்.

1999 காலகட்டம் விஜய்க்கு கொஞ்சம் மோசமான காலகட்டமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் அவர் நடித்த பிரியமுடன், நெஞ்சினிலே, கண்ணுக்குள் நிலவு போன்ற திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை இந்த நிலையில் விஜய் மீண்டும் தமிழ் சினிமாவில் வரவேற்பு பெறுவதற்கு உதவிய திரைப்படம் குஷி.

இந்த திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் எஸ்.ஜே சூர்யா. இதனால் எஸ்.ஜே சூர்யாவிற்கும் விஜய்க்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. பல வருடங்களாக இந்த நட்பு நீடித்தும் வருகிறது. இதற்கு நடுவே சில காலங்களுக்கு பிறகு எஸ்.ஜே சூர்யா படம் இயக்குவதை விட்டுவிட்டு படங்களில் நடிக்க துவங்கினார்.

அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்படி அவர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த திரைப்படம் தான் நெஞ்சம் மறப்பதில்லை இந்த திரைப்படத்தை பார்த்த விஜய் உடனே எஸ்.ஜே சூர்யாவிற்கு ஃபோன் செய்துள்ளார்.

போன் செய்து சிறப்பாக நீங்கள் நடித்துள்ளீர்கள் இந்த படத்தை பார்த்தது முதல் உங்களுக்கு நான் ரசிகனாகிட்டேன் என்று விஜய்க்கு கூறியுள்ளார் இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார் எஸ்.ஜே சூர்யா.